Pages

புதன், ஜூன் 11, 2014

வடபழனியில் வன்னியர் வரலாறு மறைப்பு

ஓர் இனக்குழுவை அழிக்க வேண்டுமானல் அதன் வரலாற்று அடையாளங்களை அழிக்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில் இனக்குழுவின் வரலாற்றை அழிப்பதை, 'இனவெறியின் ஓர் அங்கம்' என்றும் சொல்லலாம்.

(வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய் VANNIYAPHOBIA சிலரைப் பீடித்திருப்பது குறித்து "வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய்: VANNIYAPHOBIA" பதிவில் விரிவாக எழுதியுள்ளேன்)

வன்னியர்களின் வரலாற்றை அழிப்பதிலும் மறைப்பதிலும் தமிழ் நாட்டினர் சிலர் எப்போதும் மும்முரமாக இருந்து வருகின்றனர். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு காடவராய கோப்பெருஞ்சிங்கன்:

தமிழ்நாட்டின் பாடநூல்களிலும் வரலாற்று நூல்களிலும் எத்தனையோ மன்னர்களைப் படித்திருப்போம். ஆனால், கடலூர் மாவட்டம் சேந்தமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் வடதமிழ் நாட்டை ஆண்ட காடவராய கோப்பெருஞ்சிங்கன் எனும் மாமன்னனைப் பற்றி யாரும் அதிகம் படித்திருக்க மாட்டார்கள்.
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள கோப்பெருஞ்சிங்கன் சிலை
தெற்கே தஞ்சை மாவட்டத்தில் தொடங்கி, வடக்கே கோதாவரி ஆறு வரை கல்வெட்டுகள் கொண்ட இந்த மாமன்னன் வரலாற்றுப் பக்கங்களில் மறைக்கப்பட - கோப்பெருஞ்சிங்கன் தன்னை ஒரு வன்னியன் என்று சொல்லிக்கொண்டதுதான்  காரணம்!

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு எதிரான இனவெறி கோலோச்சுகிறது என்பதற்கு கோப்பெருஞ்சிங்கனும் ஒரு உதாரணம் எனலாம்.

இதுபோன்று இன்னும் எத்தனையோ நிகழ்வுகள் உள்ளன. அதில் ஒன்றுதான் வடபழனியின் வரலாறு!

வடபழனியில் ஒரு வரலாற்று மறைப்பு

புலியூர்கோட்டம் எனப்படுகிற சென்னை வடபழனியில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் அண்ணாசாமி நாயக்கர். தனது வயிற்றுவலித் தீரவேண்டும் என்று முருகன் கோவில்களுக்கு சென்று வழிபடத் தொடங்கினார். நேர்த்திக் கடனாக திருத்தணி கோவிலில் நாக்கை அறுத்துக் கொண்டார். எனினும் அவருக்கு தொடர்ந்து பேச்சு வந்ததாகவும் வயிற்றுவலி தீர்ந்ததாகவும் தலபுராணம் கூறுகிறது.

பழனிமலை முருகன் கோவிலுக்கு நடந்தே சென்ற அண்ணாசாமி நாயக்கர், அங்கு ஒரு முருகன் படத்தை வாங்கி, அதனை தலையில் சுமந்து புலியூர்க் கோட்டம் வந்தார். அங்கு சிறு குடிசை அமைத்து முருகன் படத்தை வைத்து வழிபட்டார். அங்கு வந்தவர்களுக்கு குறிசொன்னார். அதனால் அந்த இடம் குறிமேடை ஆனது. (அந்த முருகன் படம் இப்போது வடபழனி ஆலயத்தின் தென்கிழக்கு மண்டபத்தில் உள்ளது)
அண்ணாசாமி நாயக்கர் பழனியிலிருந்து கொண்டுவந்து வழிபட்ட முருகன் படம்
பின்னர் இரத்தினசாமி செட்டியார் என்பவர் அண்ணாசாமி நாயகருக்கு அறிமுகமானார். அவர் அண்ணாசாமி நாயகரின் தொண்டராக ஆனார். இருவரும் சேர்ந்து முருகப்பெருமானுக்கு சிறு கோயில் ஒன்றை கட்டினார்கள். இரத்தினசாமி செட்டியார் தனது தொண்டராக பாக்யலிங்க தம்பிரான் என்பவரை தேர்வு செய்தார்.

