Pages

ஞாயிறு, பிப்ரவரி 14, 2016

தமிழக கட்சிகளின் 'சாதி எதிர்ப்பு' போலி வேடம்!

அதிமுக - திமுக கட்சிகள் தற்போது போட்டிப்போட்டுக் கொண்டு சாதிச் சங்க மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், திருச்சியில் திமுக முத்தரையர் மாநாடு & அதிமுக முத்தரையர் மாநாடு நடக்கப்போகிறதாம்.
தினமலர் 14.2.2016: திமுக & அதிமுக முத்தரையர் மாநாடு செய்தி
தமிழ்நாட்டில் சாதி ஒரு முக்கிய அடையாளமாக இருக்கிறது. எப்படி இனம், மதம், மொழி அடையாளங்களை ஒழிக்க முடியாதோ, அதேபோன்று - சாதி அடையாளமும் அழிக்கப்படக் கூடியது அல்ல.

சாதிகளுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளும், ஒடுக்குமுறைகளும் ஒழிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் அதற்கான விகிதாச்சார உரிமையும் அதிகாரமும் அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு சாதியினரின் மனித உரிமைகளுக்கு முழு மதிப்பளிக்க வேண்டும் - என நேரடியாக சமத்துவத்தையும் அமைதியையும் நாம் பேசுகிறோம்.

ஆனால், சாதி என்கிற சொல்லே பாவமானது என்று போலி வேடம் போடும் கட்சிகள் - இப்போது தேர்தல் வந்ததும் ஆளுக்கொரு சாதி மாநாடு நடத்துகிறார்கள். 

கடந்த டிசம்பர் மாதம், மதுரையிலும் திண்டுக்கல்லிலும் அதிமுக - திமுக கட்சிகள் ஆளுக்கொரு 'தெலுங்கு செட்டியார்' மாநாடு நடத்தினர். அடுத்ததாக, பாமக உட்பட எல்லா கட்சிகளும் திண்டிவனத்தில் ரெட்டியார் மாநாட்டில் பங்கேற்றனர். இப்போது திமுக - அதிமுக கட்சிகள் முத்தரையர் மாநாட்டை நடத்தப் போகின்றனர்.
24 மனை தெலுங்கு செட்டியார் சங்க மாநாட்டுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்துக் கடிதம் 
திமுக MLA கே.சி. பழனிச்சாமி நடத்திய 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சாதிச்சங்க மாநாடு
சாதிகளின் உரிமையை எப்போதும் அங்கீகரிக்கும் பா.ம.க., மேலான கட்சியா? 

அல்லது 

தேர்தலுக்காக மட்டுமே சாதிகளிடம் மண்டியிடும் தி.மு.க., & அ.தி.மு.க., கட்சிகள் மேலானவையா?

பாமக மட்டும்தான் சாதிக்கட்சி என்று 'வாலறுந்த நாய்' போன்று கத்தும் முற்போக்கு வேடதாரிகள் - திமுக, அதிமுக சாதிச் சங்க மாநாட்டு குறித்தெல்லாம் கருத்து கூறாமல் மவுனம் காப்பது ஏன்?

தொடர்புடைய சுட்டி: 

சாதி மாநாட்டுக்கு ஜெயலலிதா வாழ்த்து: திராவிடக் கட்சிகளின் சாதி அரசியல்!

கருத்துகள் இல்லை: