Pages

வியாழன், ஜூன் 21, 2012

கம்யூனிஸ்டுகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பும்: சாதி மறுப்பு மனிதர்களின் நேர்மைக்கு ஒரு சவால்!

தமிழ்நாட்டின் பொதுவான மனநிலையைப் பார்க்கும்போது 'சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவான நிலைதான் உள்ளது' என்பது பத்திரிகைகளின் கணிப்பாகும்.

இந்நிலையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து கம்யூனிஸ்டுகள் என்ன நினைக்கிறார்கள் என்று தேடினால் - அங்கு தெளிவாக எதும் தெரியவில்லை. (பிரதான கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்).
வினவு போன்ற இடதுசாரி இணைய தளங்களிலும் பெரிதாக எதுவும் காணோம். ஆனால், வினவோடு தொடர்புடைய அமைப்பான "மக்கள் கலை இலக்கிய கழகம்" பின்வருமாறு சுவரொட்டி ஒடியுள்ளது:

"சாதிவாரிக் கணக்கெடுப்பு- உழைப்பைச் சுரண்டுபவர்களுக்குப் பாதுகாப்பு! உழைக்கும் வர்க்கத்துக்கோ பேரிழப்பு!"  (அதனை இங்கே காண்க)
ஆக, தீவிர இடதுசாரிகள் - குறிப்பாக வினவு, மகஇக அமைப்பினர் - சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்க்கின்றனர். (இது ஒரு தகவல் - அவ்வளவுதான்- கீழே உள்ள கருத்துகளுக்கும் இதற்கும் தொடர்பில்லை.)

சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன்?

இந்திய அரசால் பிற்படுத்தப்பட்ட மக்கள் மூன்று பிரிவினராக வரிசைப் படுத்தப்பட்டனர்.

1. பட்டியல் இனத்தவர் (SC), 
2. பழங்குடி இனத்தவர் (ST), 
3. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். (OBC எனப்படுவதன் பின்னணி இதுவே).

ஆனால், சாதிவாரியாக புள்ளி விவரம் இல்லை என்பதுதான் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு முழுமையான அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்பட தடையாக இருந்தது.

அரசியல் அமைப்பின் 340 ஆம் பிரிவு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வழி செய்கிறது. இதன் கீழ் அமைக்கப்பட்ட கலேல்கர் குழு, மண்டல் குழு - ஆகிய இரண்டு அறிக்கைகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தக்கோரின.
சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் அனைத்து சாதிகளையும் அவரவர் சமூக, கல்வி, பொருளாதார நிலைக்கு ஏற்ப தொகுப்புகளாக பிரிக்க முடியும். ஒவ்வொரு தொகுப்பினரின் மக்கள்தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்க முடியும். அதனையும் கூட பெரிய சாதிகளின் விழுக்காட்டிற்கு ஏற்ப உள் ஒதுக்கீடாக பிரித்து அளிக்க முடியும்.

எனவே, சாதிவாரிக் கணக்கெடுப்பு மிக மிக அவசியமானது.

விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்பது வெறும் இடஒதுக்கீட்டுடன் முடிவது இல்லை. தனியார்துறை இடஒதுக்கீடு, வங்கிக்கடன், அரசின் ஒப்பந்தங்கள், அரசின் நிதி ஒதுக்கீட்டில் யாருக்கு நன்மை? என உரிமைக்கான கோரிக்கைகள் நீளும்.


சாதி மறுப்பு மனிதர்களின் நேர்மைக்கு ஒரு சவால்!

சாதி மறுப்பு மனிதர்கள் என்று கூற விரும்புகிறவர்கள் சுயமரியாதையுள்ள, நாணயம், நேர்மை, வாக்கு சுத்தம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஆனாலும், சாதி மறுப்பு மனிதர்களில் பலவகையான மனிதர்கள் அடங்கியிருப்பார்கள் என்பதால் - அவர்களின் அறிவு, நேர்மை, நாணயம் ஒவ்வொரு கூட்டத்திற்கும் மாறுபடக்கூடும். அதனை பின்வருமாறு பிரிக்கலாம்:

(இந்த இடத்தில் சாதி  மறுப்பாளர்களாக சாதிவாரிக் கணக்கெடுப்பின் போது 'சாதி இல்லை' என்று சொல்வோரை மட்டுமே குறிப்பிடுகிறேன். மாறாக, திருமணம் போன்ற வேறு விடயங்களைக் குறிக்கவில்லை)

1. பார்ப்பனர்கள், முன்னேறிய சாதியினர்

இவர்கள் சாதி மறுப்பாளர்களாக மாறுவதால் யாருக்கும் ஒரு பயனும் இல்லை. அவர்களுக்கும் ஒரு இழப்பும் இல்லை. ஏனெனில், "பார்ப்பனர்கள், முன்னேறிய சாதியினர்" கணக்கெடுக்கப்பட்டாலும் கணக்கெடுக்காமல் போனாலும் - அவர்களுக்கு புதிதாகக் கிடைக்க எதுவும் இல்லை.

மற்ற சாதியினரின் உரிமைகளை ஏற்கனவே அபகரித்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் என்பதால் "சாதி மறுப்பு மனிதர்கள்" என்று கூறுவது இவர்களுக்கு மிகச் சாதாரணமானதுதான்.

எனவே, பார்ப்பனர்கள், முன்னேறிய சாதியினரின் நேர்மையில் சந்தேகம் இல்லை.

2. பட்டியல் இனத்தவர் (SC), பழங்குடி இனத்தவர் (ST)

இவர்கள் சாதி மறுப்பாளர்களாக மாறுவதால் யாருக்கும் ஒரு பாதிப்பும் இல்லை. அவர்களுக்கும் ஒரு இழப்பும் இல்லை.

ஏனெனில், "பட்டியல் இனத்தவர் (SC), பழங்குடி இனத்தவர் (ST)" ஏற்கனவே மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் வலுக்கட்டாயமாக கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களது சமூக பொருளாதார நிலை குறித்து தெளிவான புள்ளி விவரங்கள் உள்ளன. எனவே, இவர்கள் தம்மை "சாதி மறுப்பு மனிதர்கள்" என்று கூறுவதால் ஒரு பாதிப்பும் இல்லை.

எனவே, பட்டியல் இனத்தவர் (SC), பழங்குடி இனத்தவர் (ST) நேர்மையில் சந்தேகம் இல்லை.

3. பிற்படுத்தப்பட்ட சாதியினர் (MBC/BC)

இவர்கள் சாதி மறுப்பாளர்களாக மாறுவதுதான் ஆபத்தானது. இதனால், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் உண்மையான நிலை அறியப்படுவது தடைபடும். அதனால், சமூக நீதிப்போராட்டத்திற்கு கேடு நேரும்.

"MBC, BC பிற்படுத்தப்பட்ட சாதியினர்" தம்மை "சாதி மறுப்பு மனிதர்கள்" என்று கூறுவது ஏமாளித்தனத்தின் காரணமாகவே இருக்கக்கூடும். இவர்கள் மேல்சாதிக் கூட்டத்தின் தந்திரத்தால் இப்படிப் பேசக்கூடும். இந்த அறியாமை போக்கப்பட வேண்டும்.

இல்லை, இல்லை - நாங்கள் மனமறிந்து சுய நினைவோடுதான் "சாதி மறுப்பு மனிதர்கள்" என்று கூறுகிறோம் என்று மிகவும் பிற்படுத்தப்பட்ட(MBC), பிற்படுத்தப்பட்ட (BC) வகுப்பினர் கூறுவார்களேயானால், அவர்கள் "நாணயம், நேர்மை, வாக்கு சுத்தம்" உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


MBC அல்லது BC வகுப்பினர் சாதிவாரிக் கணக்கெடுப்பின் போது தாம் "சாதி மறுப்பு மனிதர்கள்" என்று கூறுவதற்கு முன்பாக -

1. தாமோ, தமது குடும்பத்தினரோ MBC, BC இடஒதுக்கீட்டின் மூலம் ஏதேனும் வேலைவாய்ப்பினைப் பெற்றிருந்தால் அந்த பதவியில் இருந்து விலக வேண்டும்.

2. தாமோ, தமது குடும்பத்தினரோ MBC, BC இடஒதுக்கீட்டின் மூலம் ஏதேனும் கல்வி இடங்களை பெற்றிருந்தால் அந்த படிப்புச் சான்றிதழை கிழித்து எறிய வேண்டும் (இதற்காக அரசு செலவிட்ட பணத்தை திருப்பித்தர வேண்டும்). அந்த சான்றிதழால் வேலைவாய்ப்பினைப் பெற்றிருந்தால் அந்த பதவியில் இருந்து விலக வேண்டும்

3. இப்போது கல்லூரிகளில் MBC, BC இடஒதுக்கீட்டில் படிக்கும் தமது குடும்ப மாணவர்களை படிப்பைக் கைவிடச் சொல்ல வேண்டும். (இதற்காக அரசு செலவிட்ட பணத்தை திருப்பித்தர வேண்டும்).

4. இனி எல்லா இடங்களிலும் தம்மை "பொதுப்பட்டியல் (OC)" பிரிவினைச் சேர்ந்தோர் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும். தப்பித்தவறிக் கூட MBC, BC என்று குறிப்பிடக் கூடாது. (தெம்பிருந்தால் அரசிடம் "சாதி மறுப்பு மனிதர்கள்" என்ற தனி பிரிவினைக் கோருங்கள்)

--இதையெல்லாம் செய்துவிட்டு அதன்பிறகு MBC மற்றும் BC பிரிவினர் தம்மை "சாதி மறுப்பு மனிதர்கள்" என்று தாராளமாக குறிப்பிட்டுக்கொள்ளுங்கள்.

அதை விட்டுவிட்டு, MBC, BC வகுப்புகளுக்கான உரிமைகள் மட்டும் வேண்டும், ஆனால், நாங்கள் "சாதி மறுப்பு மனிதர்கள்" என்று வெளிவேடமிட்டு துரோகம் இழைக்காதீர்.

சாதியை மறுக்கும் MBC, BC பிரிவினரே, கொஞ்சமாவது சூடு சொரணையுடன் நடந்து கொள்ளுங்கள்


தொடர்புடைய சுட்டிகள்:



1. சாதிவாரிக் கணக்கெடுப்பு: பிற்போக்கா? முற்போக்கா? 


2. சாதிவாரிக் கணக்கெடுப்பு-ஏப்ரல் 23 முதல் நடக்கிறது: வன்னியர்களின் கடமை என்ன?


3. சாதிவாரிக் கணக்கெடுப்பு: முற்போக்கு வேடதாரிகளின் மூக்கை உடைக்கிறார் கி.வீரமணி!


4. மே 17 இயக்கத்தின் சாதிவெறி: வன்னியர்களை தமிழ்நாட்டைவிட்டு விரட்ட வேண்டுமாம்!


57 கருத்துகள்:

குழலி / Kuzhali சொன்னது…

என் திருமண சான்றிதழில் 6 இடங்களில் Caste not mentioned என உள்ளது... இந்த மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அழுத்தம் திருத்தமாக ஆங்கில ஸ்பெல்லிங்கோடு என்ன சாதியென்று பதிந்தேன்(வீட்டுக்கு மக்கள் தொகை கணக்கெடுக்க ஆள் வந்தாள் சொல்லுங்க என சொல்லி அப்படி வந்தபின் ஐஎஸ்டி போட்டு தான் பதிந்தேன்.)

# personal feelings and social responsibility are not necessarily same
# I am not solely responsible for this.

வால்பையன் சொன்னது…

சாதி மறுப்பது வேறு தம்மை ஆண்ட சாதி எனக் கூறிக்கொண்டு சலுகை கேட்பது வேறு.

நான் சவாலுக்கு தயார்

அருள் சொன்னது…

@குழலி / Kuzhali சொன்னது…

// //personal feelings and social responsibility are not necessarily same// //

மிகச்சரியான வாதம். நன்றி

அருள் சொன்னது…

வால்பையன் சொன்னது…

// //சாதி மறுப்பது வேறு தம்மை ஆண்ட சாதி எனக் கூறிக்கொண்டு சலுகை கேட்பது வேறு.
நான் சவாலுக்கு தயார் // //

மேலே உள்ள சவால் BC/MBC பிரிவினருக்கானது மட்டுமே.

BC/MBC பிரிவினர் தனக்கு சாதி இல்லை என்று சொல்லும் முன்பு தானும் தன்னைச் சார்ந்தவர்களும் 'இடஒதுக்கீட்டு' சலுகைகள் அனைத்திலிருந்தும் மனசாட்சிப்படி விலக வேண்டும்' என்பதே இங்கே சவால் எனக் குறிக்கப்பட்டுள்ளது.

அப்படி செய்தாலும் கூட - அவர்கள் தமது சமூகக்கடமையிலிருந்து விலகுகின்றனர் - எனும் திரு. குழலியின் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க முடியாது.

மற்றபடி "ஆண்ட சாதி" என்பதற்காக உரிமைக் கேட்கக் கூடாது என்பது என்ன வியாக்கியானமோ!

சனநாயக அடிப்படையிலான உரிமை என்பது 'எண்ணிக்கையை' வைத்து கேட்கப்படுகிறது. சமூக, பொருளாதார நிலைகளில் பின் தங்கியிருப்பது இக்கோரிக்கைக்கு கூடுதல் நியாயம் சேர்க்கிறது.