இவ்வாறாக, வடபழனி முருகன் கோவிலில் அண்ணாசாமி நாயகர் முதல் சித்தராகவும், இரத்தினசாமி செட்டியார் இரண்டாம் சித்தராகவும், பாக்கியலிங்க தம்பிரான் மூன்றம் சித்தராகவும் கருதப்படுகிறர்கள்.

எங்கே இருக்கிறது வரலாற்று மறைப்பு?

மேற்கண்ட வரலாற்றின் படி தெரியவரும் செய்தி, வடபழனி கோவிலை உருவாக்கியவர் அண்ணாசாமி நாயகர். அவர் ஒரு வன்னியர் என்பதாகும்.

ஆனால், வரலாற்று அடையாளங்களில் இருந்து வன்னியர்களை அப்புறப்படுத்த வேண்டும். வன்னியர்களது அடையாளங்களை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்பது தமிழ்நாட்டில் வழிவழியாக வரும் குணமாக இருப்பதால் - வடபழனி ஆலயத்திலும் அதனை அரங்கேற்றினார்கள்.

வன்னியர் அடையாளம் அழிப்பு

வடபழனி முருகன் கோவிலுக்கு வடமேற்கே, நெற்குன்றம் சாலையில் வடபழனி கோவிலை உருவாக்கிய சித்தர்கள் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தை நிர்மானித்து இதற்கான மண்டபத்தை 1997 இல் கட்டினார்கள்.

அவ்வாறு 'வடபழனி முருகன் கோவில் உருவாகக் காரணமான சித்தர்கள் ஆலயம்' அமைக்கப்பட்ட போது அதற்கான கல்வெட்டில் சித்தர்களின் சாதி அடையாளத்தை மாற்றிவிட்டார்கள். அதாவது:

முதலாம் சித்தர்: அண்ணாசாமி நாயகர்
இரண்டாம் சித்தர்: இரத்தினசாமி செட்டியார்
மூன்றாம் சித்தர்: பாக்கியலிங்க தம்பிரான்

- என்பதை:

முதலாம் சித்தர்: அண்ணாசாமி தம்பிரான்
இரண்டாம் சித்தர்: இரத்தினசாமி தம்பிரான்
மூன்றாம் சித்தர்: பாக்கியலிங்க தம்பிரான்

- என்று மாற்றிவிட்டனர்.
சித்தர்கள் ஆலயக் கல்வெட்டில் 'அண்ணாசாமி தம்பிரான்'
அதாவது, வன்னியர், செட்டியார் என்கிற சாதி அடையாளம் மறைக்கப்பட்டது. இந்த மூன்று சித்தர்களும் ஒரே குடும்பத்தை (தம்பிரான்) சேர்ந்தவர்கள் என்பது போன்ற கட்டுக்கதையைக் கட்டிவிட்டார்கள்.

இப்போது தினமலர் பத்திரிகை போன்ற பல இடங்களிலும் வடபழனி முருகன் கோவிலை உருவாக்கியவர் 'அண்ணாசாமி தம்பிரான்' என்கிற கட்டுக்கதைதான் வலம் வருகிறது.

வன்னியர் சங்கத்தின் போராட்டம்

அண்ணாசாமி நாயகர் என்கிற பெயரை அண்ணாசாமி தம்பிரான் என்று மாற்றியதற்கு வன்னியர் சங்கம் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே எதிர்ப்பு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து 'அண்ணாசாமி தம்பிரான்' என்பதை வடபழனி கோவில் தென்கிழக்கு மண்டபப் படத்திலும், கோவில் இணயதளத்திலும் 'நாயக்கர்' என்று மாற்றியுள்ளனர்.

தமிழக அரசு கோவில் இணயதளத்தில் 'அண்ணாசாமி நாயக்கர்' என இருப்பதை இங்கே காண்க: ARULMIGU VADAPALANI ANDAVAR THIRUKOIL 

சித்தர்கள் ஆலயத்தில் உள்ள அண்ணாசாமி நாயக்கர் நினைவிடத்தில் 'தம்பிரான்' என்பதை அழித்துவிட்டு, அதன்மேல் 'நாயக்கர்' என எழுதியுள்ளனர். இப்போது இரண்டு பெயர்களுமே ஒன்றாகி தெரிகிறது!
 தம்பிரான் என்பதை அழித்துவிட்டு 'நாயக்கர்' என திருத்தியுள்ள படம்
சித்தர்கள் ஆலயக் கல்வெட்டில், இன்னமும் 'அண்ணாசாமி தம்பிரான்' என்றே உள்ளது. தினமலர் நாளிதழ் அண்ணாசாமி நாயக்கரை, அண்ணாசாமி தம்பிரான் என்று சொல்வதை இங்கே காண்க: அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் 

