Pages

ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2016

சசிகலா புஷ்பாவும் ஆபாச விகடனும்: பெண்ணுரிமை இயக்கங்கள் எங்கே?

இந்தவார ஜூனியர் விகடன் இதழில், நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா குறித்து மிக மோசமான ஆபாசக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

சசிகலா புஷ்பாவின் அரசியல் நிலைப்பாடு, அவர் சார்ந்திருந்த கட்சியுடனான மோதல், அவரது சாதி ஆதரவு கோரிக்கை குறித்தெல்லாம் பலருக்கும் பலவிதமான கருத்துகள் இருக்கலாம். அதுகுறித்தெல்லாம் நாம் இங்கே பேசவில்லை.

ஆனால், ஒரு பெண் என்பதற்காகவே சசிகலா புஷ்பா கொச்சைப் படுத்தப்படுவதை ஏற்க முடியாது. அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான இந்த அநீதி எதிர்க்கப்பட வேண்டும்.

ஜூனியர் விகடனின் ஆபாசம்

ஒரு பெண்ணை, அதுவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை, ஜூனியர் விகடன் இதழ் எவ்வளவு ஆபாசமாக சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளது என்பதைக் கீழே பாருங்கள் (மிஸ்டர் கழுகு, ஜூனியர் விகடன், ஆகஸ்ட் 17 இதழ்:

//"சாதாரண பள்ளி ஆசிரியையாக வாழ்க்கையைத் தொடங்கியவர் சசிகலா புஷ்பா. அவரது கணவர் ஒரு எலெக்ட்ரீஷியன். அங்கிருந்து சென்னைக்குப் பயணம். இங்கும் பல பிரமுகர்கள் அவருக்கு உருகிஉருகி உதவி செய்துள்ளார்கள்.



# கார்டனுக்குள் நெடுநாட்களாக இருக்கும் ‘சாந்த சொரூபி’க்கும் இவருக்கும் அதிக நெருக்கம் ஏற்பட்டுள்ளது. திருவான்மியூரில் இவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்கிறார்கள்

# உளவுத்துறை அதிகாரிக்கு நெருக்கம் ஆனார்.


# அடுத்து, முதல்வரின் செயலாளர்களில் ஒருவரையும் தன் வசம் ஆக்கிவிட்டாராம்.

# மாவட்டம்தோறும் சென்றபோது டெல்டா மாவட்ட அமைச்சரிடம் பழக்கம்.

# சரித்திரப் புகழ் பெற்ற கோட்டை உள்ள ஊர்க்காரர் அவர். பகையில் தொடங்கிய அவர்களது பழக்கம் நாளடைவில் படிப்படியாக நெருக்கத்தை உருவாக்கிவிட்டதாம்.”

# சசிகலா புஷ்பாவுக்கும் அமைச்சர் சண்முகநாதனுக்குமான நெருக்கம் முன்பே வெளிச்சத்துக்கு வந்தது.



# வட சென்னை வட்டாரத்தில் மகளிர் விடுதி அமைக்க இடம் ஏற்பாடுசெய்த ஓர் அமைச்சரும், ‘நடிப்பு’க்குப் பெயர்போன இரண்டெழுத்து இன்ஷியல்கார அமைச்சர் ஒருவரும் புஷ்பா புயலில் சிக்கியவர்களாம்."//

- இவ்வாறு "நெருக்கம், தன் வசம், சிக்கியவர்கள், சந்திப்பு" - என்கிற வார்த்தைகள் மூலம், ஒரு சிறு செய்தியில் எட்டு ஆண்களுடன் சசிகலா புஷ்பாவை தொடர்புபடுத்தி, அவரை பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்துகிறது ஜூனியர் விகடன்.

(இச்செய்தி உண்மையா இல்லையா என்பது முக்கியமல்ல. இச்செய்திக்கான தேவையே இல்லை என்பதுதான் முக்கியமாகும்)

பெண்களுக்கு எதிரான வன்முறை

ஜூனியர் விகடனின் ஆபாச செய்தி - அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு எதிரான வன்முறை (Violence against women in politics - VAWIP) எனும் மனித உரிமை மீறலில் ஒரு அங்கம் ஆகும்.