சனநாயகம், சமூகநீதி என்கிற வார்த்தைகள் சாதிவாரிக் கணக்கெடுப்பு இல்லாதவரை - இந்தியாவில் நடைமுறைச் சாத்தியமற்ற வார்த்தைகளாகவே நீடிக்கும்.

வால்பையன் சொன்னது…

உங்களை ஆண்ட சாதி என சொல்லிக்கொள்ளும் பொழுதே, உங்களால் சாதி வெறியில் மாண்ட சாதியும் பலர் என்பதையும் சொல்ல வேண்டும்.
சாட்சி வேண்டியதில்லை, இப்பவே இப்படினா அப்ப எப்படி இருந்திருப்பிங்க.

சாதிக்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போக மீதி உங்களுக்கு என்பது தான் சரி. அதைவிட்டு மக்கள்தொகை அதிகம் அதனால் அதிக ஒதுக்கீடு கேட்பது முறையல்ல.

அருள் சொன்னது…

@வால்பையன்

1. அதிகம் குறைவு என்பதெல்லாம் இல்லை. எந்த சாதி எத்தனை விழுக்காடோ, இட ஒதுக்கீடும் அத்தனை விழுக்காடு வேண்டும் - என்பது ஒரு கோரிக்கை.

2. ஆண்ட சாதி என்பது 'குறிப்பிட ஒரு காலகட்டத்தில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் ஆட்சி செய்தனர்' என்கிற வரலாற்று நிகழ்வு. இதை நீங்களும் நானும் மாற்ற முடியாது.

அடக்கப்பட்ட சாதியினர் விடுதலைப் பெற வேண்டும் என்பது ஒரு கோரிக்கை. அதுபோல ஒருகாலத்தில் ஆண்ட சாதியும் இப்போது உரிமை இழந்து கிடக்கிறது என்பது மற்றொரு கருத்து. உரிமை இழந்தவன் உரிமைக்காக குரல் கொடுப்பது தவறா?

Rajan சொன்னது…

ஆமாம்... ஆமாம் தமிழ் நாட்டிலேயே அடிமைப்பட்டுக் கிடக்கும் சாதி வன்னியர்கள் தான்!

வால்பையன் சொன்னது…

நீங்கள் அடக்கப்பட்ட சாதியினரா? எத்தனை காலமாக?

அருள் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அருள் சொன்னது…

வால்பையன் சொன்னது…

// //நீங்கள் அடக்கப்பட்ட சாதியினரா? எத்தனை காலமாக?// //

"அடக்கப்பட்ட சாதியினர் விடுதலைப் பெற வேண்டும் என்பது ஒரு கோரிக்கை. அதுபோல ஒருகாலத்தில் ஆண்ட சாதியும் இப்போது உரிமை இழந்து கிடக்கிறது என்பது மற்றொரு கருத்து." என்றுதான் நான் குறிப்பிட்டுள்ளேன்.

"ஒருகாலத்தில் ஆண்ட சாதியும் இப்போது உரிமை இழந்து கிடக்கிறது" என்பதுதான் வன்னியர்களைக் குறிக்கிறது.

எனவே, உங்களது கேள்வி //நீங்கள் உரிமை இழந்த சாதியினரா? எத்தனை காலமாக?// என்பதாக இருக்க வேண்டும்.

அதற்கான பதிலை பின்வரும் இணைப்பில் விரிவாகக் காண்க:

http://www.scribd.com/doc/61739397/Vanniyar%E2%80%99s-Status-draft

மகிழ்நன் சொன்னது…

இத்தனை விதமாக நேர்மை கோரிய நீங்கள்..வன்கொடுமை செய்யும் ஒருவனுக்கு, தீண்டாமையை கடைபிடிக்கும் ஒருவனுக்கு, சாதியின் காரணமாக கௌரவ கொலைகள் செய்யும் ஒருவனுக்கு இட ஒதுக்கீடு கூடாதென்று ஏன் கோரிக்கை வைக்கவில்லை அருள்

அருள் சொன்னது…

மகிழ்நன் பா சொன்னது…

// //வன்கொடுமை செய்யும் ஒருவனுக்கு, தீண்டாமையை கடைபிடிக்கும் ஒருவனுக்கு, சாதியின் காரணமாக கௌரவ கொலைகள் செய்யும் ஒருவனுக்கு இட ஒதுக்கீடு கூடாதென்று ஏன் கோரிக்கை வைக்கவில்லை அருள்// //

தீண்டாமை, வன்கொடுமை, கொலை - இவையெல்லாம் குற்றச்செயல்கள். இத்தகைய குற்றங்களை இழைப்போர் தண்டிக்கப்பட வேண்டும். இதற்கும் இடஒதுக்கீட்டிற்கும் என்ன தொடர்பு?

அப்படியானால், இடஒதுக்கீடு இல்லாத முற்பட்ட சாதியினர் இக்குற்றங்களை செய்யலாமா?

தலைக்கவசம் அணியாதவர், பொதுஇடத்தில் புகைபிடிப்பவர் போன்ற எல்லா குற்றங்களுக்கும் 'இடஒதுக்கீடு இல்லை' என்று கூறலாமா?

பூவண்ணன் சொன்னது…

இது என்னங்க அநியாயமா இருக்கு
அப்ப ஒதுக்கீட்டுல சீட்டு வாங்கி படித்தவங்க ,வேலையில இருக்கிறவங்க அதை விட்டுட்டு/பணத்தை கட்டிட்டு தான் வேற சாதியில திருமணம் செய்யனும்னு சொல்லுவீங்க போல
முன்னாள் ராணுவதினர்னு ஒதுக்கீடு,ஆந்திராவில் நாலு வருடம் படித்தேன்னு அங்க ஒதுக்கீடு ,மலை பிரதேசத்தில் பிறந்தவன்னு அந்த மாநிலத்தில் தேர்வு /வேலையில் சேரும் /எழுதும் உரிமை,போலியோவில் பாதிக்கப்பட்டவர் நு/ஒரு கண்ணு தெரியாது என்று இட ஒதுக்கீடு என்று பல ஒதுக்கீடு இருக்கு.
சாதி சொல்ல வேண்டும் என்றோ இல்லை தன உடல் குறைபாட்டையோ கண்டிப்பாக சொல்ல வேண்டும் என்று வலியுறுத்த யாருக்கும் உரிமை இல்லை.
படிப்புல ஒதுக்கீடு வேணாம்,ஆனா வேலையில வேணும்.இல்ல அதுல வேணாம் ஆனா அரசு வீடு ஒதுக்கீட்டுல வேணும்,காஸ் agency எடுக்க வேணும்னு முடிவு எடுக்கற உரிமை சம்பந்தப்பட்ட மனிதருக்கு மட்டும் தான் உண்டு.இன்னிக்கு சாதியை சொல்லவோ நாளை சாதி இல்லாதவன் என்று சொல்லவோ அவனுக்கு முழு உரிமை உண்டு.சொல்ல வேண்டும் என்று கட்டாயபடுத்த பதிவு எழுத தோன்றியதே ஆச்சரியமாக தான் உள்ளது
சாதி இல்லை என்று சொல்ல முழு அதிகாரம்,அப்படி ஒரு தனி பிரிவும் இருக்கிறது

பெயரில்லா சொன்னது…

அருள் அவர்களே

ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஏறி நின்று கொண்டு ’நாங்கெல்லாம் ஆண்ட பரம்பரை’ என்று மார்தட்டிக்கொள்ளும் எவனுக்கேனும் இடஒதுக்கீடு கேட்க அருகதை உண்டா ?

சாதிவெறியாட்டம் போடும் போது ஆண்டபரம்பரை என்கிற திமிரும், இடஒதுக்கீடு கேட்கும் போது நாங்களும் ஒடுக்கப்பட்ட இனம் தான் என்று கூளைக்கும்பிடு போடுவதும் கேவலமாக இல்லை.

ஒரு பக்கம் இப்படி இரட்டை வேடம் போட்டுக்கொண்டு இன்னொரு பக்கம் பாப்பானுக்கும், பார்ப்பனியத்துக்கும் அடியாள் வேலை செய்யும் ஆதிக்க சாதிவெறியர்களுக்கெல்லாம் எதுக்கு இடஒதுக்கீடு ? இன்னும் பலம் பெற்றுக்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஏரி மிதிக்கவா ?

எனவே பார்ப்பனியத்துக்கு அடியாள் வேலை செய்யும், சாதி ஆதிக்கம் செய்யும் ஆதிக்க சாதிகளுக்கு எல்லாம் இடஒதுக்கீடு கூடாது என்பது தான் சரியானதாக இருக்க முடியும். அது தான் ம.க.இ.க வின் நிலைப்பாடும். இதில் என்ன தவறு அருள் அவர்களே ?

Karthik Sambuvarayar சொன்னது…

//உங்களை ஆண்ட சாதி என சொல்லிக்கொள்ளும் பொழுதே// திருத்தி கொள்ளுங்கள். நாங்க ஆண்ட சாதி என்று நாங்களாகவே சொல்லி கொள்ளவில்லை. வரலாறு சொல்கிறது வன்னியகுல க்ஷத்ரியர்களே சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய மன்னர்கள் என்று. நாங்க சேரர்கள் என்பதற்கு ஆதாரமாய் குலசேகர ஆழ்வாரும், வல்வில் ஓரி மற்றும் அரியலூர் மழவராயர்களும், சோழர்கள் என்பதற்கு ஆதாரமாய் தில்லை ஆலயத்தில் சோழருக்கான முடி சூட்டிகொள்ளும் மற்றும் மண்டகப்படி உரிமையும். பல்லவர்கள் என்பதற்கு ஆதாரமாய் உடையார் பாளையம், முகாசா பாரூர், சம்புவராயர், காடவராயர், பல்லவராயர் போன்றவர்களும். பாண்டியர்கள் என்பதற்கு ஆதாரமாய் சிவகிரி மற்றும் ஏழாயிரம் பண்ணை பாண்டியர்களும் திகழ்கிறார்கள். நாங்கள் ஆண்ட சாதி என்பதும் தமிழ்நாட்டு க்ஷத்ரியர் என்பதும் எவராலும் மறுக்க முடியாது.

அருள் சொன்னது…

poovannan கூறியது...

// //அப்ப ஒதுக்கீட்டுல சீட்டு வாங்கி படித்தவங்க ,வேலையில இருக்கிறவங்க அதை விட்டுட்டு/பணத்தை கட்டிட்டு தான் வேற சாதியில திருமணம் செய்யனும்னு சொல்லுவீங்க போல// //

திருமணம் போன்ற தனிமனித உரிமை அளவிலான சாதிமறுப்பு குறித்து இந்த பதிவு குறிப்பிடவில்லை என்பது மேலே தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு என்பது தனிமனித உரிமை அல்ல, அது சமூகத்தின் உரிமை. ஒரு BC/MBC சாதியில் பிறந்தவர் தனது சாதிப்பெயரை கணக்கெடுப்பில் மறைக்கும் போது அது அந்த சாதியில் பிறந்த எல்லோரையும் பாதிக்கிறது. எனவே, சாதிவாரிக் கணக்கெடுப்பில் சாதியை மறுக்கக் கோருவது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானது.

அருள் சொன்னது…

அம்பேத் கூறியது...

// //சாதி ஆதிக்கம் செய்யும் ஆதிக்க சாதிகளுக்கு எல்லாம் இடஒதுக்கீடு கூடாது என்பது தான் சரியானதாக இருக்க முடியும். அது தான் ம.க.இ.க வின் நிலைப்பாடும். // //

'அம்பேத்' என்பது உங்கள் புனைப்பெயரோ, உண்மைப் பெயரோ - ஆனால், உண்மையான 'அண்ணல் அம்பேத்கர்' சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஆதரித்தார்.

'சாதி ஆதிக்கம் செய்யும் ஆதிக்க சாதிகள்' என்று ம.க.இ.க எந்த சாதியை குறிப்பிடுகிறது என்று தெரியவில்லை. இந்த இடத்தில் நீங்கள் வன்னியர்களைக் குறிப்பிடுகிறீர்கள்.

தயவுசெய்து 'சாதி ஆதிக்கம் செய்யும் ஆதிக்க சாதிகள்' என்கிற ஒரு சாதிகள் பட்டியலை ம.க.இ.க தயார் செய்ய வேண்டும் - அந்த சாதிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்ககூடாது என்பதுதான் ம.க.இ.க'வின் நிலைபாடு என பகிரங்கமாக அறிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.

அருள் சொன்னது…

// //முன்னாள் ராணுவதினர்னு ஒதுக்கீடு,ஆந்திராவில் நாலு வருடம் படித்தேன்னு அங்க ஒதுக்கீடு ,மலை பிரதேசத்தில் பிறந்தவன்னு அந்த மாநிலத்தில் தேர்வு /வேலையில் சேரும் /எழுதும் உரிமை,போலியோவில் பாதிக்கப்பட்டவர் நு/ஒரு கண்ணு தெரியாது என்று இட ஒதுக்கீடு என்று பல ஒதுக்கீடு இருக்கு.// //

இந்தியாவில் இரண்டுவிதமான இடஒதுக்கீட்டு முறைகள் உள்ளன.

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு செங்குத்தான இடஒதுக்கீடு (vertical reservation) ஆகும். மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீடு போன்றவை கிடைமட்ட இடஒதுக்கீடு (horizontal reservation) ஆகும்.

இரண்டையும் ஒன்றாக்கி குழப்பாதீர். தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு என்பது செங்குத்தான ஒதுக்கீட்டை மட்டுமே குறிக்கும்.

அதாவது, மாற்றுத்திறனாளி, இராணுவ வீரர், மாநிலத்தில் பிறந்தவர் என்பதெல்லாம் - ஏற்கனவே இருக்கும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு உள்ளே இருக்கிறது. தனியாக வெளியே இல்லை.

In Indra Sawhney vs. Union of India [1992 Supp.(3) SCC 217], the principle of horizontal reservation was explained thus (Pr.812) :

"all reservations are not of the same nature. There are two types of reservations, which may, for the sake of convenience, be referred to as 'vertical reservations’ and 'horizontal reservations’. The reservations in favour of Scheduled Castes, Scheduled Tribes and Other Backward Classes [(under Article 16(4)] may be called vertical reservations whereas reservations in favour of physically handicapped (under clause (1) of Article 16] can be referred to as horizontal reservations. Horizontal reservations cut across the vertical reservations - what is called interlocking reservations. To be more precise, suppose 3% of the vacancies are reserved in favour of physically handicapped persons; this would be a reservation relatable to clause (1) of Article 16. The persons selected against the quota will be placed in that quota by making necessary adjustments; similarly, if he belongs to open competition (OC) category, he will be placed in that category by making necessary adjustments. Even after providing for these horizontal reservations, the percentage of reservations in favour of backward class of citizens remains - and should remain - the same."

http://legalperspectives.blogspot.in/2010/07/vertical-and-horizontal-reservation-law.html

அருள் சொன்னது…

poovannan கூறியது...

// //சாதி சொல்ல வேண்டும் என்றோ இல்லை தன உடல் குறைபாட்டையோ கண்டிப்பாக சொல்ல வேண்டும் என்று வலியுறுத்த யாருக்கும் உரிமை இல்லை.// //

தவறான தகவல். சாதி சொல்ல வேண்டாம் என்பது சாதிவாரிக்கணக்கெடுப்பின் கீழ் BC/MBC/FC பிரிவினருக்கு மட்டும்தான். பட்டியலினப் பிரிவினருக்கு அல்ல. மக்கள்தொகைக் கணக்கெடுப்ப்ன்போது பட்டியலினப் பிரிவினரின் எண்ணிக்கை தெளிவாகக் கணக்கெடுக்கப்படுகிறது.

In each decennial Census since 1951, SCs population have been enumerated strictly in accordance with the Constitution (Scheduled Castes) Order, 1950

http://censusindia.gov.in/Tables_Published/SCST/Introduction.pdf

அதுபோல மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கேட்கப்படுகிறது.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் உண்மைத் தகவலைச் சொல்ல வேண்டும் என்பதுதான் சட்டம். 'எனக்கு சாதி இல்லை, எனக்கு ஊனம் இல்லை' என மறைக்க அனுமதி இல்லை.

பூவண்ணன் சொன்னது…

பட்டியல் சாதியினர் பல லட்சம் பேர் வெறும் கிருத்துவர் என்று சென்சுஸ் எடுக்கும் போது கூறுவதும் உண்டு.
பட்டியல் இனத்தவர் சாதி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று எப்படி கூறுகிறீர்கள்.அவர் சாதியற்றவர் என்று கூறினால் அவரை சாதி கூற வேண்டும் என்று வற்புறுத்தி கூற யாருக்கும் உரிமை இல்லை.சாதி சொல்லவில்லை என்றால் பட்டியல் இனத்தவரை மட்டும் கணக்கேடுப்பவர் எப்படி கண்டுபிடிப்பார்.
மகிழ்நன் கேட்ட நியாயமான கேள்விக்கு ஹெல்மெட் போடாத குற்றத்துக்கு என்று கிண்டல் பதில் தேவையா
தேர்தல் அரசியலில்/அரசு வேலைகளில் நிற்க வேண்டுமானால் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.ஊழல் குற்றசாட்டிலோ ,வேறு வழக்குகளிலோ இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் நிற்க முடியாது என்று விதி உண்டு. அது போல தீண்டாமை கடைபிடிக்கும் சாதிகள் /வசிக்கும் ஊர்களை சேர்ந்தவர்களுக்கு அரசு சலுகைகள் மறுக்கப்பட வேண்டும் எனபது நியாயமான கோரிக்கை தானே .
தீண்டாமை குற்றம்.அதை கடைபிடித்தால் சலுகைகள் கிடைக்காது என்றால் அது விரைவில் ஒழிக்கபடாதா

தாழ்த்தப்பட்ட,பழங்குடியின மக்களுக்கு சட்டமன்றங்கள்,நாடாளுமன்றங்களிலும் அவர்கள் விகிதாசாரப்படி இட ஒதுக்கீடு உண்டு. தமிழகத்தில் அவர்களின் இடங்கள் 42 இல் இருந்து 44 ஆக மக்கள் தொகை அடிப்படையில் உயர்ந்து உள்ளது. அவர்களிலுள் சிலர் சாதி இல்லை என்று சொன்னால் பாதிப்பு அதிகம் தான்
அவர்களையும் பிற்ப்படுத்தப்பட்ட, மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்புகளையும் ஒன்றாக கருத முடியாது.அவர்கள் தனியாக செயிப்பது கடினம்,அவர்களின் மீது அடக்குமுறைகள்,மற்ற சமூகத்தினரின் கொடுமைகள் அதிகம் என்பதால் அவர்களுக்கு அவர்கள் மக்கள் தொகை அளவிற்கு இட ஒதுக்கீடு வழங்க படுகிறது.அதே போல் பிற்படுத்தப்பட்ட மக்களும் கேட்பது நியாயமல்ல.பிற்படுத்தப்பட்ட மக்களில் பல பெருநிலகிழார்களும்,முன்னாள் சமீன்தார்களும் உண்டு.அதனால் தான் அவர்கள் ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் ஒதுக்கீட்டிற்கு வெளியே செல்கிறது.பல ஆயிரம் சாதிகள் சேர்ந்து சில சதவீதம் தான் மக்கள் தொகை இருக்கும்.அவர்களுக்கு மொத்தமாக ஒரு சதவீதம் தான் என்று சொல்வது சரியா.
விகிதாசாரப்படி மருத்துவர்,பொறியாளர்,நீதிபதி வேண்டும் என்றால் விகிதாசாரப்படி வீடுகள்,நிலம்,முந்திரிதோப்புகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுக்க தயாரா.ஊர்,சேரி இரண்டிலும் விகிதாசாரப்படி வீடுகளை பிரித்து கொடுக்க தயாரா.அப்படி நிலங்கள் ,வீடுகள் பிரிக்கப்பட்டால் தீண்டாமை,வன்கொடுமைகள் தன்னாலேயே ஒழிந்து விடுமே
பட்டியல் இனத்தவரிலும் ஒரு சில குழுக்கள் மற்றவர்களை விட அதிக இடங்களை எடுத்து கொண்டால் BC /MBC பிரித்து போல மகாதலித் ,ஒன் டூ என்று பிரித்து ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இரண்டு காலும் இல்லாதவனும்,ஒரு கால் இல்லாதவனும் ஒன்று கிடையாது.பட்டியல் இனத்தவர் போலவே பிற்பட்ட வகுப்புக்கும் விகிதாசார அளவில் ஒதுக்கீடு/சட்டமன்ற நாடாளுமன்ற ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்பது நிலங்களை விகிதாசார அடிப்படையில் பிரித்த பிறகு கேட்பது தான் ஞாயம்.
அதிக எண்ணிகையில் இருக்கும் சாதி ஆண்ட இனம் என்று கூறுவது வேடிக்கை. உலகில் எங்குமே அது சாத்தியம் கிடையாது.மனைவி,கூத்தியாள் என்று அனைவருக்கும் பிறந்த ராஜபுத்திரர்கள் மற்ற மாநிலங்களில் இரண்டு மூன்று சதவீதத்தை தாண்டாது.ஆனால் இங்கு வன்னியர்கள்,முக்குலத்தோர்,தேவேந்திரர்,நாடார்@பாண்டியன் என்று ஆண்ட இனம் என்று சொல்லிகொள்வோர் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் இருப்பது நகைச்சுவை தான்.பொய்யான நிரூபிக்கபடாத,சாத்தியமில்லாத கூற்றுக்களை பிடித்து தொங்கி கொண்டு கூழுக்கும் ஆசை,இட ஒதுக்கீடிர்க்கும் ஆசை என்று இருப்பது சரியா

பூவண்ணன் சொன்னது…

அன்புள்ள அருள்
சாதி ஒதுக்கீடு மற்றும் சாதி கணக்கெடுப்பு இரண்டையும் நான் ஆதரிக்கிறேன் ஆனால் சாதி இல்லை,வேண்டாம் என்று யார் கூறினாலும் வரவேற்க வேண்டியாது தானே சரி.அவர்களை திட்டுவது சரியா
சாதியை சொல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கலாம்.ஆனால் நீ ஒதுக்கீட்டால் பெற்ற பயன்களை திருப்பி கொடு என்று மிரட்டுவது சரியா

பல்வேறு ஒதுக்கீடுகள் உள்ளன.முன்னாள் ராணுவத்தினர்,மாற்று திறநாளிகள்,மாநில வாரி ஒதுக்கீடுகள் எனபது சாதிகளை கடந்த அனைத்து சாதிகளுக்கும் கிடைக்கும் ஒதுக்கீடுகள் .மாநிலங்களில் அவை vertical அல்லது horizontal இரண்டில் எதன் கீழும் வரலாம்.அந்த ஒதுக்கீட்டை பயன்படுத்தியவர்கள் அதை கண்டிப்பாக கூற வேண்டும் என்று அரசும் கூற முடியாது,நீங்களும் சொல்ல முடியாது(இட ஒதுக்கீட்டை பயன்படுத்தினால் சாதி இல்லை என்று சொல்ல கூடாது) எனபது தான் என் கூற்று
சாதி மட்டும் அல்ல மதம் இல்லை என்று கூறவும் உரிமை உண்டு.கணக்கெடுப்பில் சாதி,மதத்தை கூற யாரையும் கட்டாயபடுத்த முடியாது .
கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றும் கணக்கெடுப்பில் கூறலாம்

பெயரில்லா சொன்னது…

////'சாதி ஆதிக்கம் செய்யும் ஆதிக்க சாதிகள்' என்று ம.க.இ.க எந்த சாதியை குறிப்பிடுகிறது என்று தெரியவில்லை. இந்த இடத்தில் நீங்கள் வன்னியர்களைக் குறிப்பிடுகிறீர்கள்.///

என்ன கொடுமை இது இந்தியாவில் இருந்துகொண்டு இப்படி ஒரு கேள்வியா ? எந்த ஆதிக்க சாதி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருக்கிறது ? அல்லது உங்களுடைய வன்னிய சாதி இந்துக்களிடம் தான் சாதிவெறி இல்லையா ? தற்போது மகாபலிபுரத்தில் உங்களுடைய தலைவர்களில் ஒருவரான குரு பேசினாரே அதற்கு என்ன பெயர் ?



///தயவுசெய்து 'சாதி ஆதிக்கம் செய்யும் ஆதிக்க சாதிகள்' என்கிற ஒரு சாதிகள் பட்டியலை ம.க.இ.க தயார் செய்ய வேண்டும் - அந்த சாதிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்ககூடாது என்பதுதான் ம.க.இ.க'வின் நிலைபாடு என பகிரங்கமாக அறிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.///

அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ’இடஒதுக்கீடு ஒரு மார்க்சிய லெனினிய பார்வை’ என்கிற ம.க.இ.க வின் வெளியீட்டை வாங்கி படியுங்கள்

Karthik Sambuvarayar சொன்னது…

//பொய்யான நிரூபிக்கபடாத,சாத்தியமில்லாத கூற்றுக்களை பிடித்து தொங்கி கொண்டு கூழுக்கும் ஆசை,இட ஒதுக்கீடிர்க்கும் ஆசை என்று இருப்பது சரியா// வன்னியர்கள் ஆதாரமற்ற விசயங்களை ஒரு போதும் சொல்வதில்...எதை வைத்து ஆதாரமற்ற நிருபிக்கபடாத என்று சொல்கிறீர்கள்? அவைகள் பொய் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? நான் மேல் கூறிய அணைத்து விசயங்களுக்கும் ஆதாரங்கள் உண்டு..உங்களுக்கு தெரியவில்லை என்று சொல்லுங்கள்.வெறுமனே போற போக்குல ஆதாரம் இல்லை என்று கூறி காமெடி செய்யாதீர்கள்.

Karthik Sambuvarayar சொன்னது…

//தற்போது மகாபலிபுரத்தில் உங்களுடைய தலைவர்களில் ஒருவரான குரு பேசினாரே அதற்கு என்ன பெயர் ?// வீரப்பன் மகள்களை பசங்களை விட்டு ஏமாற்றி திருமணம் செய்ததே ஒரு கும்பல் அதற்கு என்ன பெயர்? காடுவெட்டியார் பேசியதில் என்ன தவறு?

நம்பள்கி சொன்னது…

அருள் ஐயா, உங்களுக்காக, இன்று...

அறிவில்லாத அமெரிக்கா நாய்; இரண்டு கால் நாயை சொல்கிறேன்!
இந்தியாவில் புகைபிடித்தால் தப்பேயில்லை-பகுதி-3.

