Pages

ஞாயிறு, பிப்ரவரி 07, 2016

கலவர கொலைகாரனுக்கு அரசு பண உதவி: தமிழ் நாட்டில் நடக்கும் சாதிவெறி அட்டூழியம்!

மரக்காணம் கலவரம் தொடர்பில், திட்டமிட்டு கொலை செய்த கொலைகாரனுக்கே நிவாரண உதவி வழங்கி சாதனைப் படைத்துள்ளது தமிழ்நாடு அரசு. 

மரக்காணம் கலவர வழக்கில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 6 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது திண்டிவனம் நீதிமன்றம். ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவர் அரசு நிவாரண பண உதவியும் பெற்றுள்ளார்.
மரக்காணம் வன்முறை: அநீதியின் உச்சம்

2013 ஏப்ரல் 25 ஆம் நாள் மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கு சென்ற வன்னியர் சங்கத்தினர் மீது கிழக்குக் கடற்கரை சாலையில் திட்டமிட்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. செல்வராஜ், விவேக் எனும் வன்னியர் சங்கத் தொண்டர்கள் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

வன்னியர்களை படுகொலை செய்துவிட்டு, வன்னியர்கள் மீதே கலவரப் பழியை சுமத்தினர். இந்த அநீதிக்கு தமிழ்நாட்டின் அத்தனை ஊடகங்களும், பாமக தவிர மீதமுள்ள அத்தனை கட்சிகளும், தமிழக அரசும் துணை போனது. மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டார். பாமகவின் அத்தனை தலைவர்களும் சிறையில் தள்ளப்பட்டனர். இந்திய வரலாற்றில் முதல் முறையாக 134 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டமும் குண்டர் சட்டமும் பாய்ச்சப்பட்டது.
எரிந்த கொட்டகையின் உள்ளே எரியாத மாடு (The Hindu)
தலித் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், 'வழக்கம் போல' பன்மடங்காக மிகைப்படுத்திக் காட்டப்பட்டன. சில குடிசைகள் எரிந்த நிகழ்வு பல குடிசைகளாக மாற்றப்பட்டது. எரிந்த கொட்டகையின் உள்ளே எரியாதை மாட்டை படுக்க வைத்து படம் காட்டியது தி இந்து. கடைசியில் 'வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்' நிவாரண உதவிகள் அளித்தார்கள்.

அரசு நிவாரண உதவி பெற்ற கொலைகாரன்

அரசின் நிவாரண உதவிகளைப் பெற்றவர்கள் பட்டியலில் ஒருவர் 'மரக்காணம், கழிக்குப்பத்தை சேர்ந்த சேகர்' என்பவராகும். இவரது மாட்டிறைச்சிக்கடை தீயினால் சேதமடைந்தத்தாகக் கூறி, நிவாரண உதவிக்கு  2.6.2013 ஆம் நாள் பரிந்துரை செய்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.

ஆனால், 'கழிக்குப்பம் சேகர்' எனும் இதே நபர்தான் 'வன்னியர் சங்கத்தை சேர்ந்த அரியலூர் செல்வராஜ்' எனும் பாமக தொண்டரை வெட்டிக்கொன்றார் என குற்றம் உறுதி செய்யப்பட்டு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

ஆக, கொலை செய்த கொலைக்காரனுக்கே அரசு நிவாரண உதவியை அளித்துள்ளது தமிழ்நாடு அரசு. அரசு நிவாரணத்துக்காக கொலை செய்தவர் பெயரே பரிந்துரைக்கப்பட்டுள்ள தகவல் திண்டிவனம் நீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது (படம் காண்க).

திண்டிவனம் நீதிமன்ற தீர்ப்பு

கலவரம் செய் - அரசு நிவாரணம் வாங்கு

திட்டமிட்டு கலவரம் செய்து பழியை பாதிக்கப்பட்டவர்கள் மீதே போடுவது அல்லது எதேச்சையாக நடக்கும் மோதல்களை, மாபெரும் கலவரங்களாக சித்தரிப்பது - ஆகிய நடவடிக்கைகள் மூலம் அரசிடம் பெருமளவு பணம் கறக்கும் புதிய போக்கு தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறது.

தருமபுரியில் முதல்நாள் முப்பது குடிசைகள் எரிந்த நிகழ்வு, அடுத்த நாள் 300 வீடுகள் எரிந்ததாக மாற்றப்பட்டது. பத்து கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டது. மரக்காணத்தில், கொலை செய்துவிட்டு ஒன்றரை லட்சம் ரூபாய் நிவாரண உதவி வாங்கும் கொடுமை நடந்துள்ளது.

(கலவரங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு முழு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்பதிலோ, கலவரத்துக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலோ நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், போலியான இழப்புகளுக்கு நிவாரணமும், செய்யாத குற்றங்களுக்கு பழி சுமப்பதும் சகிக்ககூடியவை அல்ல).

சாதிக்கு ஒரு நீதி கிடையாது. சாதிக்கு ஒரு நியாயம் இருக்க முடியாது. அரசும், ஊடகங்களும், நடுநிலையாளர்களும் இனியாவது நியாயமாக நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். 

எது நடந்தாலும் வன்னியர்கள் மீது மட்டுமே குற்றம் சாட்டும் போக்கு தொடர்ந்தால் - அது அடக்கப்படும் சமூகம் வெடித்து கிளம்பும் சூழ் நிலையை நிச்சயம் ஏற்படுத்தும்!

கருத்துகள் இல்லை: