Pages

செவ்வாய், பிப்ரவரி 25, 2014

ஐ.நா மனித உரிமை ஆணையார் நவநீதம் பிள்ளை அறிக்கை இதோ: இலங்கை மீது அனைத்துலக விசாரணைக்கு பரிந்துரை !

சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கு பரிந்துரைக்கும், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் நவி பிள்ளை அவர்களுடைய அறிக்கையை ஐநா மனித உரிமைப் பேரவை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமைப் பேரவையில் எதிர்வரும் மார்ச் 26 ஆம் நாள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

18 பக்கங்கள் கொண்டுள்ள இந்த அறிக்கையின் முன்னுரையில், உள்நாட்டு விசாரணை பொறிமுறைகள் சிறிலங்காவில் தோல்வியடைந்ததுள்ள நிலையில், சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறைக்கு பரிந்துரை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் சிலவன முன்னேற்றம் கண்டிருப்பதனை ஒத்துக் கொள்வதாகவும், எனினும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணைகள் உறுதி செய்ய முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் அலுவலகம் பரிந்துரைத்த சிறப்பு பொறிமுறைகள் ஊடான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு சிறிலங்கா உரிய பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, வெளிவந்துள்ள புதிய ஆதாரங்கள் ஆயுத மோதல்களின் இறுதி கட்டங்களில் நடந்த நிகழ்வுகளை வெளிப்படத்  தொடர்கிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தப் பின்னணியில் , சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான அறிக்கை இதோ:

வெள்ளி, பிப்ரவரி 21, 2014

ராஜீவ் கொலை பயங்கரவாதம் அல்ல: வடஇந்தியர்களின் இனவெறி குறையுமா? 

'ராஜீவ் காந்தியின் கொலை ஒரு தனிப்பட்ட பழிவாங்கும் சம்பவம். அதனை பயங்கரவாதமாகக் கருத முடியாது. கொலை செய்தவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. அந்த நிகழ்வு இந்திய தேசத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல' என்று இந்திய உச்சநீதிமன்றம் 1999 ஆம் ஆண்டிலேயே தீர்ப்பளித்துள்ளது (08.10.1999).

ஆனால், அதனை ஒரு பயங்கரவாத நிகழ்வு என வடஇந்தியர்கள் இன்னமும் பேசுகின்றனர். பயங்கரவாதிகளை தமிழகம் ஆதரிப்பதாக இனவெறி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வடஇந்திய ஊடகங்களும் அரசியல்வாதிகளும் கொந்தளிக்கின்றனர். 

"நாட்டின் பிரதமராக இருந்தவரை பயங்கரவாதிகள் மிகவும் கொடூரமாகப் படுகொலை செய்தனர். பயங்கரவாதச் செயல் என்பது நாடு மீது தொடுக்கப்படும் போருக்கு சமமாகும். அந்த வகையில் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்யும் நடவடிக்கை தேசியப் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலுக்கு ஒப்பாகும்" - என்கிறார் பா.ஜ.க'வின் அருண் ஜேட்லி.

"பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் இரு வேறு நிலைகளை எந்த கட்சியும் கொண்டிருக்க முடியாது. ஆனால், நாட்டின் பிரதமராக இருந்தவரை கொன்றவர்களுக்கு விடுதலை பெற்றுத் தர ஒரு மாநில அரசே ஆர்வம் காட்டுவது வெட்கக்கேடான செயலாக உள்ளது' - என்கிறார் சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல்.
"ஈவு இரக்கமற்ற படுகொலையை நிகழ்த்தியவர்கள் பயங்கரவாதிகள். அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த நடவடிக்கை துரதிருஷ்டவசமானது" - என்கிறார் தகவல் ஒலிபரப்பு அமைச்சர் மணீஷ் திவாரி.

"ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், இந்தியாவின் ஆன்மா மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலாகும்" - என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான இந்த இனவெறி பொய்ப் பிரச்சாரம் நிறுத்தப்பட வேண்டும். 

ஆம் ஆத்மி கட்சிக்காரர்கள் 'ஆப்பிரிக்க பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்' என்று குற்றம்சாட்டியவுடன், அப்பிரிக்க தூதரகங்கள் கண்டனம் தெரிவித்தன. இந்திய அரசு உடனே பணிந்து போனது. ஆனால், தமிழனுக்கு என்று உலகில் ஒரு நாடும் இல்லை என்கிற இளக்காரத்தில் வடஇந்தியர்கள் - தமிழகம் பயங்கர வாதிகளை ஆதரிக்கிறது - என அபாண்டமான குற்றச்சாட்டுகளை வீசுகின்றனர். இந்த அநீதிக்கு முடிவு வரவேண்டும்.

ராஜீவ் கொலை பயங்கரவாதம் அல்ல: உச்சநீதி மன்றம்

"பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி இவர்களில் யாரும் பயங்கரவாதிகள் இல்லை. ராஜீவ் காந்தி கொலை ஒரு பயங்கரவாத நடவடிக்கையே அல்ல. தனிப்பட்ட பகையின் காரணமாக ராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் உத்தரவிட்டார். இது இந்தியாவுக்கோ இந்திய மக்களுக்கோ எதிரானது அல்ல. இந்திய அரசுக்கு எதிராக அல்லது இந்திய மக்களிடையே பீதியை உண்டாக்க இந்த சம்பவம் நடக்கவில்லை.
ராஜீவ் காந்தி என்கிற ஒருவரைத் தவிர வேறு யாரையும் கொலைசெய்யும் நோக்கம் இவர்களில் யாருக்கும் இல்லை" - இப்படியாக, 'ராஜீவ் காந்தி கொலை ஒரு பயங்கரவாதச் செயலே இல்லை' என்று உச்சநீதிமன்றம் 08.10.1999-ல் தீர்ப்பளித்தது.

Supreme Court verdict on the Rajiv Gandhi assassination case:

Justice Thomas found it difficult to "conclude that the conspirators intended, at any time, to overawe the Government of India as by law established. Nor can we hold that the conspirators ever entertained an intention to strike terror in people or any section thereof."

Justice Thomas reasoned that there was no evidence to suggest that the LTTE's intention had been to overawe the Government of India. Although the expression 'terrorist' can be used to refer to any person for acting to "deter the Government from doing anything or refrain from doing anything," the Judge said that was not Prabakaran's intention. He was "not against India or the Indian people but against the former leadership in India who is against the Tamil liberation struggle and the LTTE".

Justice Wadhwa said: "There is nothing on record to show that the intention to kill Rajiv Gandhi was to overawe the Government."

தனிப்பட்ட பகையால் நிகழ்ந்த ஒரு கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பயங்கரவாதிகள் என்பது என்ன நியாயம்? 'தமிழகம் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது. இது தமிழ் மக்களின் இனவெறி' என்றெல்லாம் - வட இந்திய ஊடகங்களும் அரசியல்வாதிகளும் ஏன் கொந்தளிக்கின்றனர்? 

தமிழர்களுக்கு எதிரான இனவெறி பிரச்சாரத்தை கைவிடுவதுதான் வட இந்தியாவுக்கு நல்லது. 

இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடலை கட்டுப்படுத்தும் கடற்கரை பரப்பு தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்!

ராஜீவ் கொலை பயங்கரவாதம் அல்ல என உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு குறித்து இங்கே காண்க: RAJIV GANDHI ASSASSINATION CASE - Out of the TADA net

வியாழன், பிப்ரவரி 20, 2014

7பேர் விடுதைலைக்கு உச்சநீதிமன்றம் தடை: தமிழ்நாடு அரசு முறையாக செயல்படவில்லை!

"இந்தத் தவறு தெரிந்தே நடந்ததா? தெரியாமல் நடந்ததா?" தமிழக அரசு விதிமுறைகளின் கீழ் விடுதலை செய்யவில்லை என்கிறது உச்சநீதிமன்றம். 
கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இருக்கிறது. ஆனால், அதனை முறைப்படி செய்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு உரிய வழிமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும் என்கிறது உச்சநீதிமன்றம். 

The court said the state is expected to comply with the procedural checks and that the court was ‘inclined’ to go into the issue. Remission is not automatic and that every state is obligated to follow the procedure before releasing any convict, ruled the court.

