Pages

புதன், ஆகஸ்ட் 10, 2011

சமச்சீர் கல்வி முழுதீர்ப்பு: துகிலுரியப்பட்ட தமிழக அரசு

சமச்சீர் கல்வி வழக்கில் 9.8.2011 அன்று உச்சநீதிமன்றம் அளித்த முழுதீர்ப்பு (ஆங்கிலம்) கீழே தரப்பட்டுள்ளது. இத்தீர்ப்பில் தமிழக அரசு மேற்கொண்ட - சட்டவிரோதமான, இயற்கைக்கு முரணான, மக்கள் நலனுக்கு எதிரான அவசர முயற்சிகள் துகிலுரியப்பட்டுள்ளன!

பள்ளிக்கல்வி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும், ஆனால், தமிழக அரசு சமச்சீர் கல்வியை ஒழித்துக்கட்டும் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளது. 


உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சட்டபூர்வமானது என ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்ட சமச்சீர் கல்வியை தமிழ்நாடு அரசு இப்போது சட்டவிரோதம் எனக்கூறியுள்ளது.


சமச்சீர் கல்வியில் மாற்றங்கள் கொண்டுவர பழைய சட்டத்திலேயே பிரிவு 18 இல் எல்லா வாய்ப்பும் உள்ளது. ஆனால், இதற்காக புதிய சட்டம் கொண்டு வந்தது 'ஊசியைப் பயன்படுத்தும் இடத்தில் கத்தியைப் பயன்படுத்திய செயல்'.


சமச்சீர் கல்வி வேண்டாம் என மே 22 இல் தான் புதிய அமைச்சரவை முடிவெடுத்தது. ஆனால், பழைய புத்தகங்களை அச்சிட மே 21 ஆம் நாள் டெண்டர் விட்டுள்ளனர். ஆக, சமச்சீர் கல்வியை ஒழிப்பது என்று ஏற்கனவே முடிவெடுத்துள்ளனர்.

--இப்படியாக விலாவாரியாக விமர்சித்துள்ளனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள். படியுங்கள், தமிழ்நாட்டின் பரிதாப நிலையைப் பாருங்கள்! 
Samacheer Kalvi – Supreme Court Judgment 9 August 2011

2 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தமிழ்க அரசு பார்க்காத நீதிமன்றங்களா..

அம்மா எதையும் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளமாட்டார்...

ஆனால் இதன் மூலம் நல்ல பாடம் கற்றுக்கொண்டார்....

நீதிமன்றங்களுக்கு பாராட்டுக்கள்..

Unknown சொன்னது…

பகிர்வுக்கு ந்ன்றி!!