பூவண்ணன் சொன்னது…

கார்த்திக் அவர்களே
ராஜாக்கள் என்பதே ஒரு தனி ஜாதி

http://www.frontlineonnet.com/fl1812/18121270.htm
நேபாள ராஜா ஒரு பெண்ணை மணப்பதற்காக எதிர்ப்பு வந்ததால் தன குடும்பத்தினரையே கூண்டோடு அழித்தாரே
அவர் காதலித்த பெண்ணும் ராஜா வம்சம் தான்.சிந்தியா வம்சத்தை சேர்ந்த அவர் முன்னோர் யாரோ நாட்டியமாடும் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த திருமணதிற்கு அவர் தாய் எதிர்ப்பு தெரிவித்தார்.
http://www.telegraph.co.uk/news/worldnews/asia/nepal/1311387/A-row-over-love-that-ended-in-regicide.html
சாதாரண ரஜபுத்திறரை திருமணம் செய்த முதல் பெண் வாரிசின் வாரிசுக்கு பட்டம் கட்ட கூடாது என்று ராஜஸ்தான் ராஜாவுக்கு இந்த 21 ஓம் நூற்றாண்டில் வரும் எதிர்ப்பை பாருங்கள்
http://www.business-standard.com/india/news/games-ex-royals-play/435497/

முதல் முதலாக பூட்டான் ராஜா ஒரு சாதாரண பெண்ணை சென்ற ஆண்டு தான் மணந்தார்
http://today.msnbc.msn.com/id/44885097/ns/today-today_news/t/bhutans-dragon-king-marries-his-commoner-bride/
ப்ளூ blooded என்று ராஜாக்கள் ராஜாக்களோடு மட்டும் தான் சம்பந்தம் செய்வார்கள்.சிங்கள ராஜாக்களானும் சரி,வேற்று மதத்தை சார்ந்த ராஜாக்கள் ஆனாலும் சரி.
சாதாரண குடும்பத்தில் பெண் எடுத்த வாரிசுகளை குறைவாக பார்ப்பார்கள்.அவர்களுக்கு பட்டம் கட்டுவது வெகு அபூர்வம்.அவர்கள் சாதி பார்த்து திருமணம் செய்ய மாட்டார்கள்.அலெக்சாண்டர் தளபதியாக வந்த செளுகுஸ் இங்குள்ள ராஜாகளோடு திருமண தொடர்பு ஏற்படுத்தி கொண்டான்.அரச குடும்பத்தில் தூர தேசத்தை சார்ந்த ராஜவம்சதோடும் பெண் எடுப்பதும் கொடுப்பதும் இன்றுவரை உண்டு.
பாரதியாரின் தொகுப்பு என்னிடம் உள்ளது
தென்னாப்ரிக்கவிற்க்கு தோட்ட தொழிலாளர்களாக அழைத்து செல்லப்பட்ட பல லட்சம் அடிமைகளுள் பெரும்பாலோர் வன்னியர்கள்.அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்று வன்னியர் சங்கம் இங்கு உண்ணாவிரதம் இருந்து அரசின் கவனத்தை ஈர்க்க போராடுகிறது.அதற்க்கு பாரதியார் ஆதரவு தெரிவித்து அவருடைய இதழில் எழுதி இருக்கிறார்.
மிகவும் பின்தங்கிய நிலையில் பல லட்சம் மக்கள் நூற்றாண்டுகளுக்கு முன் வேறு நாடுகளுக்கு அடிமைகளாக சென்ற பெரும்பான்மையான மக்களை கொண்ட சமூகத்தை ஆண்ட சாதி என்று சொல்வது ஏமாற்று வேலை இல்லையா.குறிப்பிட்ட குடும்பம் ராஜா வம்சமாக இருப்பதற்கும் சாதிக்கும் ஒரு தொடர்பும் கிடையாது

Karthik Sambuvarayar சொன்னது…

//தென்னாப்ரிக்கவிற்க்கு தோட்ட தொழிலாளர்களாக அழைத்து செல்லப்பட்ட பல லட்சம் அடிமைகளுள் பெரும்பாலோர் வன்னியர்கள்.அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்று வன்னியர் சங்கம் இங்கு உண்ணாவிரதம் இருந்து அரசின் கவனத்தை ஈர்க்க போராடுகிறது.அதற்க்கு பாரதியார் ஆதரவு தெரிவித்து அவருடைய இதழில் எழுதி இருக்கிறார்.
மிகவும் பின்தங்கிய நிலையில் பல லட்சம் மக்கள் நூற்றாண்டுகளுக்கு முன் வேறு நாடுகளுக்கு அடிமைகளாக சென்ற பெரும்பான்மையான மக்களை கொண்ட சமூகத்தை ஆண்ட சாதி என்று சொல்வது ஏமாற்று வேலை இல்லையா.குறிப்பிட்ட குடும்பம் ராஜா வம்சமாக இருப்பதற்கும் சாதிக்கும் ஒரு தொடர்பும் கிடையாது//..

சாதி என்பதே தொடர்பில்லாமல் வராது..அப்புறம் மன்னர் குடும்பத்துக்கும் சாதிக்கும் தொடர்பில்லை என்று சொல்கிறீர்கள் ஒரே சாதியில் ஒருவர் மன்னராக ஒருவர் படைவீரராக இருந்தாலும் அந்த படைவீரருக்கு கிடைக்கும் மரியாதை மற்ற சாதி காரகளுக்கு கிடைக்காது.

அந்நியர்கள் படையெடுப்பில் ஆட்சி செய்தவர்கள் வறுமையில் வீழ்ந்தால் அவர்கள் ஆட்சியே செய்யவில்லை என்று சொல்வீர்களா? நாங்க ஆண்ட சாதி என்று தானே சொல்கிறோம்...எங்கள் சாதிக்காரர்கள் பலர் ஆட்சி செய்து இருக்கிறார்கள். படைவீரர்கள், படை தளபதிகள் மற்றும் மன்னர்களாய் இருந்தவர்கள் வன்னியர்கள். அந்த மன்னரும் படைவீரரும் ஒரே சாதி..மன்னருக்கும் படைவீரருக்கும் எந்த தொடர்பும் இல்லையா? வரலாறு தெரியாமல்..வியாக்கியானம் பேசும் உங்களை போன்றவர்களின் வேலை உண்மையை பொய் என்பதும் பொய்யை உண்மை என்பதும் தான்.. வன்னியர்கள் ஆண்ட சாதி என்பதை வரலாறு சொல்கிறது..நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை மாறாக நீங்க தான் வரலாறு அறியாதவராக கருதப்படுவீர்கள்.
வன்னியர்கள் ஆண்ட சாதி என்று உங்கள் புத்திக்கு தெரிகிறது ஆனால் வன்னியருக்கு எதிரான உங்களின் சாதி வெறி தான் அதை ஏற்று கொள்ள மறுக்கிறது என்பது உங்கள் பதிவுகளில் இருந்து புலனாகிறது. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. அது போல வன்னியர்கள் ஆண்ட பரம்பரை என்கிற உண்மை வரலாற்று பக்கங்களில் இருந்து ஒருபோதும் மறையாது..எவராலும் மறைக்கவும் முடியாது.

Karthik Sambuvarayar சொன்னது…

//சமூகத்தை ஆண்ட சாதி என்று சொல்வது ஏமாற்று வேலை இல்லையா.//

கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்கள் தான் என்பது உங்களுக்கு தெரியாதா? வன்னியர்கள் ஆண்ட சாதி என்பது ஏமாற்று வேலை இல்லை..ஆனால் நடுநிலையாளர் போல செயல்பட்டு வன்னியருக்கு எதிரான சாதி வேறு கொண்டிருக்கும் உங்களை போன்றவர்கள் செயல் தான் ஏமாற்று வேலை.

Karthik Sambuvarayar சொன்னது…

வன்னியர்கள் ஆண்ட பரம்பரை என்பதற்கு இருக்கும் பல்வேறு ஆதாரங்களில் ஒரு சில..இவைகளை உங்களால் மறுக்க முடியுமா?

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_22.html

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_70.html

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_2068.html

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_9868.html

http://annalpakkangal.blogspot.in/2012/06/blog-post.html

கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) சொன்னது…

///////////poovannan கூறியது...

கார்த்திக் அவர்களே
ராஜாக்கள் என்பதே ஒரு தனி ஜாதி
///////////// அப்படியானால் திருவண்ணாமலை தலைநகராக கொண்டு ஆண்ட சம்புவராயர் மன்னர் இல்லையா ? சோழர் ,பாண்டியனை சிறை வைத்த கோப்பெருஞ்சிங்கன் காடவராயர் மன்னர் இல்லையா ? அரியலூர் மழவராயர் வந்த வம்சம் மன்னர் வம்சம் இல்லையா ? கருணாகர தொண்டைமான் மன்னர் இல்லையா .......இவர்கள் எல்லாம் வன்னியர்தானே ...இவர்கள் எல்லாம் மன்னர் இல்லையா ..................ராஜாக்கள் தனி சாதியம் ...ஹாஹா பெரும் நகைச்சுவை .....தமிழகத்தில் வன்னியர், மறவர் ,முத்தரையர் ஆகிய சாதிகள் ஆண்ட சாதிகளே

பூவண்ணன் சொன்னது…

ப்ளூ blooded என்றால் என்ன என்று கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் தோழர்களே
சம்பூவராயர் தொண்டைமான் ராஜா வீட்டிலும் பெண் எடுப்பார்,கொடுப்பார்,சண்டைபோட்டு செயித்து அவர் இல்ல பெண்களை கட்டுவார்,இல்லை தோற்றாலும் சம்பந்தி ஆவார்.
சாலுக்கியரோடும் ,கிருஷ்ணா தேவராயரோடும் ,ஏன் சிந்தியா ராஜாகளோடும் சம்பந்தம் வைத்து கொள்வார்.
ஆனால் அரச குடும்பமல்லாத குடும்பத்தோடு சம்பந்தம் செய்து கொள்ள மாட்டார். அப்படி பலரை மணந்து கொண்டாலும் அவர்கள் ராணி ஆகவும் மாட்டார்கள்
ராஜாக்களின் படையில் பல சாதியை சார்ந்த படை வீரர்கள் இருப்பார்கள்.
ஆட்சி போன பின் கூட்டம் சேர்க்க ,தன பின் சிலர் வர முன்னாள் ராஜாக்களின் பல குடும்ப வாரிசுகள் அந்த பகுதியில் இருக்கும் சாதிகளோடு அடையாளம் கட்டி கொள்கிறார்கள்.
உங்கள் கூற்றுப்படி பார்த்தால் அனைத்து இஸ்லாமியர்களும் அக்பரின் பரம்பரை,ஆற்காட்டு நவாபின் பரம்பரை,ஆங்கிலோ இந்தியர்கள் அனைவரும் இங்கிலாந்து அரச பரம்பரை ஆண்ட இனம் என்று கூறி கொள்ளலாம்.
சச்சின் இந்தியர் என்பதால் இந்தியர்கள் அனைவரும் ஒரு நூற்றாண்டு கழித்து நாங்கள் அனைவரும் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த டெண்டுல்கரின் வாரிசுகள் என்று கூறி கொள்ளலாம்
அடிமைகளும் ராஜாவாக,யானை மாலை போட்டும் ராஜாவாக ஆனவர்களும் உண்டு.அவர்கள் பிறந்த சாதி அதனால் ஆண்ட பரம்பரை ஆகி விடுமா.
ஒரு நாட்டில் ஒன்றோ இரண்டோ ராஜா குடும்பம் இருந்தால்/சொல்லி கொண்டால் சரி .பாதிக்கு மேல் நாங்கள் ராஜபரம்பரை என்றால் எங்கே போய் முட்டி கொள்வது

கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) சொன்னது…

//////poovannan கூறியது...ஒரு நாட்டில் ஒன்றோ இரண்டோ ராஜா குடும்பம் இருந்தால்/சொல்லி கொண்டால் சரி .பாதிக்கு மேல் நாங்கள் ராஜபரம்பரை என்றால் எங்கே போய் முட்டி கொள்வது ////// அட ஆண்டவா ...... இதில் காடவராயர், சம்புவராயர் தங்களை பள்ளி சாதி என்று சொன்ன கல்வெட்டு ஆதாரமும் உண்டு ..... இந்த சாதியில் வந்த மன்னர்களை ,அதே சாதியை சேர்ந்தவர்கள் எங்கள் சாதி மன்னர் என்று சொல்வதிலும் தப்பில்லை .........அதே மன்னர்களை தமிழர் என்று அனைவரும் போற்றினாலும் தவறில்லை ......அப்படிதான் சச்சினை அவர் சாதி ஆட்கள் உரிமை கொண்டதின் பெருமை பட்டாலும், இந்தியர்கள் ஒட்டு மொத்தமாக பெருமை பட்டாலும் தவறில்லை ........ அது என்ன பாதிக்கும் மேற்ப்பட்ட சாதி ....மறவ்ருக்கு பூலித்தேவன் , அகமுடையாருக்கு மருது பாண்டி , வன்னியருக்கு கருணாகர தொண்டைமான்,சம்புவராயர், காடவராயர், சிவகிரி பாண்டிய வன்னியனார் , உடையார்பாளையம் , அரியலூர் மழவராய்ர் ,முகாசா பரூர் கச்சிராயர் ,பிச்சாவரம் சோழனார் , பெங்களுர் திகளர் குல சத்திரியர் , ஆந்திராவில் அக்னி குல சத்திரியர் என அவர்கள் அனைவரும் தங்களுக்குள்ள பெருமையை சொல்கிறார்கள் அவ்ளோதான் .............தெலுங்கர்கள் கட்டபொம்மனும் , முத்தரையர் களப்பிரர்க்கும் உரிமை கொள்வதில் தவறில்லை ...இவை அனைத்துக்கும் ஆதாரம் உண்டு ....இவை அனைத்தும் உறுதி செய்யப்பட்ட ஒன்று ... ஒரு அரசனை தமிழன் என்று சொன்னால் பெருமை படும் சிலர், அதே மன்னர் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என்ற கல்வெட்டு ஆதாரம் மூலம் சொன்னால் , அவர்களுக்கு வருவது பொறாமை ..உடனே சாதியம் பேசுகிறார்கள் என்று கத்துவார்கள் ......... அனைத்து சாதியும் படையில் இருந்தால் ஏன் பட்டங்கள் மட்டும் வன்னியர், முக்குலத்தோர் போன்ற குறிப்பிட்ட சாதிகளுக்கு மட்டும் இருக்கிறது ....ஏன் மற்ற சாதிகளுக்கு பட்டங்கள் இருப்பதில்லை ?