The apex court told the TN government that the court was not underestimating the state’s power but it acquired to be assured of procedural compliance by the state.
அவர் அப்படின்னா....!
இவங்க இப்படி....!
நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் 
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடி கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!

In haste, Jayalalithaa threw away rule book?

புதன், பிப்ரவரி 19, 2014

நீதியரசர் சதாசிவம்: வரலாற்று சிறப்புமிக்க முழுமையான தீர்ப்பை இங்கே காண்க

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 18.2.2014ல் தீர்ப்பளித்திருந்தது. அத்துடன், இவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தை 19.2.2014ல் கூட்டிய முதலமைச்சர் ஜெயலலிதா, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார்.

அந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு இதோ:

ஏழு பேர் விடுதலைக்கு வரவேற்பு: 20 ஆண்டு சிறையில் வாடும் வீரப்பனின் சகோதரர் மாதையனை விடுதலை செய்ய வேண்டும்

ஏழு பேர் விடுதலைக்கு வரவேற்பு: 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் சகோதரர் மாதையனை விடுதலை செய்ய மருத்துவர் இராமதாசு அய்யா கோரிக்கை

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

"பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அத்துடன், இவர்கள் ஆயுள் தண்டனைக் காலத்தை கழித்து விட்டதால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432, 433 ஆகிய பிரிவுகளின்படி  அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் மட்டுமின்றி, இதே வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகும் சிறையில் வாடும் நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரையும் சேர்த்து விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை நான் வலியுறுத்தியிருந்தேன்.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தை இன்று கூட்டிய முதலமைச்சர் ஜெயலலிதா, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில்  அறிவித்திருக்கிறார். இவர்களின் விடுதலைக்கான சட்டபூர்வ நடைமுறைகள் தொடங்கப்பட்டிருப்பதால் அடுத்த சில நாட்களில் இவர்கள் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் விடுதலை காலம் தாழ்த்தப்பட்ட ஒன்று  என்றபோதிலும் வரவேற்கப்பட வேண்டியதாகும்.

செய்யாத குற்றத்திற்காக 23 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு, தங்களது வாழ்க்கையின் முக்கியமான காலகட்டத்தை இழந்துவிட்ட இவர்கள், விரைவில் விடுதலை ஆவார்கள் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விடுவிக்கப்பட்ட பின்னர் இவர்கள் 7 பேரும்  அவர்கள் விரும்பியவாறு, தொல்லையில்லாத, அமைதியான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும்  தமிழக அரசே செய்து தர வேண்டும் .

மாதையனை விடுவிக்க வேண்டும்

நளினி உள்ளிட்டோரைப் போன்றே தண்டனைக் காலம் முடிவடைந்தும் ஏராளமானோர் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். பல்வேறு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்ட வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.  

அவர் மீது தொடரப்பட்டுள்ள எந்த வழக்கிலும் அவருக்கு தொடர்பு இல்லை. ஒரு வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தண்டனைக் காலம் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகியும் அவர் விடுதலை செய்யப்படவில்லை. 65 வயதைக் கடந்த மாதையன் நீரிழிவு நோய், அதிக இரத்த அழுத்தம், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்.

அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவரைப் போலவே தண்டனைக் காலம் முடிந்த பிறகும் சிறையில் வாடும் அனைத்துக் கைதிகளையும் கருணை அடிப்படையில் அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."

தமிழக அரசின் அதிரடி: முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை!

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 6 பேரை உடனே விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு

"ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் ஆயுள் தண்டனை குறைப்பு பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். மேலும், வேலூர் சிறையில் இருந்த நளினியும் விடுவிக்கப்படுவார்.
நளினியுடன், ஜெயச்சந்திரன், ராபர்ட் பயாஸ் போன்றோரும் விடுதலை செய்யப்படுவார்கள். மேற்குறிப்பிட்ட 6 பேரையும் விரைவில் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும். 3 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்காவிட்டால் அந்த 6 பேரையும் தமிழக அரசே விடுதலை செய்யும்" - முதல்வர் ஜெயலலிதா

"வானளாவிய அதிகாரத்தை நிரூபித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி! கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் இது சாத்தியம் இல்லை"

தொடர்புடைய சுட்டி: 

மூன்றுபேர் விடுதலை: முதல்வர் ஜெயலலிதா இப்போது கடவுளுக்கு நிகரானவர்!

