Pages

வெள்ளி, பிப்ரவரி 18, 2011

தி.மு.க - பா.ம.க கூட்டணி: அவமானப்படும் அதிக்க சாதிவெறியர்களும் அவர்களது பத்திரிகைகளும்!

"திரிசங்கு நிலையில் பாமக."


"பாமக'வை  திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுமே புறக்கணிக்கும். எந்தக் கட்சியும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளாது."


"தி.மு.க பக்கம் போனால் 22 இடம், அதிமுக பக்கம் போனால் 26 இடம் கிடைத்தாலும் கிடைக்கும்"


- என்றெல்லாம் அதிக்க சாதிவெறியர்களும் அவர்களது பத்திரிகைகளும் தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர்.


ஆனால், இப்போது திமுக பாமக இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.


பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதோடு ஒரு நாடாளுமன்ற மேலவை இடமும் அளிக்கப்பட்டுள்ளது.


இந்த தேர்தலில், திமுக கூட்டணியில் இதுதான் முதல் கூட்டணி அறிவிப்பு. தமிழக அரசியலில் இதுதான் முதல் பெரிய அளவிலான உடன்படிக்கையும் கூட.


பாமகவை அவமானப்படுத்திய அதிக்க சாதிவெறியர்களும் அவர்களது பத்திரிகைகளும் இப்போது அவர்களது முகத்தை எங்கே வைத்து ஒடி ஒளியப்போகிறார்கள்?

புதன், பிப்ரவரி 16, 2011

டோண்டுவின் வேடிக்கை ஆய்வு: பார்ப்பனர்கள் சோம்பேறிகளா?

எதிர்வரும் தேர்தலில் வன்னியர்கள், முக்குலத்தோர், நாடார்கள், தலித் பிரிவினர், மீனவர் போன்றோரில் எந்த ஒரு வகுப்பினராவது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஒட்டுமொத்தமாக வாக்களிப்பார்கள் என்று கூறமுடியுமா? கட்டாயம் உறுதிபடுத்த முடியாது.

அதே நேரத்தில் - பார்ப்பனர்கள் அனைவரும் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது இப்போதே எல்லோருக்கும் தெரியும். அவர்கள் அனைவரும் செயலலிதாவுக்கே வாக்களிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

பார்ப்பனர்கள் எண்ணிக்கையில் சிறிய கூட்டமாக இருந்தாலும் அவர்கள் பொது விடயங்களில் ஒத்த சிந்தனையுடன் இருப்பது வியப்பளிக்கக் கூடியது. அவர்கள் அவ்வாறு இருப்பதிலும் குற்றம் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால், அந்த ஒத்த சிந்தனை என்பது எப்போதும் பெரும்பான்மை மக்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்பதே கண்டனத்திற்குரியது.

பார்ப்பனர்களின் சுயநல வெறியுடன் கூடிய 'ஒருமித்த சிந்தனை' இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடைக்கல்லாக இருந்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் - வி.பி. சிங் அவர்கள் மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த முயன்ற போதும், மன்மோகன் சிங் அரசு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த முயன்ற போதும் - பார்ப்பனர்கள் கூட்டு எதிர்ப்பைக் காட்டி முட்டுக்கட்டை போட்டதைக் கூறலாம்.

அதாவது, பெரும்பான்மை BC/MBC/SC/ST மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கக் கூடிய ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பார்ப்பனர்கள் எப்போதும் தடைக்கல்லாகவே இருந்து வருகின்றனர். இதனால், நாட்டின் நலனும் முன்னேற்றமும் தடைப்படுகிறது. இதனை சுட்டிக்காட்டும் விதமாக நான் ஒருசில வலைப்பூக்களில் பின்னூட்டம் இடுவது உண்டு.

வலைப்பூவுலகின் 'சோ' என்று கருதப்படும் டோண்டு அவர்களின் பக்கத்திலும் அவ்வாறே பின்னூட்டமிட்டேன். அப்போதெல்லாம் தீவிர பார்ப்பன கூட்டத்தினர் எதிர்த்து கருத்து கூறிவந்தனர். ஒருகட்டத்தில் என்னை அவர்களாக அழைத்து எதிர்கருத்து சொல் என்பதாகக் கேட்டனர்.

நான் பார்ப்பனர்களைக் குறித்து பேசினால் - அவர்கள் வன்னியர்களைக் குற்றம்சாட்டி பேசினர். அதற்கு:

""எல்லா சமூகங்களில்ம் குற்றவாளிகள் இருப்பது போல - வன்னியரிலும் குற்றம் செய்வோர் இருக்கலாம். ஆனால், ஒரு இனத்தை அழிப்பதே நோக்கமாக வாழும் கூட்டம் பார்ப்பனர் மட்டுமே. பார்ப்பன கொடுங்கோன்மைக்கு உலகில் ஈடு சொல்ல எதுவுமே இல்லை.