Karthik Sambuvarayar சொன்னது…

//ராஜாக்களின் படையில் பல சாதியை சார்ந்த படை வீரர்கள் இருப்பார்கள்.
ஆட்சி போன பின் கூட்டம் சேர்க்க ,தன பின் சிலர் வர முன்னாள் ராஜாக்களின் பல குடும்ப வாரிசுகள் அந்த பகுதியில் இருக்கும் சாதிகளோடு அடையாளம் கட்டி கொள்கிறார்கள்.//

மன்னர்கள் மன்னர்களுக்கு தான் பெண் கொடுப்பார்கள் என்பது உங்கள் கருத்து.. அதை தான் சொல்கிறோம்..க்ஷத்ரியர்கள் க்ஷத்ரியர்களுக்கு தான் பெண் கொடுப்பார்கள். சோழர்கள் சாலுக்கியர்களுக்கு பெண் கொடுத்தார். பல்லவர் சோழருக்கு பெண் கொடுத்தார். இப்படியாக திருமண உறவு கொண்ட சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கியர்கள் தற்போது "வன்னியர்குல க்ஷத்ரியர்" என்று அழைக்கபடுகிரார்கள். பிச்சாவரம் சோழர்கள் வன்னியர்கள்.. அவர்கள் உடையார் பாளையம் (வன்னியர்கள்) பல்லவர்களோடு மன உறவு கொள்கிறார்கள்.. இந்த மன்னர்கள் ஒன்றோடு ஒன்று காலத்து அவர்கள் அனைவரும் ஒரே சமூகமாக வன்னியகுல க்ஷத்ரியர்கள் என்று அழைக்கபடுகிரர்கள். வன்னியர் என்றால் அரசன் என்று பொருள். மேலும் நீங்க சொல்வது போல எல்லோரும் படைபிரிவில் இருந்தாலும் க்ஷத்ரியர் ஆகிவிட முடியாது என்கிறது தொல்காப்பிய மரபு.

போரில் ஈடுபடுவதனால் அல்லது அரசாட்சிக்கு வந்துவிடுவதால் மட்டும் க்ஷத்ரிய அந்தஸ்து கிடைத்து விடாது. மன்னர் கொடுப்பாராயின் இடையிரு வகையோருக்கும் படையும் ஆயுதமும் வழங்கப்படும் என்பது தொல்காப்பியம் குறிப்பிடும் மரபு. இருப்பினும் அவர்கள் வைசியர்களாகவும் சூத்திரர்களாகவுமே இருப்பார்களேயன்றி க்ஷத்ரியர் ஆகிவிடமுடியாது. அரசன்தான் அனைத்தையும் முடிவு செய்பவன் என்பதையும், பார்ப்பனர்கள் அல்ல என்பதையும் வள்ளுவர் தெளிவாக எடுத்துரைக்கிறார். "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் /நின்றது மன்னவன் கோல்” என்பது குறள். இதன் பொருளை உணர்ந்தால், சமூகத்தின் நன்மைகளுக்கு மட்டுமல்ல தீமைகளுக்கும் க்ஷத்ரியர்கள் பொறுப்பேற்க வேண்டிய கடமை உண்டு.

க்ஷத்ரியர் என்பது தனி சாதி. தமிழ்நாட்டில் க்ஷத்ரிய அந்தஸ்து கொண்ட ஒரே சாதி வன்னியகுல க்ஷத்ரியர்கள் மட்டுமே.

Karthik Sambuvarayar சொன்னது…

//அடிமைகளும் ராஜாவாக,யானை மாலை போட்டும் ராஜாவாக ஆனவர்களும் உண்டு.அவர்கள் பிறந்த சாதி அதனால் ஆண்ட பரம்பரை ஆகி விடுமா.
ஒரு நாட்டில் ஒன்றோ இரண்டோ ராஜா குடும்பம் இருந்தால்/சொல்லி கொண்டால் சரி .பாதிக்கு மேல் நாங்கள் ராஜபரம்பரை என்றால் எங்கே போய் முட்டி கொள்வது//
ஏதும் அறியாத உங்களுக்கு விளக்கம் சொல்வதற்கு நாங்க தான் முட்டி கொள்ள வேண்டும்.

பாதிக்கு மேல் அல்ல வன்னியர்கள் அனைவருமே ஆண்ட சாதிதான்.. காரணம் ஒவ்வொரு வன்னியரும் உறவினர்கள்.

க்ஷத்ரியர் என்பவர்களே ஆட்சி செய்பவர்கள் அரச குலம் என்று தான் அர்த்தம்..

Karthik Sambuvarayar சொன்னது…

உங்களை போன்ற எந்த பெருமைகளும் இல்லாத சாதியை சேர்ந்தவர்களுக்கு ஆண்ட பரம்பரை வன்னியர்கள் மீது பொறாமை வருவது இயல்பு தான். என்ன செய்வது... அதற்காக ப்ளூ ப்ளூட்...ப்ளாக் ப்ளூட் என்று விளக்கங்கள் கொடுத்து உங்கள் மனதை நீங்களே தேற்றி கொள்கிறீர்கள்... :)

பூவண்ணன் சொன்னது…

செட்டி நாட்டரசர் என்று இன்றும் இருக்கிறார்கள்.அதனால் செட்டியார் எல்லாம் ராஜாக்களா
ஜான்சி ராணி லக்ஷ்மி பாய்,பேஷ்வாக்கள் பிராமணர்கள்.அதனால் அத்தனை பிராமணர்களும் ராஜாக்களா
நீங்கள் கூறும் சம்பூரவராயர் ,மரைக்காயர்,மன்றாயர் போன்றோர் லட்சக்கணக்கில் தென்னப்ரிக்கவிர்க்கு அழைத்து செல்ல பட்ட போது என்ன செய்தார்கள்.
தன சாதி என்று சொத்துக்களை விற்று காப்பாற்றினார்களா .அப்போதும் சொத்து பத்தோடு தானே இருந்தார்கள்.ஆண்ட சாதி எப்படி அந்த நிலைக்கு வந்தது. ராஜாக்கள்,மற்றும் சில சமீன்தார்கள் இருக்கும் போது பெரும்பான்மையானோர் எப்படி ஏழ்மையில் விழுந்தார்கள்
ராஜ குடும்பங்கள் வேறு மொழியை சேர்ந்தவர்களோடு கூட திருமண உறவு கொள்ளும் என்று கூறினால் ஆமாம் எல்லாரும் ராஜாக்கள் தான்,எல்லாரும் எங்கள் சாதி தான் என்று பதில் கூறுவது உங்கள் நகைச்சுவை உணர்வை காட்டுகிறது.
நாயக்கர் என்று தெலுகு பேசும் மக்களும் நாட்டை ஆண்டார்கள்.நாயக்கர்,நாய்டு ,ரெட்டி எல்லாம் ஒன்றாம் அப்படியானால் இன்னுமொரு இருவது சதவீதம் ஆண்ட பரம்பரை ஆகிறது
ஒரு சமீந்தாரின் கீழ் ஆயிரம் குடும்பங்கள் கூலி வேலை செய்கின்றன.அதில் சமீந்தாரின் சாதியை சேர்ந்த குடும்பங்கள் 300 ,400 இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்.அவர்கள் சமீன் பரம்பரை ஆகி விடுவார்களா.இப்படி கூட பேச சிலர் பேர் இருப்பது மிகவும் ஆச்சரியத்தை தருகிறது

Karthik Sambuvarayar சொன்னது…

//ஒரு சமீந்தாரின் கீழ் ஆயிரம் குடும்பங்கள் கூலி வேலை செய்கின்றன.அதில் சமீந்தாரின் சாதியை சேர்ந்த குடும்பங்கள் 300 ,400 இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்.அவர்கள் சமீன் பரம்பரை ஆகி விடுவார்களா.இப்படி கூட பேச சிலர் பேர் இருப்பது மிகவும் ஆச்சரியத்தை தருகிறது//


தற்போது ஜெயலலிதா முதல்வராக இருக்கிறார் ஆனால் அதே பார்பன சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பலர் சமையல்காரர்களாக இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் பார்பனர்கள் இல்லை என்றோ ஜெயலலிதாவுக்கு உறவில்லை என்றோ சொல்ல முடியுமா? அதே போல கருணாநிதி குடும்பம் ஆசியாவிலே பணக்கார குடும்பமாக இருக்கிறது ஆனால் தற்போதும் அவரது சாதியினர் மேளம் வாசித்து பிழைப்பு நடத்துகின்றனர் அவர்கள் கருணாநிதி சாதி இல்லை என்றோ கருணாநிதிக்கு உறவுக்காரராக இல்லை என்றோ சொல்ல முடியுமா? நீங்கள் சொல்வது போல் இவ்வளவு வசதியோடு இருக்கும் ஜெயலலிதா ஏன் கூலிக்கார பார்பனர்களை கைதூக்கி விடவில்லை? கருணாநிதி ஏன் இன்றும் வறுமையில் இருக்கும் அவர் சாதி இசை வேள்ளலர்களை முழுமையாக வறுமையில் இருந்து மீட்கவில்லை? எல்லா சாதியிலும் பணக்காரனும் உண்டு ஏழையும் உண்டு. அதற்காக உறவுகள் இல்லை என்று ஆகாது. பணம் இருப்பதால் மட்டும் வேற்று சாதியினர் உறவாகிவிட முடியாது.

Karthik Sambuvarayar சொன்னது…

//ஒன்றாம் அப்படியானால் இன்னுமொரு இருவது சதவீதம் ஆண்ட பரம்பரை ஆகிறது
ஒரு சமீந்தாரின் கீழ் ஆயிரம் குடும்பங்கள் கூலி வேலை செய்கின்றன.அதில் சமீந்தாரின் சாதியை சேர்ந்த குடும்பங்கள் 300 ,400 இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்.அவர்கள் சமீன் பரம்பரை ஆகி விடுவார்களா.இப்படி கூட பேச சிலர் பேர் இருப்பது மிகவும் ஆச்சரியத்தை தருகிறது//

தற்போது ஜெயலலிதா முதல்வராக இருக்கிறார் ஆனால் அதே பார்பன சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பலர் சமையல்காரர்களாக இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் பார்பனர்கள் இல்லை என்றோ ஜெயலலிதாவுக்கு உறவில்லை என்றோ சொல்ல முடியுமா? அதே போல கருணாநிதி குடும்பம் ஆசியாவிலே பணக்கார குடும்பமாக இருக்கிறது ஆனால் தற்போதும் அவரது சாதியினர் மேளம் வாசித்து பிழைப்பு நடத்துகின்றனர் அவர்கள் கருணாநிதி சாதி இல்லை என்றோ கருணாநிதிக்கு உறவுக்காரராக இல்லை என்றோ சொல்ல முடியுமா? நீங்கள் சொல்வது போல் இவ்வளவு வசதியோடு இருக்கும் ஜெயலலிதா ஏன் கூலிக்கார பார்பனர்களை கைதூக்கி விடவில்லை? கருணாநிதி ஏன் இன்றும் வறுமையில் இருக்கும் அவர் சாதி இசை வேளாளர்களை முழுமையாக வறுமையில் இருந்து மீட்கவில்லை? எல்லா சாதியிலும் பணக்காரனும் உண்டு ஏழையும் உண்டு. அதற்காக உறவுகள் இல்லை என்று ஆகாது. பணம் இருப்பதால் மட்டும் வேற்று சாதியினர் உறவாகிவிட முடியாது. வறுமையில் வாழ்ந்தாலும் க்ஷத்ரியன் க்ஷத்ரியனே.