வடபழனி ஆலய கோபுர பதாகையில் அண்ணாசாமி நாயக்கர் என்று மாற்றுயுள்ளனர். ஆனால், இராமலிங்க செட்டியார் என்பது இராமலிங்க தமிபிரான் என்றுதான் உள்ளது.
தொடரும் இனவெறி

சுமார் 150 ஆண்டுகால வரலாற்றிலேயே இப்படி அப்பட்டமாக வன்னியர் வரலாற்று அழிப்பை செய்கிறவர்கள், கடந்த 1000 ஆண்டுகளில் எப்படியெல்லாம் இனவெறி வரலாற்று அழிப்பு வேலைகளைச் செய்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் செய்த மாபெரும் சாதனைகள் மறைக்கப்படுவதும், ஒரு சமூக நீதிப் போராளியான மருத்துவர் அய்யா அவர்களின் தியாகங்கள் மறைக்கப்பட்டு சாதி வெறியர் என்று பதிவுசெய்யப்படுவதும் - வன்னியர்கள் எனும் இனக்குழுவின் வரலாற்றை அழிக்கும் இனவெறி (VANNIYAPHOBIA) திட்டத்தின் ஓர் அங்கம்தான்.

அடையாள அழிப்பு இனவெறியர்களையும், அவர்களது தந்திரங்களையும் முறியடிப்பது ஒவ்வொரு வன்னியரின் கடமை என்பதை உணரும் காலம் வரவேண்டும். அப்போதுதான் உண்மை இனவெறியர்கள், நம்மைப் பார்த்து சாதிவெறியர் என்று சொல்லும் அவலத்தை முறியடிக்க முடியும்.

நாம் மீண்டெழுவோம். VANNIYAPHOBIA எனும் இனவெறி மனநோயை முறியடிப்போம்.

மின்வெட்டு: ஐயங்களை தீர்ப்பாரா ஜெயலலிதா?

மின்வெட்டு: ஐயங்களை தீர்ப்பாரா ‘பொதுநலவாதி’ ஜெயலலிதா?  - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
தமிழ்நாட்டில் இதுவரை நடைமுறையில் மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் முழுமையாக நீக்கப்படும் என்று கடந்த மே 27 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், மின்வெட்டு நீக்கப்பட்டதற்கு மூன்றாவது நாளே சென்னை தவிர மற்ற  மாவட்டங்களில் 4  முதல் 6 மணி நேரம்  மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதையும், இதனால் மக்கள் அவதிப்பட்டதையும் கடந்த 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தேன்.

சட்டமன்றத்தில் மற்ற அமைச்சர்களின் துறை சார்ந்த அறிவிப்புகளையும் 110 விதியின் கீழ் தாமே அறிவிக்கும் ‘பெரிய மனம்’ கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, மின்வெட்டு தொடர்பான எனது குற்றச்சாற்றுகளுக்கு மட்டும் பதிலளிக்கும் வாய்ப்பை மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு தாராள மனதுடன் வழங்கியிருக்கிறார்.

அவரும் இட்ட பணியை நிறைவேற்ற வேண்டுமே என்பதற்காக நான்கு பக்கங்களுக்கு ஒரு நீண்ட கட்டுரையை எழுதி, அதில் தமது தலைவியை குளிர்விப்பதற்காக ஆங்காங்கே ‘பச்சை தன்னலவாதி’, ‘அரசியல் ஆதாரம் தேட நினைக்கிறார்’, ‘அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டைப் போடுபவர்’ என முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே பொருந்தும் வார்த்தைகளால் என்னை விமர்சித்து, அதை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், மின்வெட்டை போக்குவதற்காக அ.தி.மு.க. அரசு கடந்த 3 ஆண்டுகளில் ஒரு மின்திட்டத்தைக் கூட உருவாக்கி செயல்படுத்தவில்லை என்ற எனது முதன்மைக் குற்றச்சாற்றுக்கு அறிக்கையின் முதல் பத்தி தொடங்கி கடைசி பத்தி வரை எங்குமே பதிலைக் காண முடியவில்லை.