வரலாற்று காலத்திலிருந்து பார்ப்பனக் கொடுமைக்கு ஈடு இணை கிடையாது.  நந்தனாரைக் கொளுத்தியது, சம்புகன் தலையை வெட்டியது, ஏகலைவன் விரலை துண்டாடியது, நல்ல மாமன்னன் மாவலியை கொன்றது - என்று பார்ப்பன கூட்டத்தின் சதிகளும் கொடூரங்களும் காலம் காலமாக தொடர்கின்றன.


இப்போதும், கொடுங்கோலன் ராசபட்சேவுடன் சேர்ந்து - 40000 தமிழர்களை ஒரே வாரத்தில் கொன்ற கொடுமைக்கு ஈடு இணை உலகில் உண்டா?""

--என்றும்

""குற்ற செயல்கள் குறித்த ஆவணங்களின் படி - வன்கொடுமை செய்வதில் எல்லா சாதி ஆண்களும் உண்டு, பாதிக்கப்படுவதில் எல்லா சாதி பெண்களும் உண்டு.  இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் மாநிலம் மத்திய பிரதேசம் - அங்கு வன்னியர் எவரும் இல்லை.


பார்ப்பனர்களின் காமவெறி வரலாற்று சிறப்புடையது. கேரளத்து பார்ப்பனர்கள் நாயர் பெண்களை திருமணத்துக்கு முன்பு புணர்வதை தமது உரிமையாகக் கொண்டிருந்தனர்.  தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் சிறுமிகளை கடவுளுக்கு மணமுடித்து (தேவரடியாராக்கி) தங்களுக்குள் முறைவைத்து அனுபவித்தனர்.  இப்போதும் 'பெரிய மூங்கில்' சங்கராச்சாரியும் காஞ்சிபுரம் தேவநாதனும் செய்தவை நாடறியும்.


"இந்திரனுடைய ப்ரம்மஹத்தி தோஷத்தின் ஒரு பங்கை ஏற்றுக் கொண்டதின் அடையாளம் தான், பெண்கள் மாதவிலக்கு அடைவது" என்று ஒட்டுமொத்த இந்திய பெண்களையே இழிவுபடுத்தும் கூட்டம் தான் பார்ப்பனக்கூட்டம்.


''ஸீத்ருகொ மதனாவஸம் ப்ரஜபேன்மனும்;
அயுதம் ஸோசிராதேவ வாக்பதே; ஸமதாமியாத்" 


- மனுதர்மம்


'க்ருஹஸ்னேஹ வபத்தனம் நரனம் அல்பமேதஸம்
குஸ்திரீ கடாத்தி மம்ஸனி மகாமஸே கவம் இவா" 


- கீதை"" என்றும் கூறினேன்


உடனே வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்பது குறித்து வினா எழுப்பினர்.


அதற்கு நான்

""வன்னியர்கள் கேட்கும் இடஒதுக்கீடு என்பது மக்கள் தொகைக்கேற்ப விகாதாச்சார பங்கீடு. 


அதாவது, சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மக்கள் தொகை விழுக்காட்டைக் கணக்கிட்டு, மக்கள் தொகை எத்தனை விழுக்காடோ, அத்தனை விழுக்காடு இடஒதுக்கீடு கேட்கிறார்கள்.  இதில் அதிகமாக கேட்கிறார்கள் என்கிற பேச்சுக்கே இடமில்லை."" என்றும் கூறினேன். 


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திருவாளர் டோண்டு:

""100 விழுக்காடுகளை சாதிக்கேற்ப பிரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை, தியரிட்டிகலாகக் கூட.  அர்சியல் நிர்ணயச் சட்டத்தில் தலித்துகளுக்கு முதலில் இட ஒதுக்கீடு கொடுத்ததே அவர்கள் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டவர்கள் என்பதாலேதான், அதுவும் பார்லிமெண்டு சட்டசபை இடங்களுக்கு மட்டும் 


பத்தாண்டுகளுக்கு கொண்டு வந்தது, இப்போது தலித்துகளை வன்கொடுமை செய்தவர்களும் அதை அதிகாரப் பிச்சையாகக் கேட்பது நடந்து வருகிறது. மருத்துவரின் பேத்திகளுக்கும் இட ஒதுக்கீடு என்ற கேலிக்கூத்துக்கு ஆளாகி நிற்கிறது.  ஆகவே வன்னியக் கும்பல்கள் செய்வது கேவலமான காரியம்தான். "" என்றார்.


அதற்கு நான்

""டோண்டு ராகவன் அவர்களே, ஆள் மட்டும் வளர்ந்தால் போதாது. அறிவும் வளரனும் என்பார்கள். ஒரு விடயத்தைக் குறித்து பேசுவதற்கு முன்பு அது குறித்த அடிப்படைகளை அறிந்து கொள்ள முயல்வதே பெரிய மனிதருக்கு அழகு.


1. இந்திய அரசால் பிற்படுத்தப்பட்ட மக்கள் மூன்று பிரிவினராக வரிசைப் படுத்தப்பட்டனர். 1. பட்டியல் இனத்தவர், 2. பழங்குடி இனத்தவர், 3. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். (OBC எனப்படுவதன் பின்னணி இதுவே)


2. பத்தாண்டுகளுக்கு இடஒதுக்கீடு என்பது சட்டமன்ற/நாடாளுமன்ற இடங்களுக்குதான். மற்ற இடஒதுக்கீடுகளுக்கு கால எல்லை எதுவும் இல்லை.


3. அரசியல் அமைப்பின் 340 ஆம் பிரிவு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வழி செய்கிறது.


340. Appointment of a Commission to investigate the conditions of backward classes


(1) The President may by order appoint a Commission consisting of such persons as he thinks fit to investigate the conditions of socially and educationally backward classes within the territory of India and the difficulties under which they labour and to make recommendations as to the steps that should be taken by the Union or any State to remove such difficulties and to improve their condition and as to the grants that should be made for the purpose by the Union or any State the conditions subject to which such grants should be made, and the order appointing such Commission shall define the procedure to be followed by the Commission


(2) A Commission so appointed shall investigate the matters referred to them and present to the President a report setting out the facts as found by them and making such recommendations as they think proper.""

மேலும்

""1. ஏற்கனவே, இசுலாமியர்களுக்கு தனி ஒதுக்கீடு, அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே, சாதிகளுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பது நடைமுறை சாத்தியமானதே. 


2. அனைத்து சாதிகளையும் அவரவர் சமூக, கல்வி, பொருளாதார நிலைக்கு ஏற்ப தொகுப்புகளாக பிரிக்க முடியும். ஒவ்வொரு தொகுப்பினரின் மக்கள்தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்க முடியும். அதனையும் கூட பெரிய சாதிகளின் விழுக்காட்டிற்கு ஏற்ப உள் ஒதுக்கீடாக பிரித்து அளிக்க முடியும். 


3. ஏற்கனவே, 69% இடஒதுக்கீடு உள்ளதை 100% விழுக்காடாக மாற்றுவது முற்றிலும் சாத்தியமானதே."" என்றேன். 


அதற்கு திருவாளர் டோண்டு:

""திறமை என ஒன்று இருப்பதை யாருமே ஏற்க மாட்டேன் என்கிறீர்கள். உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு பல கேசுகள் உள்ளன, அல்லது பல ஆப்பரேஷன்கள் செய்ய வேண்டியுள்ளன, அல்லது வேறு ஏதாவது சேவைக்கு தேவை ஏற்படுகிறது.  நீங்கள் உங்களுக்கு சேவை அளிப்பவரை இட ஒதுக்கீடு முறையில் தேர்ந்தெடுத்து அவர்கள் எல்லோருக்கும் வேலைகளை பங்களித்து விடுவீர்களா அல்லது திறமையானவரைத் தேர்ந்தெடுப்பீர்களா? 


இம்மாதிரி 100% ஒதுக்கீடு உலகில் எந்த நாட்டிலும் இருப்பதாக நான் அறியவில்லை.  நீங்கள் சொன்ன மூன்று பிரிவினரில் தலித்துகள் பழங்குடியினர் மட்டும் முதலில் இருந்தே உள்ளனர். மற்றவர்கள் இந்த மண்டல் குழப்பத்தால் வந்தது. கிரீமி லேயரையும் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். நீங்கள் எல்லாம் நியாயஸ்தர்கள் எனச் சொல்லிக் கொள்கிறீர்கள்.  கேவலமான பிழைப்பு பிழைக்கிறீர்கள். உம்மைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது."" என்றார்.


அதற்கு நான்:

""டோண்டு ராகவன் அவர்களே,  "இடஒதுக்கீடு 50% அளவை தாண்டக்கூடாது" என்பதும் "கிரீமி லேயர்" என்பதும் பார்ப்பன - ஆதிக்க சாதிக்கூட்டத்தைச் சேர்ந்த நீதிபதிகள் "தமக்குத்தாமே" கண்டுபிடித்த சதித்தீர்ப்புகள். இந்த தீர்ப்புகள் புதிய சட்ட திருத்தத்தின் மூலம் தூக்கி எறியப்படும் காலம் வரும்.