இந்தியாவில் அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து ஆய்வு செய்துள்ள ஐநா பெண்கள் அமைப்பு, இங்கு நிலவும் அசிங்கத்தை அம்பலப்படுத்தியுள்ளது. (UN Women - Violence against Women in Politics - A study conducted in India, Nepal and Pakistan).
இந்தியாவில் அரசியலில் ஈடுபடும் பெண்களிடம் - பாலியல் இசைவுக்கு வற்புறுத்துதல் (sexual favours), நடத்தையை கொலைசெய்தல் (Character assassination) - ஆகிய வன்முறைகள் மிக அதிக அளவில் ஏவப்படுவதாக தெரிவிக்கிறது.
  • "The most widespread forms of VAWIP ...related to expectation of sexual favours"
  • "Character assassination also persisted in relation to the expectations of sexual favours, but was also identified as a tool to seriously damage the reputation and achievements of a woman in politics with the desire to reduce her public support."
பரந்துபட்ட அளவில் பார்த்தால், அரசியல் என்பதே ஆண்களுக்கானது, அதில் பெண்கள் ஈடுபடக் கூடாது என்கிற ஆணாதிக்க மனப்போக்கு இதன் காரணமாக உள்ளது.

அதையும் மீறி அரசியலில் பெண்கள் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கிலேயே - அரசியலில் ஈடுபடும் பெண்கள் மோசமாக சித்தரிக்கப்படுகின்றனர். ஜீனியர் விகடனின் செய்தி அத்தகைய வக்கிர உள்நோக்கம் கொண்டதுதான்.
பெண்கள் அரசியலுக்கு வருவது அரிதான ஒரு நிகழ்வு. ஒருசில பெண்கள் அரசியலில் உயர்ந்த பதவிகளை அடைந்தாலும் கூட, அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அனைத்து நிலை அரசியல் பதவிகளில் ஆண்களின் எண்ணிக்கையை விட மிகமிகக் குறைவாகவே பெண்கள் உள்ளனர்.

ஊடகங்கள் ஆபாசமாகவும் நடத்தையை கொலைசெய்யும் வகையிலும் செய்தி வெளியிடுவதால் - பெண்கள் புதிதாக அரசியலுக்கு வருவதில் தடை ஏற்படுகிறது. அரசியலில் இறங்கும் எல்லா பெண்களும் இப்படித்தான் என்கிற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியே இதுபோன்ற செய்திகளின் நோக்கம் ஆகும்.

பெண்கள் அமைப்புகள் தூக்கம் கலைக்குமா?

தமிழ்நாட்டின் பெண்கள் அமைப்புகளுக்கு 'சாதி பிரச்சினைத் தவிர' வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியாது. ஏனெனில், அவை அனைத்தும் கம்யூனிச சிவப்பு கண்ணாடி அணிந்துள்ளன. பெண்கள் அமைப்புகளை நம்பி பயனில்லை. பெண்கள் மட்டுமே இதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு.

அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பின்வருமாறு கூறுகிறது ஐநா பெண்கள் அமைப்பு:

Violence against women in politics (VAWIP) is violence that occurs within the political sphere but that specifically targets women. VAWIP is used to reinforce traditional social and political structures by targeting women leaders who challenge patriarchy and the prevailing social expectations and norms. It restricts women's mobility and capacity to participate within the political sphere.

அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகளுக்கு எதிராக மனித உரிமையிலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை உள்ள எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு: சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவான பதிவாக இதனைக் கருத வேண்டாம். பெண்கள் மீதான ஊடக வன்முறைக்கான எடுத்துக்காட்டாக கொள்ளவும்.

1 கருத்து:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

பின்குறிப்புவரை உண்மைதான்! எப்படியாவது முன்னேறிவிடுகிறார்கள் என்னும் சொல்லுக்குள் எத்தனை முட்கள்! விகடனும் இந்தளவுக்குத் தரம் தாழும் என்று நினைக்கவில்லை.. ஆனால் சமீப காலமாக அதுதான் நடக்கிறது. சரியான நேரத்தில் வந்த சரியான பதிவு அய்யா