Pages

வியாழன், ஜனவரி 24, 2013

கடலூர்: மருத்துவர் இராமதாசு அய்யா மீதான தடைநீக்கம் - இனியாவது பாடம் கற்குமா தமிழக அரசு?

கடலூர் மாவட்டத்தில் நுழைவதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கு ஜனவரி 21 ஆம் நாள் தடைவிதிக்கப்பட்டது. மூன்றே நாட்களில் இந்தத் தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

"பதட்டமான சூழ்நிலையினை கருத்திற்கொண்டும், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் பொருட்டும் தடைவிதிக்கப்படுவதாக" அந்த மாவட்ட ஆட்சியர் கூறினார். குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு இரண்டு மாதக் காலத்திற்கு ஆணையிடப்படுகிறது என்று அவர் கூறினார்.

கடலூர் முற்றுகை - மோதல்: மண்டை உடைப்பு!

இன்று 24.01.2013 காலை எட்டு மணி முதல் ஆயிரக்கணக்கான பாமகவினர் கடலூரில் குவிந்தனர். போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 'மருத்துவர் அய்யா அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு, அவர் கடலூருக்கு வந்த பின்புதான் நாங்கள் வீடுதிரும்புவோம்' என அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதே நேரத்தில் அதிமுகவினர் மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அதிமுக போராட்டத்தை விட பல மடங்கு அதிக கூட்டத்தினர் பாமக சார்பில் கூடியிருந்தனர். இதனால் கோபம் அடைந்த காட்டுமன்னார்கோவில் தனித்தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன் போராட்டத்தில் பேசும்போது பாமகவினரை தரக்குறைவாக பேசியாதாகவும், அதனால் கோபம் அடைந்த பாமகவினர் செருப்பை வீசியதாகவும் கூறப்படுகிறது. (அதிமுக பாமக திடீர் மோதல் : கல்வீச்சு; தடியடியால் பதற்றம்)

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அதிமுகவினைரை விட்டுவிட்டு பாமகவினர் மீது மட்டும் தாக்குதல் நடத்தினர். ஏராளமானோர் தக்கப்பட்டனர். ஐந்து பேருக்கு மண்டை உடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தடையை நீக்கும் அறிவிப்பு
இதன் பிறகும் பாமகவினர் கலைந்து செல்ல மறுத்தனர். பின்னர் ஆட்சியர் மருத்துவர் அய்யாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக பிற்பகலில் அறிவித்தார். (ராமதாஸ் மீதான தடை நீக்கம்)

கடலூரில் மருத்துவர் அய்யா

தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மாலை நான்கு மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த மாபெரும் கூட்டத்தில் மருத்துவர் அய்யா உரையாற்றினார்.  காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களை சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.
ஜனநாயக விரோதமான இந்தத் தடையை விதிக்காமலேயே இருந்திருக்கலாம், அல்லது இன்று காலை மண்டையை உடைப்பதற்கு முன்பே தடையை நீக்கி இருக்கலாம். தமிழக அரசுக்கு ஏன் இந்த வெட்டிவேலை என்று தெரியவில்லை.

முற்போக்கு வேடதாரிகள் தடையை வரவேற்காதது ஏன்?

வன்னிய சாதிவெறி எதிர்ப்பு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள், மருத்துவர் அய்யா அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடியவர்கள் அவருக்கு கடலூர் மாவட்டத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டதை எதற்காவோ வரவேற்கவில்லை.

திமுக தலைவர் கலைஞர் பல்டி அடித்து தடையைக் கண்டித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடை தடையை வரவேற்றது. ஆனால் மற்றவர்கள் ஏன் எதுவும் பேசவில்லை?

மற்ற இடதுசாரியினர், தமிழ்த்தேசியவாதிகள், மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் கடலூர் மாவட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதைக் கண்டித்து இப்போதாவது அறிக்கை வெளியிட முன்வர வேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள்:

வன்னியப் பெண்களுக்கு பாதுகாப்பு கேட்டால் மருத்துவர் அய்யாவுக்குத் தடையா? மானம் காக்க கடைசிவரைப் போராடுவோம்.

மருத்துவர் அய்யா கடலூர் மாவட்டத்தில் நுழையத் தடை: வன்னிய சாதிவெறியை எதிர்ப்போர் இதனை வரவேற்காதது ஏன்?

1 கருத்து:

vels-erode சொன்னது…

இது பாசிச ஜெயாவின் அரசு.

தாங்கள் எதிர்பார்க்கிற மாதிரி அறிவோ, எதிரணியையும் மதிக்கிற தன்மையோ இந்த ஆட்டுமந்தை கூட்டத்திற்கு கிடையாது.

அற வினையும், ஆன்ற பிறவினையும் பெண்ஏவல் செய்வார்கண் இல்

என்று வள்ளுவன் சும்மவா சொல்லியிருப்பான்.

அட்டக் கத்தி ஆட்சி இது.