பூவண்ணன் சொன்னது…

இவர்கள் எல்லாம் வோட்டு கேட்டு ஆட்சிக்கு வந்தவர்கள்.அவர்களுக்கு ஒரு சாதி உண்டு.அவர்கள் குடும்பத்தில் ஒரே சாதியில் திருமணம் செய்யும் வழக்கம் இருந்த சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள்.அவர்களே பதவி வந்து விட்டால் செய்வதை பாருங்கள்

இப்ப ஜெயலலிதா இருக்கிறார்,கள்ளர் வகுப்பை சார்ந்தவரை தத்து எடுத்து கொள்கிறார்.நூறு கோடி செலவு செய்து திருமணம் செய்து வைக்கிறார் .அவர் பணம் பிராமணர்களுக்கு செல்கிறதா இல்லை கள்ளர்களுக்கு செல்கிறதா
கலைஞரின் குடும்பத்தில் ராஜாதி அம்மாள்,அழகிரியின் மனைவி ,அவர் பிள்ளைகளின் மனைவி ,ஸ்டாலின் பிள்ளைகளின் மனைவி ,மாறனின் குடும்பம் என்ன சாதி.அவர்கள் வாரிசுகளா இல்லை ஏழ்மையில் உழலும் மேளம் அடிப்பவர்கள் அவர் வாரிசுகளா
இசை வெள்ளாளர் என்பதால் சன் டிவி பங்குகள் அனைத்து இசைவெல்லாளருக்கும் உண்டா இல்லை வேறு சாதிகளை சார்ந்த கலாநிதியின் மனைவி,தயாநிதியின் மனைவி,அவர்கள் சகோதரியின் பாகிஸ்தானிய கணவருக்கு உண்டா
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜ ராஜபுத்திரர்.ராஜ வம்சம்.அவர் கணவர் சாட் இனத்தவர்,மருமகன் குஜ்ஜர் இனத்தவர். எல்லரும் பெரும் பணக்காரர்கள்
முலயாமின் மகன் இன்றைய முதல்வர் மனைவி ராவத் எனப்படும் ராஜபுத்திர சாதி.
ராஜசேகர் ரெட்டின் மருமகன் பிராமணராக பிறந்து கிருத்துவ மதத்தை தழுவியவர்
போன வாரம் சிரஞ்சீவியின் மகன் திருமணம் நடந்தது.அவர் காபு சாதி.மணமகள் அபோல்லோ ரெட்டின் பேத்தி
ஜூனியர் NTR என்பவர் அவரின் மூத்த மகனின் திருமணம் ஆனா பின் உருவான கள்ள தொடர்புக்கு பிறந்தவர்.
ராமராவ் இறக்காமல் இருந்திருந்தால் லக்ஷ்மி பார்வதியின் வம்சம் தான் அவரின் வாரிசுகளாக ஆயிருப்பார்
தேவ கௌடாவின் மகன் முன்னாள் முதல்வர் குமாரசம்மிக்கு இரண்டாவதாக ,மூன்றாவதாக நடிகை மனைவிகள் உண்டு.
இப்போது ஐந்து வருடம் ஆழ மக்கள் காலில் விழுந்து வோட்டு வாங்கி செயித்து வருபவர்களே இந்த ஆட்டம் ஆடுகிறார்கள் என்றால் பிறந்ததிலிருந்தே இளவரசனாக முடிசூட்டப்பட்டவர்கள் ,பல பெண்ணை ஒரே மேடையில் அனைவர் ஆசியுடன் மணந்த,நூற்றுகணக்கில் கண்ணில் பட்ட பெண்ணைஎல்லாம் அந்தபுரத்திற்கு தூக்கி சென்ற காலத்தில் என்ன ஆட்டம் ஆடியிருப்பார்கள்
அவர்களுக்கு என்றும் சாதி இருந்தது கிடையாது.அடிமையாய் இருந்து அரசு ஆனவனும்,ஆசை நாயகிக்கு மகனை பிறந்து அரசனானவனும் கூட சில தலைமுறையாய் அரசாலும் குடும்பத்தில் தான் பெண் எடுக்க ஆசைபடுவான்.தராவிட்டாலும் போர் தொடுத்தாவது அரச குடும்பத்தில் இருந்து மணந்து கொள்வான்.
பிராமணர்கள் வகுத்த நீதிகளில்,சத்ரியர்கள் வகுத்த நீதிகளில் கூட தன வர்ணத்திற்கு கீழ் உள்ள பெண்களை மணந்து கொள்ள தடை இருந்தது இல்லை .சாதிக்குள் திருமணம் எனபது அரசருக்கு கிடையாது
அடிமைகள் பலர் அரசர் ஆகியிருக்கிறார்கள்,ஆசைநாயகர்களும்,ஆசை நாயகிகளுக்கு பிறந்தவர் பலரும் கூட அரசர் ஆகி உள்ளார்கள்.அரசரில் தொண்ணூறு சதவீதம் கொடுங்கோலன் ,பெண்பித்தன் தான்.
பாபரோ,ஜைச்சந்தோ,சாளுக்கியராவ்,குப்தரோ,சோழரோ,பல்லவரோ எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்
அதை ஒரு பெருமையாக இருவத்தி ஓராம் நூற்றாண்டில் கருதுபவர்கள் சிலர் இருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்
இப்போது எல்லா சாதியில் இருந்தும் ஒன்றிரண்டு மந்திரிகள் இருப்பது போல எல்லா சாதியை சேர்ந்தவர்களும் ஏதாவது ஒருபகுதிக்கு அரசனாக இருந்திருப்பார்கள்
சில காலம் முன்வரை/இன்றும் காட்டில் வசித்து வரும் பழங்குடி மக்களுக்கும் ராஜாக்கள் உண்டு,அரண்மனைகள் உண்டு.பட்டம் சூடும் விழாக்கள் உண்டு

பூவண்ணன் சொன்னது…

தோழர் நாயக்கர் அவர்களே
சேர சோழ பாண்டிய பல்லவ சாளுக்கிய என்று எல்லா ஜீப்பிலும் நான் ஆண்ட சாதி தான் என்று ஏறி கொள்ளும் போது ஏன் நாயக்கர் வம்சத்தோடு ஏறாமல் ஒதுங்குரீர்.
திராவிடன் என்று பேசி ஏமாற்றி விட்டார்கள் ,தமிழன் ஆள வேண்டும் என்று திட்டும் அரசியலுக்கு பாதகம் ஆகும் என்றா
அது ஏன் ஒவ்வொரு நூறு கிலோமீட்டர்க்கும் சாதியின் பெயரே மாறுகிறது.சென்னை சுற்றுவட்டத்தில் தெலுகு பேசும் நாயக்கர்கள் நிலம்,செல்வாக்கோடு இருந்ததால் அதை சேர்த்து கொள்வது
சித்தூர்,இன்றைய ஆந்திர எல்லைகளில் செல்வாக்கோடு இருக்கும் ரெட்டிகளை பார்த்து ரெட்டி சேர்த்து கொள்வது
கொங்கு வெள்ளாள கௌண்டேர்கள் செல்வாக்கோடு இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள் கௌண்டேர்கள் சேர்த்து கொள்வது
இதே காமடி தான் ஆண்ட சாதி காமெடியும்

கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) சொன்னது…

poovannan கூறியது...
தெலுகு பேசும் நாயக்கர்கள் நிலம்,செல்வாக்கோடு இருந்ததால் அதை சேர்த்து கொள்வது
சித்தூர்,இன்றைய ஆந்திர எல்லைகளில் செல்வாக்கோடு இருக்கும் ரெட்டிகளை பார்த்து ரெட்டி சேர்த்து கொள்வது
கொங்கு வெள்ளாள கௌண்டேர்கள் செல்வாக்கோடு இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள் கௌண்டேர்கள் சேர்த்து கொள்வது
இதே காமடி தான் ஆண்ட சாதி காமெடியும்
ஆஹா என்ன ஒரு சாதி வெறி உங்களுக்கு வன்னியர் மீது ...... வரலாறு என்னவென்றே தெரியாமல் இப்படி வீணாக ஒரு சமூகத்தின் மீது நீங்கள் திணிக்கும் கேவலமான பழிதான் உங்கள் சுய ரூபத்தை தெளிவாக காட்டுது பூவாணன் அவர்களே ....
நாயக்கர், கௌண்டர் என்பதெல்லாம் பட்டங்கள் ....அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் ...சாதி வேறு பட்டம் வேறு ..... வன்னியர் ,முக்குலத்தோர் போன்றோர்களுக்கு பட்டங்கள் நூற்றுக்கணக்கில் உண்டு ...அவைகளில் இவை பொதுப்பட்டங்கலாக இருப்பவை ....
இப்போது சொல்கிறேன் தெளிவாக கேளுங்கள் ....
நாயக்கர் / நாயகர் என்னும் பெயர் தெலுங்கர் வரும் முன்பே வன்னியருக்கு உண்டு .... ஒன்பதாம் நூற்றாண்டு முதலே சோழ மன்னர்களின் வடதிசை படைக்கு தலைமை ஏற்று ஆண்டு வந்த சம்புவராயர் குலத்திற்கு "வடதிசை நாயகர் " என்ற பட்டம் உண்டு ....
விநாயகர் கூட நாயகர் என்று அழைக்கபடுவதின் பொருள் அவர் தெலுங்கர் என்றா ? உங்கள் வாதம் அப்படிதான் இருக்கிறது ...... நாயகர், படையாட்சி , கௌண்டர் என்பதெல்லாம் தலைமை பொறுப்பை குறிப்பது .... வட தமிழகம் , தென் ஆந்திர பகுதியில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் வன்னியர்கள் ...இங்கே கிருஷ்ணதேவராயரை முதலில் எதிர் கொண்ட சம்புவராயருக்கும் சரி , காந்தவராய சேந்தவராய சகோதரருக்கும் கூட நாயகர் பட்டம் இவர்கள் வருவதற்கு முன்பே உண்டு ............
ஆக தெலுங்கர் வருவதற்கு முன்பே வன்னியருக்கு நாயக்கர் பட்டம் உண்டு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
அடுத்து கௌண்டருக்கு வருகிறேன் ....

கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) சொன்னது…

poovannan கூறியது...

///////////////////
கௌண்டர்
========

தமிழக சாதி பட்டியலில் கூட கௌண்டர் என்று வன்னியரை மட்டும்தான் சொல்கிறார்கள் .....மற்றவர்களை கொங்கு வெள்ளாளர் கௌண்டர் ,நாட்டு கௌண்டர் என்றெல்லாம் முன் எதையாவது சேர்த்து சொல்வார்கள் .....கொங்கு பகுதியின் வெள்ளாளர் இனத்திற்கு அவர்கள் கௌண்டர் அல்லது தலைவர் .வட தமிழ்நாட்டில் வன்னியர் மட்டுமே கௌண்டர் ....
இதெல்லாம் விட நீங்கள் சொன்ன பொய் என்ன தெரியுமா ? நாங்கள் அவர்களை பார்த்து கௌண்டர் என்று போட்டு கொண்டோம் என்று சொன்னது ....
இப்போது நான் தருகிறேன் உங்களுக்கு கல்வெட்டு ஆதாரம் ..உங்கள் முகத்தை கொண்டு போய்ஏதாவது பாவாடைக்குள் மறைத்து கொள்ளுங்கள் அதை படித்து விட்டு சரியா :)))

வன்னியர் (பள்ளி ) இனத்திற்கு கவுண்டர் பட்டம் இருக்கும் கல்வெட்டு ஆதாரம் தருகிறேன் இப்போது .......ஒழுங்கா படி
காமிண்டன் என்னும் சொல்லி கௌண்டன் என மருவியது .
இச்சொல் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதல் கல்வெட்டில் காணக்கிடக்கிறது .
தருமப்புரி பகுதியில் கிடைக்கும் நடுக்கற்களில் “காமிண்டன் ” என்ற சொல் பயின்று வர காண்கிறோம் .
காமிண்டன் என்ற சொல் வன்னியர்கலையே குறிக்கிறது , இதற்க்கு ஏராளமான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன . இவற்றில் ஒரு கல்வெட்டு உலகத் தமிழாயிச்சி நிறுவனம் வெளியிட்ட “தமிழில் ஆவணங்கள் ” என்ற நூலில் முனைவர் .கொடுமுடி சண்முகன் அவர்கள் எழுதிய “ஏரிகளில் கள் ஆவணங்கள் “ என்ற கட்டுரையில் (பக்கம் 37) வெளியிடப்பட்டுள்ளது .
அதனை அப்படியே கீழே கொடுத்துள்ளோம் .
ஆயிரம் ஆண்டி ஏரி :
ஓமலூர் –தருமபுரி சாலையில் பூசாரிப்பட்டி அருகில் உள்ளது . தாச சமுத்திரம் எரி , பேரரசன் ராசராசனின் பதினொன்றாம் ஆட்சி ஆண்டில் இந்த எரி கட்டப்பட்டது . கி.பி .996 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த எரி தற்போது ஆயிரம் ஆண்டைக் கடந்து விட்டது
ஏரியை அமைத்தவர் கச்சிப் பள்ளி காமிண்டன் (வன்னியர் ) பெங்கிலன் அமைந்தான் களி . அவனும் அவன் தம்பியும் கூட இருந்து வேலை செய்துள்ளனர் . இந்த ஏரியை அழியாமல் காப்பவர்களில் “கால் என் தலைமேல் ” என்கிறான் . இதற்க்கு அவர்களும் பாதம் பணிவேன் என்று பொருள்படும் .

“ஸ்வஸ்தி ஸ்ரீ
ராஜ ராஜ சோழ தேவற்கு
திருவேழுத்திட்டுச் செல்லா நின்ற
திருனல்லியாண்டு பதிநொற்றாவது
வடபூவாணிய நாட்டு
கச்சிப் பள்ளிக் காமிண்டந்
பொங்கிலந் அமன்தாந் களியும்
எந்தம்பி................ம்
இவ்விருவே மெங்கள் கைய்யால்
மணலொழிக்கி இவ்வேரி கட்டிநோம்
இந்த நம் அழிவு படாமற் காத்தாந்
காலெந் தலை மேலென “
என்று முனைவர் . கொடுமுடி சண்முகன் அவர்கள் தனது நூலில் குறித்துள்ளார் .
காமிண்டன் அதாவது கவுண்டன் என்ற பட்டப் பெயர் கொண்ட வன்னியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முபே ஏரியை வெட்டி போது மக்களுக்கு நன்மை புரிந்துள்ளனர் .

கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) சொன்னது…

poovannan கூறியது...

///////////////////
கௌண்டர்
========


நடுக்கற்கள் :

காமிண்டன் என்ற பட்டப்பெயர் கொண்ட வன்னியரை பற்றி இன்னொரு கல்வெட்டு , தருமபுரி மாவட்டம் குண்டூரப்பன் கொட்டாய் என்ற ஊரில் உள்ள நடுகல் ஒன்றில் காணப்படுகிறது . கி.பி . 1045 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டில்

"பனை குளத்துப் பள்ளியில் பள்ளிகாரன் புளியக்காமுண்டன் மகன் வசவக்காமுண்டன்"

மகள் பெயர் அதில் காணப்படுகிறது .
தமிழ் நாடரசின் தொல்லியல் துரை வெளியிட்ட தருமபுரி மாவட்டக் கையேடு என்ற நூலில் (பக்கம் 176) இக்கல்வெட்டு செய்தி அதில் வெளியிடப் பட்டுள்ளது .
கிருஷ்ணகிரி அருகே ஜகதாப் மேட்டூரில் காணப்பெறும் பலகைக் கல்லில் உள்ள ஒரு கல்வெட்டுச் செய்தியை ஆவணம் (இதழ்- 12 .ஜூலை 2001, பக்கம் 21), தொன்மைத் தடயம் (2003) ஆகிய நூல்கள் வெளியிட்டுள்ளன .
இக்கல்வெட்டு சோழ மன்னன் இரண்டாம் ராஜேந்திரனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் (கி.பி . 1059) வெட்டப்பட்டுள்ளது .
இதில்

“விஜயராஜேந்திர மண்டலத்துத் தகடூர் நாட்டுக்குக் கனக நாட்டுப் புள்ள மங்கலத்து அவனமச்சி பள்ளியான இவன் மகன் காமுண்டன் பாம்பு கடித்து செத்தான் . அது கண்டு அவனது மனவாட்டியும் , காமுண்டனின் தாயுமான விச்சக்கந் என்பாள் தீப்பாயிந்து உயிர் நீத்தாள் ”

என்ற செய்தி இடம் பெற்றுள்ளது . அவளது நினைவாக இந்த வீரக்கல் நடப்பட்டுள்ளது .
வன்னியர்களுக்கு நீண்ட நெடுங்காலமாக கவுண்டர் பட்டம் உண்டு என்பதார்க்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன . இது தொடர்பாக தமிழ்நாடரசின் தொல்லியல் துறையில் பணியாற்றும் கல்வெட்டாய்வாளர் முனைவர் , சொ .சாந்தலிங்கம் அவர்கள் “வரலாற்றில் தகடூர் ” என்ற நூலில் (பக்கம் 192-193) கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார் .
“கி.பி 11-13 ஆம் நூற்றாண்டளவில் பல இடங்களில் நாட்டுக் காமுண்டர்கலாகவும் , ஊர் முதலாளிகலாகவும் விளங்கியவர்கள் வன்னியர்களே . இந்தப் பிரிவினரைப் பற்றிய குறிப்புக்கள் 11 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை தொடன்ர்து கிடைக்கின்றன . இவற்றில் இவர்கள் காமிண்டர் , காமுண்டர் , கவுண்டன் என திரிபு பெற்று வழங்கப்படுகின்றனர் . கி.பி. 15 ஆம் நூற்றாண்டிலேயே “கவுண்டர் ” எனத் தெளிவாக அழைக்கப்பட்டுள்ளனர் . இவர்களே பெரும்பான்மையும் நில உடைமையாலர்கலாகவும் வேளாண் தொழிலில் ஈடுப்பட்டவர்கலாகவும் இருக்கின்றனர் .”

கோவில் நிலக் கொடிகள் பற்றி இப்பகுதியில் கிடைக்கின்ற கல்வெட்டுகளில் 90 சதவிகிதம் பள்ளி கவுண்டர் கொடுத்தனவாகவே இருக்கின்றனர் . ஒரு சான்று மட்டும் செட்டி இனத்தைச் சேர்ந்தவர் அளித்ததை கூறுகிறது என்று முனைவர் திரு .சொ .சாந்தலிங்கம் எழுதியுள்ளார்

கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) சொன்னது…

செப்புப் பட்டயங்கள் :
வன்னியர்களுக்கு கவுண்டர் பட்டம் உண்டு எனபதற்கு செப்புப் பட்டய ஆதாரங்களும் இருக்கின்றன . கொங்கு வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த புலவர் .செ .ராசு (மேனாள் பேராசிரியர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் )
அவர்கள் , கி.பி .1595 ஆம் ஆண்டைச் சேர்ந்த பண்ணாட்டார் எனப்படும் வன்னியர் செப்பு பட்டயத்தை படித்துள்ளார் .

இதனை “வன்னியர் ” என்ற நூலில் தொல்லியல்துறையின் முன்னாள் இயக்குனர் திரு.நடன காசிநாதன் அவர்கள் வெளியிட்டுள்ளார் .

அதில் பல கவுண்டர்களின் பெயர்கள் இடம் பெறுகின்றன .

“சென்னியார் கவுண்டர் ,சீராம கவுண்டர், செங்கழுநீர் கவுண்டர், வேடிச்சி கவுண்டர், நமனாண்டி கவுண்டர், நாரீசர் கவுண்டர், அம்பாயிர கவுண்டர் ” என நூற்றுக்கும் மேற்ப்பட்ட கவுண்டர்களின் பெயர்கள் எந்த செப்புப் பட்டயத்தில் காணப்படுகின்றன .
கி.பி 1633 ஆம் ஆண்டைச் சேர்ந்த
நெய்வேலி வன்னியர் செப்பேட்டை திரு.நடன காசினாதன் அவர்கள் ‘கல்வெட்டு ’
காலாண்டிதழ் எண் 22 இல் பதிப்பித்துள்ளார் .


அதில் அழகாபுரம் மெயபோகராய கவுண்டர் ,
சேலம் முதலிக் கவுண்டர் ,அனதாரிப்பட்டி அனதாரிக் கவுண்டர் ,, அயோத்தியாப்
பட்டினம் தெய்வராயக் கவுண்டர் , ஒலைப்புடையார் காங்கய குருக்கவுண்டர் ,
கந்தப்பம்பட்டி கந்தப்ப கவுண்டர் , சீரகப்பாடி நல்லரிசாக் கவுண்டர்
,சென்னகிரி ஒட்டைநாழி பாரிசாக்கவுண்டர் , வீரபாண்டி முந்திச் சின்னாக்
கவுண்டர் , பாலம்பட்டி வடமலை கவுண்டர் ,மல்லூர் மாணிக்க கவுண்டர் ,
அண்ணாமலைப் பட்டி சேர்வை முத்தாக் கவுண்டர் , பொன்பரப்பி பெரிய குப்ப
கவுண்டர் ,அம்மாபாளையம் ஆட்டையாம்பட்டி ராயகவுண்டர் ,வெங்காப்பட்டி குழந்தை
கவுண்டர் ,வாழைக் குட்டைப்பட்டி பத்திரிக் கவுண்டர் ,அம்புக்கட்டி பாளையம்
குட்டையாக் கவுண்டர் போன்ற நூற்றுக்கும் மேற்ப்பட்ட வன்னிய கவுண்டர்களின்
பெயர்கள் இப்பட்டயத்தில் இடம் பெற்றுள்ளன .


இவை அனைத்தும் நெய்வேலி வன்னியர் செப்பேடு சொல்லும் பள்ளி கவுண்டர்கள்

கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) சொன்னது…

மேலும் ஆ.சிங்காரவேல் முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணியில் (பக்கம் 375 )

கவுண்டர் என்ற சொல்லுக்கு –“பள்ளிகளுக்கும் சில இடங்களில் வெள்ளாளர்களுக்கும் பட்டப் பெயரை இருக்கிறது ” என்று கூறப்பட்டுள்ளது .
கொங்கு வெள்ளாளர்கள் அண்மைய காலத்தில்தான் கவுண்டர் பட்டத்தை பயன்ப்படுத்தி வருகின்றனர் என்று

அதே சமூகத்தை சேர்ந்த முனைவர் .திரு .சு .ராஜவேலு அவர்கள் “தொல்லியல் சுடர்கள் ” என்ற நூலில் “கல்வெட்டுகளில் கொங்கு வெள்ளாளர் கூட்டுப் பெயர்கள் ” என்ற கட்டுரையில் (பக்கம் 176) கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.

“கூட்டுபெயர்கள் வரும் கல்வெட்டுகளில் கொங்கு என்ற இக்கால முன்னொட்டு காணப்படவில்லை . எனவே கொங்கு என்ற நிலவியல் சொல் பிற்காலத்தில் முன்னொட்டாக வந்துள்ளது என்பது தெளிவாக விளங்கும் . இதே போன்று கொங்கு வெள்ளாளக் கௌண்டர்களின் பின் ஒத்தான ‘கவுண்டர் ’ என்ற பட்டமும் ல்கல்வெட்டில் மிகக் குறைவாகவே காணப்படுகிறது என்று திரு .சு .ராஜவேலு அவர்கள் எழுதியுள்ளார் .”

கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) சொன்னது…

படையாட்சி என்னும் பெயரும், கவுண்டர் என்னும் பெயரும் கொண்ட சித்தாண்ட புற செப்பேடு தருகிறேன் ...அதையும் படி
வன்னிய கவுண்டரும் சித்தாண்டபுரம் செப்பேடும் :

"சித்தாண்டபுரம் செப்பேடு"

வன்னிய
கவுண்டர்களின் வீரத்தையும்,துணிவையும் இச்செப்பேடு உணர்த்துகிறது.இதில்
உள்ள சில சுவையான சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு
:"சிறுதலை
பூண்டியிலிருந்து ஒலகளந்த கவுண்டனும் யேகாம்பிறி கவண்டனும்
ரண்டு பேரும் மேர்க்கே யேரி வறச்சே சிங்கிரி பட்டி கணவாயிலே நூரு
வேடராகிறவர்கள் வந்து மறிச்சிக் கொண்டபோது ஒலகளந்தா கவுண்டனும் யேகாம்பிரி
கவுண்டனும் இவர்கள் ரண்டு பேரும் அவர்கள் மேல் சண்டைகள் செய்து அவர்களில்
நாலு பேரை வெட்டித் துறத்திவிட்டு அப்போ ஆலம்பாடி வந்து சேந்து அந்தக்
கோட்டையில் வீட கட்டிக்கொண்டு நிலையாயிறுந்தார்கள்.அப்போ ஆலம்பாடி
கோட்டையிலிறுக்கப்பட்ட யிறுப்பாளிநாயக்கன் நீங்களாரென்று கேட்டான் நாங்கள்
படையாச்சிகளென்று சொன்னார்கள் ஆனால் நம்பள் பக்கத்திலெ யிறுங்கோளென்று
சேத்திக்கொண்டான்

"மற்றொரு பகுதி:

"உலகளந்தா கவண்டனும் ஏகம்பிரி கவண்டனும் ஆலம்பாடி நாட்டையாண்டு
கொண்டிருக்கும் காலத்தில் பெரியப்ப நாயக்கன்,சின்னப்ப நாயக்கன்,பாலப்ப
நாய்க்கன் இவர்கள் வந்து என்களுக்கு வர்த்தனை உங்கள் வீட்டுக்கு ரண்டு பணம்
குடுக்கவேண்டுமென்று கேட்டார்கள்.அதுக்கவர்கள் நாங்கள் குடுக்குறதில்லை
யென்றார்கள்.நாங்கள் விடுகுறதில்லை என்றார்கள் இவர்கள்.ஆடு மாட்டை கொள்ளை
ஓட்டினார்கள் அவர்களில் பத்து வேடரை வெட்டிக் கொள்ளையே
திருப்பிக்கொண்டார்கள்.செகதேவராயரண்டை போனார்கள்.பாலப்ப நாயக்கன் எங்கள் வர்த்தனையைக் கேட்டோம்
என்று சொன்னான்.ஏகாம்பிரி கவுண்டன் நாங்கள் வன்னிய வம்ஷம் அப்படி
கொடோமென்றோம்.எங்கள் ஆடுமாடெல்லம் கொள்ளையிட்டார்கள் நாங்கள் அவர்களை
பத்துப்பேரை வெட்டி கொள்ளையை திறுப்பிக்கொண்டோமென்றான்.செகதேவராயர் வேடர் கையில் 100 பொன் அபுறாதமாக வாங்கிக்கொண்டு நீங்கள்
சவுரியவான்களென்று மெச்சி உங்களுக்கு கென்னா வெகுமானம் வேணுமென்றார்
அப்போது ஏகாம்பிரி கவுண்டனெங்களுக்கின்ன சாதி அதிகாரம் வேணுமென்று
கேட்டார்கள்"