இடஒதுக்கீடு என்பது திறமைக்கு எதிரானது அல்ல. அவ்வாறு கூறுவது சுத்த அயோக்கியத்தனம். பள்ளி, கல்லூரிகளில் தேர்ச்சியடைய பார்ர்ப்பானுக்கு ஒரு மதிப்பெண் மற்றவர்களுக்கு வேறொரு மதிப்பெண் என்று இல்லை.


மற்றபடி, கேவலமான பிழைப்பு பிழைக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. வன்னியர்கள் காலம் காலமாக உழைக்கும் பரம்பரையினர். பார்ப்பனர்களைப் போன்று அடுத்தவர் உழைப்பில் வாழ்ந்த 'உஞ்சவிருத்தி' கூட்டம் அல்ல"" என்று கூறினேன்

இவ்வாறு, "வன்னியக் கும்பல்கள் செய்வது கேவலமான காரியம்" என்றும், "கேவலமான பிழைப்பு பிழைக்கிறீர்கள்.  உம்மைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது" என்றும் திருவாளர் டோண்டு கூறியதால் - பார்ப்பனர்கள் ஒரு 'உஞ்சவிருத்தி' கூட்டம் - என்கிற வரலாற்று உண்மையைக் கூறினேன்.

இந்தக் கூத்திற்காக "பிராமணர்கள் சோம்பேறிகளா, ஒரு ஆய்வு" என்று ஒரு பதிவு போட்டுள்ளார் டோண்டு.

வேடிக்கைதான் போங்கள்.

வெள்ளி, டிசம்பர் 10, 2010

'டாக்டர்' விஜயகாந்த் - பணம் கொடுத்து வாங்கிய பட்டம்?

"பணம் கொடுத்து திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் வாங்கினாரா?" என்று சந்தேகிக்க இடமான தகவல்கள் இப்போது தெரியவந்துள்ளன.

இணையத்தின் மூலம் கிறித்தவ மதத்தை பரப்புவதற்கான ஒரு அமைப்பான "பன்னாட்டு கிறித் தேவாலய மேலாண்மை நிறுவனம் - ..சி.எம்" (International Institute of Church Management Inc.) திரு. விஜயகாந்த் அவர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்துள்ளது.

நமது ஊரில் ஆங்காங்கே உள்ள "இயேசு அழைக்கிறார்" என்கிற மதத்தைப் பரப்பும் அமைப்புகள் போன்றதுதான் ..சி.எம். அது ஒரு பொதுவான கல்விநிலையமோ, பல்கலைக்கழகமோ அல்ல. அதாவது - முழுக்க முழுக்க மத பிரச்சாரம் செய்வதற்கான ஒரு அமைப்பிடம் திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் - என்று நான் எனது  "விஜயகாந்த் ஒரு கிறித்தவ மதபோதகரா? டாக்டர் பட்டத்தின் அதிர்ச்சியளிக்கும் பின்னணி!"  எனும் பதிவில் எழுதியிருந்தேன்.

தற்போது இதுகுறித்து மேலும் கிடைக்கும் விவரங்கள் வியப்பளிக்கின்றன.

பணத்திற்கு 'டாக்டர்' பட்டம்.

..சி.எம் இணயதளத்தில், இந்த மதப்பிரச்சார அமைப்பிடம் 'டாக்டர்' பட்டம் பெற விரும்புவோர் "ஒரு குறிப்பிட்ட அளவு நன்கொடை அளிக்க வேண்டும்" என்றும், இதனுடன் கூடுதலாக "வாழ்நாள் உறுப்பினராக ரூ. 1000 கட்டணம் செலுத்த வேண்டும்" வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளனர். (the Honorary Doctoral Degrees...will be conferred upon the candidate,...after the candidates give a certain minimum contribution, towards the Honorary Doctoral Degree and a one-time contribution of the Life-Time Membership )
இங்கே காண்க: http://www.iicmweb.org/hon.htm

ஆக, பணத்திற்கு 'டாக்டர்' பட்டம் அளிக்கப்படலாம் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

அமெரிக்க பல்கலைக்கழக பட்டம் அல்ல.

"அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் ..சி.எம் பல்கலைக்கழகம் வழங்கும் டாக்டர் பட்டம்" என்று 3.12.2010 அன்று பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்திருந்தனர். ஆனால், இதுவும் கூட உண்மை அல்ல.

அமெரிக்காவில்  ..சி.எம் என்பது பல்கலைக் கழகமாகவோ, கல்வி அமைப்பாகவோ பதிவுசெய்யப்படவும் இல்லை, இயங்கவும் இல்லைசென்னை நகரில்தான் அது ஒரு 'கல்வி அறக்கட்டளை' (Educational Trust) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது

கூடவே, டாக்டர் பட்டம் பெற வேண்டுமானால், அதற்கு  செலுத்த வேண்டிய ரூ. 1000 வாழ்நாள் உறுப்பினர் கட்டணத்தையே - ..சி.எம் கல்வி அறக்கட்டளை, 240 ரூபி டவர், வேளச்சேரி முதன்மைச் சாலை, சேலையூர், சென்னை - 73 எனும் முகவரிக்குதான் அனுப்பக் கூறியுள்ளனர்.

