Pages

புதன், செப்டம்பர் 28, 2016

தலித் பெண் பாலியல் வன்கொடுமை: முற்போக்கு கும்பல் மவுனமாக இருப்பது ஏன்?

சாதி வெறியின் காரணமாக பண்ரூட்டி அருகே ஒரு தலித் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரைக் கூட காவல்துறை ஏற்க மறுத்த நிலையில் - தலித் அமைப்பு பிரமுகர்கள் சிலர் தலையிட்டு முறையிட்டதால் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகளின் போது துள்ளிக்குதிக்கும் முற்போக்கு கூட்டத்தினர் - இப்போது அமைதியாக இருக்கிறார்களே என்று நீங்கள் அதிசயிக்கலாம். ஆனாலும், முற்போக்கு கும்பலின் இந்த கள்ள மவுனத்துக்கும் காரணம் இருக்கிறது.

பண்ரூட்டியில் நடந்தது என்ன?

பண்ரூட்டியை அடுத்துள்ள ஏரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் அருந்ததியர் இனத்தை சேர்ந்தவர். இவரை தலித்துகளில் ஒரு பிரிவான பறையர் இனத்தை சேர்ந்த உத்ரகுமார் என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். இதற்கு ஜெயந்தி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஜெயந்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் உள்ளே புகுந்து, உத்ரகுமார் பாலியல் பலாத்காரப்படுத்திவிட்டார்.
சாதிவெறி காரணமாக, அருந்ததிய பெண்ணை பறையர் இனத்தை சேர்ந்தவர் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. ஆனாலும் காவல்துறை வழக்கு பதிவு செய்ய மறுத்த நிலையில், ஆதித்தமிழர் பேரவையின் நிர்வாகிகள் முறையிட்டு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. உதரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

அருந்ததியருக்கு எதிரான சாதிவெறி

அருந்ததியருக்காக போராடிவரும் ஆதித்தமிழர் பேரவையின் அதியமான் இது குறித்து கருத்து தெரிவித்த போது:

"ஒரு பகுதியில் ஐம்பது பறையர் இன குடும்பங்களும், ஐந்து அருந்ததி இன குடும்பங்களும் வசித்தால், அங்கு பறையர் இன ஆதிக்கம் நிலவவே செய்கிறது. பாலியல் பலாத்கார விவகாரங்களில் ஆணாதிக்கதோடு, சாதிவெறியும் சேர்ந்தே இருக்கிறது.

உயர்சாதி என சொல்லிக்கொள்பவர்கள் பள்ளர், பறையர் இன பெண்களுக்கு சாதி ஆணவத்தோடு பாலியல் சீண்டல்களை செய்கிறார்கள். பள்ளர், பறையர் இனத்தவர், அதே சாதி ஆணவத்தோடு அருந்ததி இன பெண்களை சீண்டுகிறார்கள். இதைச் சொன்னால், தலித் சமுதாயத்திற்குள் பிரிவினை ஏற்படும் என்கிறார்கள் சிலர். ஆனால், ஏற்கனவே இச்சமுதாயத்திற்குள் பிரிவினை நிலவுகிறது என்பதுதான் உண்மை.
உதாரணமாகச் சொன்னால் அருந்ததி இனத்தவருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீட்டை பள்ளர், பறையர் இன தலைவர்கள் எதிர்க்கிறார்கள். ஒட்டுமொத்த தலித் இன 76 சாதிகளுக்கு 18 விழுக்காடு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்களில் அருந்ததியின சமுதாயத்தினருக்கு மட்டும் நீண்ட நாட்களாக பங்கு கிடைக்காத காரணத்தால் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களிலும் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆகவே , சமூக நீதியின் அடிப்படையில் அவர்களுக்கு மூன்று விழுக்காடு உள் இடஒதுக்கீடு கிடைத்தது.

ஆனால், இந்த உள் ஒதுக்கீட்டை மீறி, அருந்ததி இன மக்களுக்கான பணியிடங்களை பிற தலித் இனத்தவர் பெற்று வருகிறார்கள். இந்த நிலை மாற, பள்ளர் பறையர் இன மக்களின் தலைவர்களாக இருப்பவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். தலித் தலைவர்கள் அருந்ததியின மக்களின் அடிமட்ட சூழலைப் புரிந்து உள் இடஒதுக்கீட்டை ஆதரிக்க வேண்டும். அருந்ததியின மக்களிடம் இணக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என தன் இன மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

ஆனால், இந்த தலித் தலைவர்கள்.. அருந்ததி இன மக்களின் பிரதிநிதிகளை மதிப்பதே இல்லை. தங்களது போன் எண் கூட எங்களுக்கு கிடைக்கக் கூடாது என நினைக்கிறார்கள். அப்படி எங்களுக்கு கிடைத்தாலும் அவர்களிடம் பேச முடியாது என்பதே வருத்தமான உண்மை." என்கிறார் ஆதித்தமிழர் பேரவையின் அதியமான்.

அனைத்து சாதி வன்முறைகளும் தவறுதான்

சாதி அடக்குமுறைகள் எந்த இடத்தில் இருந்தாலும், எந்த படிநிலையில் நிகழ்ந்தாலும் அவை அனைத்தும் சம அளவிலான மனித உரிமை மீறல்களே! சாதி இந்துக்களின் வன்முறை என்று கொதித்து எழும் முற்போக்கு கும்பல், பறையர் இனத்தினரின் சாதி வன்முறைக்கு எதிராகவும் கொஞ்சமாவது குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

1 கருத்து:

சோழதேச காதலன் சொன்னது…

தலித் பெண் பாலியல் வன்கொடுமை: முற்போக்கு கும்பல் மவுனமாக இருப்பது ஏன்?/////
காரணம் இறந்தது அருந்ததியர் இன பெண் என்பதால் . அருந்ததியரை ஒன்றிணைத்து அரசியல் ஆதாயம் பார்க்க முடியாது மற்றும் பறையர் இன சாதி அரசியல் செய்பவர்களே முபோக்குவாதிகள் என்ற போர்வையில் உள்ளனர் . இறந்தது தலித்தாகவே இருந்தாலும் அவர் பறையர் இனம் அல்லவே ? கடந்த காலங்களில் தலித் பறையர் இளைஞர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளம் இதில் இந்த அருந்ததிய இன பெண்ணும் அடக்கம் . தலித் அமைப்புகள் அணைத்து பொதுவாக தலித் என்ற பார்வையிலும் உள்ளுக்குள் பறையர் என்ற சாதி அடையாளத்துடனுமே உள்ளது . இதற்கெல்லாம் மிக முக்கிய காரணம் தலித் தலித் என்று பறையர் சாதி வெறியை வளர்க்கும் , பொதுக்கூட்டத்தில் வைத்து மற்ற இன பெண்களை நாடககாதலில் விழ வைக்கும் நாட காதல் கம்பெனி கும்பலை வளர்க்க கூடிய பேச்சுகளை பேசும் திருமாவளவன் என்பதை யாராலும் மறுக்க முடியாது இணையத்தில் அவர் பேசியுள்ள வீடியோ காணொளிகள் அதை உறுதி செய்கின்றது .