இப்போது கூடுதலாக உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படும் 2550 மெகாவாட் மின்சாரம் கடந்த காலங்களில் தொடங்கப்பட்ட மின் திட்டங்களிலிருந்து தான் கிடைத்தது என்பதையும் அவர் மறுக்க வில்லை. மாறாக, மின்வெட்டை போக்க ஜெயலலிதா பாடுபடுவதாக வெற்று வசனங்களை வீசியுள்ளார்.
மே 27 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,‘‘ நான் ஏற்கனவே உறுதியளித்தவாறு மின்வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை 3 ஆண்டுகளில் கொண்டு வந்ததில் பெருமிதம் அடைகிறேன்’’ என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். இதன் மூலம் 3 ஆண்டுகளில் மின்வெட்டைப் போக்குவதாக அவர் உறுதியளித்திருந்ததைப் போலவும், அதை இப்போது செய்து காட்டியதன் மூலம் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டது போலவும் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முனைந்திருக்கிறார். இது பச்சைப் பொய் என்பது தான் எனது குற்றச்சாற்று.

பத்துக்கும் மேற்பட்ட முறை வாய்தா

மின்வெட்டைப் போக்குவதற்காக ஜெயலலிதா பத்துக்கும் மேற்பட்ட முறை வாய்தா கோரியதை மக்கள் மறந்துவிடவில்லை. ஒருவேளை ஜெயலலிதா மறந்திருந்தால் அவர் எந்தெந்த தேதிகளில் வாய்தா கோரினார் என்பதை அவருக்கு நினைவூட்ட நான் தயாராக இருக்கிறேன்.

# தமிழகத்தில் மூன்றாவது முறையாக ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ஒரு மாதத்திற்குள் 10.06.2011 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த ஜெயலலிதா,‘‘ஜூலை மாதம் முதல் தமிழகத்தில் மின்வெட்டு 2 மணி நேரமாக குறைக்கப்படும்; விரைவில் மின்வெட்டே இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்படும்’’ என்றார்.

# பின்னர் 04.02.2012 அன்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதலமைச்சர்,‘‘2012 அக்டோபருக்குள் 2550 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும். 2013ஆம் ஆண்டு மத்தியில் மின்வெட்டு அடியோடு நீக்கப்படும்’’ என்று உறுதியளித்தார்.

#தொடர்ந்து 29.03.2012 அன்று 110 விதியின் கீழ் பேரவையில் அறிக்கை வாசித்த போதும் இதே வாக்குறுதியை அளித்தார். ஆனால், இவற்றில் எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை.

# 31.10.2012 அன்று கேள்வி நேரத்திற்குப் பிறகு நடந்த விவாதத்தின் போதும், 08.02.2013 அன்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும்போதும், 25.04.2013 அன்று  110விதியின் கீழ் அறிக்கை படித்த போதும் 2013 ஆம் ஆண்டு இறுதிக்குள் மின்வெட்டு நீங்கும் என முதல்வர் கூறினார். அதுமட்டுமின்றி, 2013 இறுதிக்குள் 4385 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். இவையும் நிறைவேற்றப்பட வில்லை.

# 25.10.13 அன்று பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டில் எங்குமே மின்வெட்டே இல்லை என்று அறிவித்தார். அதற்கு அடுத்த நாளே தமிழகம் இருண்டது. ஆனால், மத்திய அரசின் சதியே இதற்கு காரணம் என பழி போட்டு தப்பிக்க முயன்றார்.

# கடைசியாக 03.02.2014 அன்று சட்டப்பேரவையில் பேசும் போதும், அதன்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றும் போதும் மின்வெட்டு விரைவில் விலகும் என்றார்.

இப்படி வாய்தா மேல் வாய்தா வாங்கி விட்டு, வாக்குறுதியை சரியாக நிறைவேற்றி விட்டேன் என்று கூறுவது தான் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்ற உயர் பதவியில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு அழகா?

மின்வெட்டு: முதலமைச்சர் பதில் அளிப்பாரா?

தமிழ்நாட்டில் மின்வெட்டைப் போக்க முதல்வர் ஜெயலலிதா அல்லும் பகலும் பாடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று அமைச்சர் விஸ்வநாதன் கூறுகிறார். இது உண்மை என்றால், தமிழக மின்திட்டங்கள் தொடர்பான கீழ்க்கண்ட வினாக்களுக்கு முதலமைச்சர் பதில் அளிப்பாரா?
1) அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் கடந்த 3 ஆண்டுகளில் 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் விரிவாக்க அனல் மின் திட்டத்திற்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 26.10.12 அன்று ஒப்பந்தம் கோரப்பட்டு, 31.03.2013க்கு முன்பாக ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டுவிட்ட நிலையில், அதன் பின் ஓராண்டு கழித்து 27.02.2014 அன்று ஒப்பந்தம் வழங்குவது தான் அல்லும்பகலுமாக அரும்பாடுபடும் லட்சனமா?