ஆக, இந்திய கல்வி அறக்கட்டளை ஒன்றிடம் பட்டம் "வாங்கி" - அதனை 'அமெரிக்க பல்கலைக்கழகத்திடம் வாங்கியதாக' பெருமை பேசுவது வியப்பாக இருக்கிறது!

திரு. பண்ருட்டி ராமச்சந்திரன் புகழாரம்:

தமிழ்நாட்டின் உயர்ந்த பதவிகளை அலங்கரித்த பண்ருட்டி திரு. ராமச்சந்திரன் அவர்களின் கருத்து இதோ

"அரசியலில் ஈடுபட்டு ஆட்சிக்கு வந்து அதற்குப் பிறகு டாக்டர் பட்டம் பெற்றவர்கள் நம்மிடையே உண்டு. ஆனால், எதிர்க்கட்சியாக இயங்குகிற பொழுதே, மனிதநேயப் பணிக்காக டாக்டர் பட்டம் பெறுவது என்பது கிடைத்தற்கரிய பேறாகும். அதுவும் கடல் கடந்த நாடான அமெரிக்காவில் இருந்து புளோரிடா மாகாணத்தைச் சேர்ந் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் என்ற அமைப்பினர் நமது இதய தெய்வம் புரட்சிக்கலைஞர் கேப்டன் அவர்களின் மனிதநேய தொண்டினை உணர்ந்து அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவது அவருக்கு மட்டுமல்ல நமது இயக்கத்துக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கே பெருமை"

தமிழ்நாட்டிற்கே பெருமையாம் - இது எப்படி இருக்கு!!!

செவ்வாய், டிசம்பர் 07, 2010

விஜயகாந்த் ஒரு கிறித்தவ மதபோதகரா? டாக்டர் பட்டத்தின் அதிர்ச்சியளிக்கும் பின்னணி!

"விஜயகாந்த் இனி 'புரட்சிக்கலைஞர் டாக்டர் விஜயகாந்த்'.  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஐ.ஐ.சி.எம். பலகலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியிள்ளது." - இது பத்திரிகை செய்தி.

நடிகர் - அரசியல்வாதியான திரு. விஜயகாந்த் அவர்கள் டாக்டர் பட்டம் வாங்குவதில் குறைசொல்ல எதுவும் இல்லை. அது வரவேற்க வேண்டியதுதான்.

அதேசமயம், நாட்டின் புகழ்பெற்ற முன்னணி பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்குவது நாம் அறிந்தது. கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பலரும் இப்படி டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். இப்போது, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் கூட டாக்டர் பட்டம் தருகின்றன. கமலஹாசன், நடிகர் விஜய் போன்றோர் இப்படி டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.

ஆனால், இவ்வாறெல்லாம் இல்லாமல் - அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஐ.ஐ.சி.எம். பலகலைக்கழகத்தில் திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

அது என்ன - ஐ.ஐ.சி.எம்?

பன்னாட்டு கிறித்துவ தேவாலய மேலாண்மை நிறுவனம் (International Institute of Church Management Inc.) என்பதுதான்"ஐ.ஐ.சி.எம்" ஆகும். இது இணையத்தின் மூலம் கிறித்துவ மதத்தை பரப்புவதற்கான ஒரு அமைப்பு. நமது ஊரில் ஆங்காங்கே உள்ள "இயேசு அழைக்கிறார்" என்கிற மதத்தைப் பரப்பும் அமைப்புகள் போன்றதுதான் அது. அது ஒரு பொதுவான கல்விநிலையமோ, பல்கலைக்கழகமோ அல்ல.

அதாவது - முழுக்க முழுக்க மத பிரச்சாரம் செய்வதற்கான ஒரு அமைப்பிடம் திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

அதிலும் அந்த அமைப்பு "டாக்டர் பட்டம்" அளிக்க வைத்திருக்கும் நிபந்தனைகளை பார்த்தால் - திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றது விந்தையாக இருக்கிறது.