வன்னிய கவுண்டரும் சித்தாண்டபுரம் செப்பேடும் :
விளக்கம்: சிறுதலைப்பூண்டி என்ர இடத்திலிருந்து உலகளந்தா கவுண்டர், ஏகாம்பர
கவுண்டர் என்ற வன்னியர் இருவர் மேற்கு நோக்கி செல்கையில் அவர்களை ஒரு
கணவாயினருகே நூறு வேடர்கள் வழி மறிக்கின்றனர்.ஆனால் இவ்விருவரும்
அவ்வேடரோடு போரிட்டு அவர்களில் நான்கு பேரைக் கொன்றனர்.இதனைக் கண்ட அந்த
வேடர் கூட்டம் சிதறி ஓடிவிட்டது.இதன் பிறகு இந்த வன்னிய கவுண்டர் இருவரும்
ஆலம்பாடி எனும் ஊரில் குடியமர்ந்தனர். ஆலம்பாடி பகுதியை அப்போது ஆட்சி செய்த (தெலுங்கு) இறுப்பாளி நாயக்கன்
என்பவன் இவர்களை பற்றிக் கேள்விப்பட்டு இவர்களிடம் யாரென்று கேட்டபோது
தாங்கள் படையாட்சிகள் என்று அந்த இரு வன்னியரும் கூறினர்.நீங்கள்
எங்களுக்கு உறுதுணையாயிருங்கள் என்று அவர்களை இறுப்பாளீ நாய்க்கன்
சேர்த்துக்கொண்டான்.ஆலம்பாடி நாட்டில் உலகளந்தா கவுண்டன்,ஏகாம்பர கவுண்டன் இருவரும்
தலைவர்கள் என்ற நிலையில் வலுவுடன் இருந்தபோது (தெலுங்கு) நாயக்கராட்சியின்
பிரதிநிதிகளான பெரியப்ப,சின்னப்ப,பாலப்ப நாய்க்கன்கள் இவர்களிடம் வரி
கேட்டனர்.கொடுக்கமாட்டோம் என்று மறுத்தனர் வன்னியர்கள். வரி கொடுக்க மறுத்ததால் நாய்க்கர் தமது ஆட்களுடன் வன்னியருடைய
ஆடு.மாடுகளை ஓட்டிச் செல்லத் தொடங்கினர்.சினமுற்ற வன்னியர் நாய்க்கர்
ஆட்களோடு போர் செய்து அவர்களில் பத்து பேரை வெட்டிக்கொன்று தமது ஆடு
மாடுகளை மீட்டுக்கொண்டனர்.இரு தரப்பினரும் பெருமன்னனான செகதேவராயரிடம் சென்று முறையிட்டனர்.பாலப்ப
நாய்க்கர் தரப்பினர் இவர்கள் வரி கொடுக்கவில்லை என்றனர்.ஏகாம்பர கவுண்டர்
நாங்கள் வன்னியர் குலம் என்பதால் வரி கொடுக்க மறுத்தோம்.எங்கள் ஆடு,மாடுகளை
கவர்ந்து செல்ல முயன்றதால் அவர்கள் ஆட்கள் பத்து பேரை வெட்டிக்கொன்றோம்
என்றனர்.வழக்கை விசாரித்த செகதேவராயர் பாலப்ப நாய்க்கர் தரப்பிற்கு நூறு
பொன் அபராதம் விதித்து பின்னர் ஏகாம்பர கவுண்டர் தரப்பை பாராட்டி
உங்களுக்கு என்ன சன்மானம் வேண்டும் என்று வினவ அதற்கு அவர்கள் எங்களுக்கு
எங்கள் இன ஜாதி தலைமைப் பொறுப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். இந்த செப்பேட்டில் ஏகாம்பர கவுண்டர் உள்ளிட்ட பல வன்னிய
கவுண்டர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.மேலும் அதில் உள்ள மற்றொரு முக்கிய
செய்தி: ஒரு தேரோட்டத்தின்போது வன்னியர் தங்கள் விருதுகளைப் பயன்படுத்தக்கூடாது
என்று வலங்கை ஜாதிகளைச் சேர்ந்தோர் மறித்து பிரச்சினை செய்ய வன்னிய
கவுண்டர்கள் தம்மைத் தடுத்த வலங்கை ஜாதியாரை அடித்து துரத்தி தேரோட்டத்தை
நடத்தினர்.

கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) சொன்னது…

எங்களுக்கு பள்ளி காமிண்டன் என்ற பட்டம் ஆயிரம் ஆண்டுக்கு முன்பே வந்ததென்று கல்வெட்டு ஆதாரம் தந்தேன் .
அதுபோல் ,


கொங்கு இனத்திற்கு எந்த வருடம் , அல்லது எந்த நூற்றாண்டில் "கொங்கு
வெள்ளாள காமிண்டன் " என்ற பட்டம் யாரால் கொடுக்கபெற்றது என்பதை , என்னை போல கல்வெட்டு ஆதாரத்துடன் தெளிவாக சொல்லுங்கள் ............. ?

கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) சொன்னது…

@povannan////////////

வெள்ளாளர்கள் எப்படி கொங்கா வெள்ளாளர் என்று மாறினார் ...அவர்கள் எப்படி கொங்கு வெள்ளாளர் என்று மாறினார் ...பிறகு அவர்கள் எப்படி கொங்கு வெள்ளாள கௌண்டர் என்று மாறினார் என்பதைதெரிந்துகொள்ள இங்கே வந்து படிக்கவும் :

1871 தொடங்கி 1931 வரை நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் இவர்கள் எதிலும் கொங்கு வெள்ளாளர் என்று கணக்கெடுக்க படவில்லை .. இதனை எட்கர் தர்ஸ்டன் என்பவர் "தென் இந்திய சாதியினர் மற்றும் பழங்குடியினர் " என்னும் புத்தகத்தில் கொங்க என்ற தலைப்பில் எழுதபெற்ற வசனம் இங்கே :
KONGA-konga are kongu is a territorial term, meaning inhabitant of the territorial country.
It is recent times of census, been returned as a division of a large number of classes mostly tamils which include – Ambattan, Kaiolan, Kammalan,Kuravan,Kusavan,Malayan,Odde,Parayan, upparaand vellala.
It is used as a term of abuse among the Badagas of the Nilgiri hills. Yhose for example, who made mistakes in matching kolmgrens…were seornfully called konga by the onlookers.
Similarly in parts of Tamil country a tall , lean and stupid individual is called a kongan.
They seem to have little in common with other vellalas,except the name, and appear to hold a lower position in society for reddis will not eat with them. They will dine with thotiyans and others of lower non bhramins castes.
Their devellings are generally Thatched huts.
விடாது துரத்தும் கருப்பு என்பார்களே அதுபோல இவர்கள் தனி சாதி என்ற அந்தஸ்து அடைய முடியாத நிலையே தொடர்ந்தது . எனவே கொங்கு வெள்ளாளர் என்ற பெயருடன் எதை சேர்த்துகொண்டால் தனி சாதி அந்தஸ்த்தும் , மரியாதையும் கிடைக்கும் என்று தேடி பார்த்தனர் . அப்போது வட தமிழகத்தில் வன்னியர்கள் கௌண்டர் என்ற பட்டதுடன் இருப்பதை கண்டு , அதை தங்கள் பெயருடன் சேர்த்து போட்டு கொண்டு வளம் வர ஆரம்பித்தார்கள் .
INDIAN COMMUNITIES என்ற புத்தகத்தில் கே.எஸ்.சிங் என்பவர் பின்வருமாறு எழுதியிருக்கிறார் .


“KONGU VELLALA/ KONGU VELLALA GOUNDER”
This is a community of tamilnadu who shares some common features with other vellala excepts the name.
They are distributed in Kongu nadu comprising the adjoining districts of tamilnadu and kerala.
IN TAMILNADU THEY ARE REFERRED TO AS KONGU VELLALAR, BUT AFFIX GOUNDAR AS S HONORIFIC TITLE BORROWED FROM THE PEOPLE OF THE NORTHERN DISTRICTS OF TAMILNADU.
In kerala, the kongu vellala goundar is called kongu vellala drive the name from their original place of habitants.

போதுமா povaanan அவர்களே .ஏதோ பேசனும்னு பேச கூடாது .....
கொங்கு பகுதிக்கு கொஞ்சமும் தொடர்பில்லாடாஹ் பாண்டிச்சேரியில் கூட வன்னியர்கள் கௌண்டர் என்றுதான் அழைக்க படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Karthik Sambuvarayar சொன்னது…

//தோழர் நாயக்கர் அவர்களே
சேர சோழ பாண்டிய பல்லவ சாளுக்கிய என்று எல்லா ஜீப்பிலும் நான் ஆண்ட சாதி தான் என்று ஏறி கொள்ளும் போது ஏன் நாயக்கர் வம்சத்தோடு ஏறாமல் ஒதுங்குரீர்.
திராவிடன் என்று பேசி ஏமாற்றி விட்டார்கள் ,தமிழன் ஆள வேண்டும் என்று திட்டும் அரசியலுக்கு பாதகம் ஆகும் என்றா
அது ஏன் ஒவ்வொரு நூறு கிலோமீட்டர்க்கும் சாதியின் பெயரே மாறுகிறது.சென்னை சுற்றுவட்டத்தில் தெலுகு பேசும் நாயக்கர்கள் நிலம்,செல்வாக்கோடு இருந்ததால் அதை சேர்த்து கொள்வது
சித்தூர்,இன்றைய ஆந்திர எல்லைகளில் செல்வாக்கோடு இருக்கும் ரெட்டிகளை பார்த்து ரெட்டி சேர்த்து கொள்வது
கொங்கு வெள்ளாள கௌண்டேர்கள் செல்வாக்கோடு இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள் கௌண்டேர்கள் சேர்த்து கொள்வது
இதே காமடி தான் ஆண்ட சாதி காமெடியும்//

கொஞ்சமும் வரலாறு தெரியாத அறிவற்றவனின் பேச்சாக தான் உங்களை பேச்சை பார்கிறேன். நாயகர் என்பது வன்னியர்களுக்கு தெலுங்கர்கள் தமிழ் பகுதிக்கு வந்தேருவதற்கு முன்பில் இருந்தே இருக்கிறது. அதன் பொருட்டே வன்னியர்கள் பெரும்பானமையாக வாழும் வட தமிழ்நாட்டில் தெலுங்கர்கள் தங்களை நாயுடு என்று அழைத்து கொள்கிறார்கள். சித்தூர் மாவட்டம் வன்னியர்கள் அதிகம் வாழும் மாவட்டம். அங்கு ரெட்டி என்று அழைக்கபடுபவர்கள் வன்னியர்களே... ரெட்டி என்பது அந்த பகுதியில் செல்வாக்கோடு வாழும் சாதிகளுக்கு உரிய பட்டம். அதன் பொருட்டே வன்னியருக்க் உண்டு.. அதுபோல, சென்னை மற்றும் வடதமிழ்நாடு முழுவதும் கவுண்டர் என்றால் அது வன்னியர்களை மட்டுமே இருக்கும். வன்னியருக்கு கவுண்டர் பட்டம் உள்ளதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளது. நீங்க சொல்லும் கொங்கு வெள்ளலர்களுக்கு ஒரு கல்வெட்டு ஆதாரம் கூட அவர்களை கவுண்டர் என்று குறிப்பதாக இல்லை. அப்படி ஏதேனும் இருந்தால் அதை இங்கு பதிவு செய்யுங்கள் பாப்போம். மேலும் வடதமிழ்நாட்டில் வன்னியர்கள் சிறப்பொடு வாழ்வதை பார்த்து வன்னியர்களின் பட்டமான் கவுண்டர் என்னும் பட்டத்தை திருடி போட்டு கொண்ட இழி செயலை செய்தவர்கள் கொங்க வெள்ளலர்களே..

எதோ பேசவேண்டும் என்பதற்காக எந்த அடிப்படை வரலாற்று அறிவும் இல்லாமல் வன்னியர்களை பற்றி பேசாதீர்கள். தமிழ்நாட்டின் ஒரே க்ஷத்ரிய வம்சம் வன்னியர்கள். எங்களை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

32 விருதுகளை கொண்ட ராஜ வம்சம். எவனுடைய பட்டங்களையும் திருடி போட்டுக்கொள்ளும் அவசியம் வன்னியருக்கு இல்லை. மேலும் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் பணம் வந்துவிட்டதால் மட்டும் எவனும் க்ஷத்ரியன் ஆகி விட முடியாது. கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே..எவ்வளோ வறுமையில் இருந்தால் தமிழ்நாட்டின் ஒரே க்ஷத்ரிய வம்சம் வன்னியகுல க்ஷத்ரியர் மட்டுமே. வேறு எவனுக்கு அந்த பெருமை இல்லை. காமிடி செய்யமா கெளம்புங்க காத்து வரட்டும். :)

Karthik Sambuvarayar சொன்னது…

//அது ஏன் ஒவ்வொரு நூறு கிலோமீட்டர்க்கும் சாதியின் பெயரே மாறுகிறது.//

திரு. பூவண்ணன் அவர்களே, இதை தான் சொன்னேன் உங்களின் பேச்சு அறிவற்றவனின் பேச்சு என்று..சாதி பெயர் என்பது வேறு சாதி பட்டம் என்பது வேறு. பகுதிக்கு பகுதி எங்கள் பட்டங்கள் மாறுபடுகிறது..இருப்பினும் அது எங்களுக்கு உரிய பட்டங்களே..அடுத்தவன் பட்டத்தை திருடி போட்டு கொள்ளும் அளவிற்கு வன்னியர்கள் ஒன்றும் இழி சாதி இல்லை.