செவ்வாய், பிப்ரவரி 18, 2014

மூன்றுபேர் விடுதலை: முதல்வர் ஜெயலலிதா இப்போது கடவுளுக்கு நிகரானவர்!

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை 23 வருட சிறைவாசத்திற்கு பின்னர் ரத்து செய்யப்பட்டது. இதற்காக நீதியரசர் சதாசிவம் அவர்களுக்கு தமிழினம் கடமைப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவுசெய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது (Considering the fact that the convicts were languishing jail for nearly 23 years, the Bench also gave a ray of hope for their release by saying that the State government could exercise its remission powers under Section 432 and 433 and following the due procedure in law).

எனவே, 14 ஆண்டு சிறைத்தண்டனை முடிந்தவர்களை குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432, 433 இன் கீழ் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது.

மன்னிப்பு - ஒரு வானளாவிய அதிகாரம்!

இந்தியாவில் நீதிமன்றங்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் மட்டும்தான் உண்டு. அந்த தண்டனையை நிறைவேற்றும் அதிகாரம் கிடையாது. தண்டனையை நிறைவேற்றுவது அல்லது அதனை மன்னிப்பது அரசாங்கத்தின் அதிகாரம் ஆகும். இந்த மன்னிப்புக்கும் நீதிமன்ற தண்டனைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
குற்றம் எதுவானாலும் விசாரணை தொடங்கும் முன்பு, விசாரணை நடக்கும் போது, தண்டனை அளிக்கப்பட்ட பின்பு என எப்போது வேண்டுமானாலும் அரசாங்கம் எந்த ஒரு குற்றவாளியையும் மன்னிக்கலாம். இது ஒரு உச்சபட்சமான அதிகாரம் ஆகும். இந்திய அரசியல் அமைப்பின் 161 ஆம் பிரிவின்படி மாநில அரசுக்கு இந்த மன்னிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மன்னிக்கும் அதிகாரம் ஒரு வானளாவிய அதிகாரம். 

நேற்றுவரை தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை குறைக்கும் அதிகாரம், அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் என இரண்டு அதிகாரங்கள் இருந்தன. உச்சநீதிமன்றம் மரணதண்டனையை குறைத்துள்ளதால், இப்போது விடுதலை செய்யும் அதிகாரம் மட்டுமே மீதமிருக்கிறது.

விடுதலை செய்யும் அதிகாரத்தில் இந்திய உச்சநீதிமன்றத்தை விட மேலான அதிகாரம் படைத்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா இருக்கிறார் என்பது இங்கே கவனிக்கத் தக்கதாகும்.

எனவே, கடவுளுக்கு இருப்பதாகக் கருதப்படும் அதே அதிகாரம் இப்போது தமிழக முதல்வருக்கும் இருப்பதால் - 

14 ஆண்டு சிறைதண்டனை முடிந்தவர்கள் விடுவிக்கப்படலாம் என்கிற குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432, 433 பிரிவுகளின் கீழோ; எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் மன்னித்து விடுதலை செய்யலாம் என்கிற இந்திய அரசியல் சாசன அதிகாரம் 161 இன் கீழோ;

சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உட்பட நீண்டகாலமாக சிறையில் இருப்போர் அனைவரையும் மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள்:

1. அவசரம்: 3 பேரின் தூக்கு தண்டனையை எதிர்ப்போர் கவனத்திற்கு!

2. தூக்குதண்டனை-சட்டமன்ற தீர்மானம்: முதலமைச்சருக்கே அதிகாரம் இருக்கும் போது நடுவண் அரசிடம் கெஞ்சலாமா? 


3. முதலமைச்சர் நினைத்தால் இப்போதும் 3 உயிர்களை காக்க முடியும்.


4. தூக்கு: தமிழக தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று கூறும் மத்திய அரசின் மூக்குடைக்கும் வழி என்ன?


5. மருத்துவர் இராமதாசு அவர்கள் முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் -இங்கே காண்க. (தமிழ்)