கிறித்தவ மதம் தொடர்பான "Biblical Studies, Church Management, Christian Leadership, Ministry" ஆகிய துறைகளில் அனுபவம் உள்ளவர்கள் தங்களது "பயோ - டேட்டாவை" அனுப்பினால் "டாக்டர் பட்டம்" கிடைக்குமாம். ஆக, பைபிள் படிப்பு, தேவாலய நிருவாகம், கிறித்துவ தலைமைத்துவம், கிறித்துவ இறைப்பணி இதிலெல்லாம் திரு. விஜயகாந்த் எப்போது நிபுணத்துவம் பெற்றார் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

இப்படிதான் முன்பு ஐ.நா. அவையின் பேரைச்சொல்லி - இல்லாத ஒரு பன்னாட்டு அமைப்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு "தங்கத்தாரகை விருது" கொடுத்தது. இப்போது - ஒரு மதப் பிரச்சார அமைப்பு பல்கலைக்கழகத்தின் பெயரால் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு "டாக்டர் பட்டம்" அளிக்கிறது.

இப்படி செல்வி. ஜெயலலிதா, திரு. விஜயகாந்த் போன்று உயர்ந்த இடத்தில் இருப்பவர்களே, எளிதில் ஏமாறுவது அதிர்ச்சியளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு பின்வரும் இணையதளத்தை காண்க.

http://www.iicmweb.org/

ஐ.ஐ.சி.எம் நிறுவனத்தின் நோக்கங்கள் இதோ:

OBJECTIVES OF IICM

To provide Continuing Education for Pastors, Evangelists, Bible Teachers and Christian Leaders;

To Equip Professionals, Businessmen/Women & Lay Leaders for Ministry.

To Teach the Word of God, topically in a Simple and Practical Way to make it Easy to Understand and Apply it, both in their Lives and Ministries

To help understand the importance of using Management Skills and Modern Technologies of Communication to Maximize Results in the Ministry

To impart Revelation Knowledge of the Word of God and the Anointing of the Holy Spirit

To facilitate Spiritual, Leadership and Church Growth and Development

To help being Effective and Successful in Life and Ministry in terms of achieving Goals and realizing Full Potential

To help Discover and Fulfill God's Will & Purpose!

சனி, டிசம்பர் 04, 2010

"மகிழ்ச்சி" திரைப்பட விமர்சனங்கள்


"திரைப்படம் வெளியான அன்றே வந்து குவியும் வலையுலகப் பதிவுகள் கூட மகிழ்ச்சி திரைப்படத்தைக் கண்டுகொள்ளாதது மகிழ்ச்சியான ஒன்றாக இல்லை" என்று தலைமுறைகள் - நீல.பத்மநாபன் எனும் பதிவில் செ. சரவணக்குமார் பக்கங்களில் கூறப்பட்டிருந்தது. அது உண்மைதான்.

அந்தக் குறையை போக்க, மகிழ்ச்சி திரைப்பட விமர்சனங்கள் இதோ: 


மகிழ்ச்சி-விமர்சனம் “மகிழ்ச்சியே”


http://narumugai.com/?p=18540

"நமக்கு நெருக்கமானவர்களின் பின் மண்டையில் செல்லமாக தட்டி, “போய் மொதல்ல படத்தை பாரு” என்று சொல்லலாம்! ஏனென்றால் ‘மகிழ்ச்சி’யால் நாமும், நமது உறவுகளும் நிறைய வேண்டிய நேரமிது!" - நறுமுகை விமர்சனம். 


http://www.manisenthil.com/2010/11/blog-post_19.html

"மகிழ்ச்சி போன்ற படங்கள் வெற்றி பெறுவதன் மூலம் தமிழ் திரை உலகம் புதிய வெளிச்சங்களை தன் மீது பாய்ச்சிக் கொள்ள வழிப்பிறக்கும் என்பது எனது ஆழமான நம்பிக்கை. உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி போன்ற தமிழர் வாழ்வியலை முன் வைக்கும் தமிழுணர்வு மிக்க படைப்பாளர்களின் திரைப்படங்களை கொண்டாட வேண்டும் ."   - மணி செந்தில் விமர்சனம்.

மகிழ்ச்சி விமர்சனம்

http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW/2010/magizhchi.asp

"நமக்கு நெருக்கமானவர்களின் பின் மண்டையில் செல்லமாக தட்டி, "போய் மொதல்ல படத்தை பாரு" என்று சொல்லலாம்! ஏனென்றால் 'மகிழ்ச்சி'யால் நாமும், நமது உறவுகளும் நிறைய வேண்டிய நேரமிது!" -ஆர்.எஸ்.அந்தணன் விமர்சனம்.

மகிழ்ச்சிக்காக மகிழ்ச்சியாக விமர்சனம் எழுதிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

அரசாங்கமே சட்டத்தை மதிக்காத அவலம்: சட்டம் உண்டு - புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை படம் இல்லை

2010 டிசம்பர் 1 ஆம் தேதி முதல் புகையிலை பொருட்கள் மீது புதிய எச்சரிக்கை படத்தை வெளியிட வேண்டும் என்கிற விதியை நாட்டின் ஒரு இடத்திலும் அரசு செயல்படுத்தவில்லை. அதாவது, சட்டப்படி அரசு உத்தரவு செல்லும். ஆனால், ஒரு இடத்திலும் அது செயல்பாட்டில் இல்லை.

சிகரெட், பீடி, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால், இந்தியாவில் ஆண்டுக்கு பத்து லட்சம் பேர் உரிய வயதாகும் முன்பே இறந்துபோகின்றனர். புகையிலை தீமையை கட்டுப்படுத்தும் நோக்கில் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் நடுவண் நலவாழ்வுத் துறை அமைச்சராக இருந்தபோது பல உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில், புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கைப் படங்களை வெளியிட வேண்டும் என்கிற விதிமுறை முக்கியமானதாகும். கூடவே, ஒவ்வொரு ஆண்டும் எச்சரிக்கைப் படங்களை கட்டாயமாக மாற்ற வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டிருந்தார்.

இது இந்திய அரசு கையொப்பமிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் புகையிலை கட்டுப்பாடு ஒப்பந்தத்தின் படியும் (WHO - FCTC), இந்திய புகையிலை கட்டுப்பாடு சட்டப்படியும் (COTPA 2003) கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும்.

இதன்படி புகையிலைப் பொருட்களின் மீது எச்சரிக்கை படங்களை வெளியிடும் முறை 31.5.2009 முதல் நாடெங்கும் செயல்பாட்டுக்கு வந்தது. நுரையீரல் பகுதியின் எக்ஸ்ரே மற்றும் தேள் ஆகியன எச்சரிக்கைப் படங்களாக வெளியிடப்பட்டன.

31.5.2009 முதல் இடம்பெற்ற படங்கள்
இந்தப் படங்களுக்கு மாற்றாக புதிய படங்கள் 1.6.2010 முதல் இடம்பெற வேண்டும் என்பது விதியாகும். எனவே, புதிதாக 'வாய்ப்புற்றுநோய்' படத்தை அச்சிட வேண்டும் என 5.3.2010 இல் நடுவண் நலவாழ்வுத்துறை உத்தரவிட்டது (அரசாணை எண்: GSR 176).

ஆனால், கால அவகாசம் போதாது என்று புகையிலை நிறுவனங்கள் கோரியதால் 1.6.2010 ஆம் நாளுக்குப் பதிலாக 1.12.2010 முதல் புதிய படத்தை புகையிலை வெளியிட வேண்டும் என அரசு உத்தரவிட்டது (அரசாணை எண்: GSR 411, நாள் 17.5.2010)

1.12.2010 முதல் இடம்பெறவேண்டிய படம்


இந்த உத்தரவை மீறி, புதிய எச்சரிக்கைப் படம் இல்லாது 1.12.2010 முதல் புகையிலைப் பொருட்கள் விற்கப்பட்டால் - ரூ. 5000 தண்டம் மற்றும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்கிறது இந்திய அரசின் புகையிலை கட்டுப்பாடு சட்டம்.

ஆனால், இந்தியாவின் ஒரே ஒரு இடத்தில் கூட இந்த சட்டம் பின்பற்றப் படவில்லை.

2.12.2010 அன்று சென்னையில் வாங்கப்பட்ட புகையிலைப் பொருட்கள் (ஒன்றில் கூட புதிய படம் இல்லை)

சட்டத்தை செயல்படுத்துவதற்கு பதிலாக, அரசின் உத்தரவு தெளிவாக இல்லை என்று கூறி, ITC , GPI ஆகிய இந்திய சிகரெட் நிறுவனங்கள் டிசம்பர் 1 முதல் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஒன்பது மாதங்களுக்கு முன்பு 5.3.2010 அன்றே புதிய படத்தின் CDயை  இந்திய அரசு வெளியிட்டது. இதனை 1.12.2010 முதல் கட்டாயமாக வெளியிட வேண்டும் என்று ஆறு மாதங்களுக்கு முன்பு 17.5.2010லேயே அரசு தெளிவாக உத்தரவிட்டது. ஆனாலும், இதுகுறித்து குழப்பம் நிலவுவதாக சிகரெட் நிறுவனங்கள் பசப்புகின்றன.

சிகரெட் நிறுவனங்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து - அரசு இந்த உத்தரவை பின்வாங்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாள்தோரும் 2500 பேர் புகையிலைப் பொருட்களால் முன்கூட்டியே செத்துப்போகும் கொடுமையை விட, ஒரு சில சிகரெட் - குட்கா நிறுவனங்களின் இலாப வெறி அரசுக்கு முக்கியமாகப் போய்விட்டது.

வாழ்க சனநாயகம்!

புதன், டிசம்பர் 01, 2010

சாதி அரசியல் தவறானதா?    பகுதி 2

இந்திய அரசியல் வளர்ச்சியில் சாதியின் பங்கு

சமூகம் ஒருநிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது, பழையன கழிதலும் புதியன புகுதலும் வழக்கம். ஆனால், இந்திய சமூகத்தில் 'ஒன்றை அழித்து மற்றொன்று தோன்றுவதற்கு' பதிலாக - இருக்கும் ஒன்றே வேறொரு வடிவம் எடுக்கிறது. இதற்கு சான்றாக இருப்பது சாதி.

விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் வாழ்ந்த தலைவர்கள் பலருக்கு சுதந்திர இந்திய நாட்டில் சாதி இருக்காது என்கிற நம்பிக்கை இருந்தது - அல்லது அவ்வாறு நம்பவைக்க முயற்சி நடந்தது. அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியாரை தவிர வேறு எவரும் இதனை கேள்விக்குள்ளாக்கவில்லை.

இந்திய நாடு அரசியல் விடுதலை அடைந்த போது நாடு சிதறுண்டு போகும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். இந்தியா ஒரு ஒற்றை நாடாக, சனநாயக நாடாக நீடித்திருக்கும் என்று நம்பப்படவில்லை. "இந்திய நாடு மிகக்கேடடைந்து பல நூற்றாண்டுகள் பின்னோக்கி போய்விடும். கற்காலத்தின் காட்டுமிராண்டித்தனம்தான் எஞ்சி நிற்கும்" என்று எச்சரித்தார் வின்சென்ட் சர்ச்சில். அதாவது, கல்வி அறிவற்ற இந்திய மக்கள் சனநாயக அரசியலை புரிந்து, ஏற்று நடக்க மாட்டார்கள் எனக்கருதப்பட்டது.

ஆனால், இதனை மாற்றி சனநாயக அரசியலை வளர்த்தெடுப்பதில் சாதி அமைப்புகள் முக்கிய பங்காற்றின.

மேலை நாடுகள் சனநாயக அரசியல் முறையை ஏற்றபோது, அங்கெல்லாம் மக்கள் அமைப்புகள், தன்னார்வ குழுக்கள் உருவாகி - மக்களை சனநாயக அரசியல் அமைப்பில் பங்கெடுக்கச்செய்தன. ஆனால், இந்தியாவில் அப்படியெல்லாம் பொதுவான அமைப்புகள் எதுவும் பெரிதளவில் காணப்படவில்லை. இந்தநிலையில், படிப்பறிவற்ற ஏழை எளிய மக்கள் கூட புதிய அரசியல் சூழலை புரிந்துகொள்ள வழிவகுத்தவை சாதி சங்கங்கள்தான்.

இதுகுறித்து விரிவாக ஆராய்ந்துள்ள Lloyd L Rudolph மற்றும் Susanne Hoeber Rudolph எனும் அறிஞர்கள், இவர்களது 1960 ஆம் ஆண்டின் "The Political Role of India's Caste Associations" எனும் ஆய்வுக்கட்டுரையில் "இந்திய கிராமங்களுக்கு சனநாயக அரசியலை எடுத்துச் சென்றவை சாதி சங்கங்கள்தான். இதன் மூலம் சாதியின் அடையாளத்தையும் சாதி சங்கங்கள் மாற்றியமைக்க தொடங்கின. சமூக அந்தஸ்து, சாதி பழக்க வழக்கங்களில் சாதியின் பலம் இருந்த நிலையை மாற்றி - சாதியின் பலம் வாக்கு எண்ணிக்கையில் உள்ளது என்கிற உண்மையை சாதி சங்கங்கள்தான் உணரவைத்தன" என்கின்றனர்.

இக்கட்டுரையில் தமிழ் நாட்டின் அரசியல் வளர்ச்சிக்கு வன்னியர் சங்கம் எவ்வாறு பங்களித்தது என்பதை விவரித்துள்ளனர்.

காண்க: Explaining Indian Democracy - A Fifty Years Perspective 1956 - 2006, by Lloyd L Rudolph & Susanne Hoeber Rudolph, Published by Oxford University Press 2008.

எனவே, சாதி என்பது கட்டாயம் தீமையை தான் செய்தது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு சாதி கேடானதாகவே இருந்து வந்தது. ஆனால், சாதி அமைப்புகள் தீங்கானவை அல்ல. அவை ஒடுக்கப்பட்ட பிரிவினரின் விடுதலைக்குதான் பாடுபட்டன. கூடவே, இந்திய சனநாயக அமைப்புக்கும் சாதி சங்கங்கள் நன்மையையே செய்துள்ளன.        


சாதி சங்கங்களின் அடுத்தக்கட்டமாக பார்க்கப்படும் சாதி அரசியல் என்பதும் கூட ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உரிமைக்கான அரசியல்தான்.

இதனை பிற்போக்காக பார்ப்பதுதான் உண்மையான பிற்போக்கு.