அடுத்த ஆண்டு இறுதியில்  முடிவடைய வேண்டிய இத்திட்டப்பணிகள், 2 ஆண்டுகள் தாமதமாக 2017 செப்டம்பரில் தான் நிறைவடையும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாமதத்திற்கு காரணம் யார்?

2) 1320 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல மின் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் 26.07.2013 அன்றும், 1320 மெகாவாட் உடன்குடி மின்திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் அதற்கு அடுத்த வாரமும் பிரிக்கப்பட்ட நிலையில், அதன்பின் 11 மாதங்கள் ஆகியும் இதுவரை அந்த மின் திட்டங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படாதது ஏன்? மின்வெட்டைத் தீர்ப்பதற்காக  மிகத் தீவிரமாக செயல்படும் அழகு இதுதானா?

3) கடந்த 29.03.2012 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிக்கை படித்த ஜெயலலிதா,  எண்ணூரில் இப்போதுள்ள பழைய 450 மெகாவாட் மின்நிலையத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் 660 மெகாவாட் எண்ணூர் மாற்று அனல் மின் நிலையம் அமைக்கப்படும்; அதில் 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் உற்பத்தி தொடங்கும் என அறிவித்தார்.  அதன்பின் 2 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், அத்திட்டத்திற்காக சாத்தியக் கூறு அறிக்கை தயாரித்ததைத் தவிர வேறு எந்த பணியும் நடக்கவில்லையே ஏன்?

4) தூத்துக்குடியில் என்.எல்.சி. நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு மின்சார வாரியம் அமைக்கும் மின்திட்டத்தின் இரு அலகுகளில் முறையே 2013 ஆம் ஆண்டு ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் உற்பத்தி தொடங்கும் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், கெடு முடிந்து ஓராண்டாகியும்  இதுவரை அங்கு மின் உற்பத்தி தொடங்காதது ஏன்?

5) அடுத்த ஆண்டு இறுதியில் மின்னுற்பத்தி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட 1600 மெகாவாட் திறன் கொண்ட இராமநாதபுரம் உப்பூர் மின்திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கூட இதுவரைக் கோரப்படாதது ஏன்?

6) மூன்றாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றபின் முதன்முறையாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் அளவுக்கு மின்னுற்பத்தித் திறனை பெருக்க திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தார். இதை நிறைவேற்ற முதலமைச்சர் ஜெயலலிதாவும், அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

7) செய்யூரில் 4000 மெகாவாட் திறன் கொண்ட மின் திட்டத்தை கடந்த 2006 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்தது. அதை செயல்படுத்த முந்தைய தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என முதலமைச்சர் ஜெயலலிதா குற்றஞ்சாற்றியிருந்தார். ஆனால், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்ன?

8) 2013 முதல் 2015 வரை ஆண்டுக்கு 1000 மெகாவாட் மீதம் 3 ஆண்டுகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சூரிய ஒளி மின்சாரக் கொள்கையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதுவரை ஒரு மெகாவாட்டாவது சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்பட்டிருக்கிறதா?
9) தமிழகம் விரைவில் மின்மிகை மாநிலமாக மாறும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறுகிறார். ஆனால், மின்வெட்டை சமாளிக்க அடுத்த 15 ஆண்டுகளுக்கு 3330 மெகாவாட் மின்சாரத்தை மற்ற மாநிலங்களில் இருந்து வாங்க நீண்ட கால ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக நத்தம் விஸ்வநாதன் கூறுகிறார். தமிழகம் மின்மிகை மாநிலமாகும் என முதல்வர் கூறுவதை நம்புவதா? அல்லது அடுத்த 15 ஆண்டுகளுக்கு அதற்கு வாய்ப்பே இல்லை என அவரது நம்பிக்கைக்குரிய நத்தம் விஸ்வநாதன் கூறுவதை நம்புவதா?

10) 2011 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. அரசு பதவியேற்ற போது அறிவிப்பு நிலையில் இருந்த மின் திட்டங்களை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மின்னுற்பத்தியை பெருக்க அ.தி.மு.க. அரசு புதிதாக உருவாக்கிய திட்டங்கள் எவை... அவற்றின் இன்றைய நிலை என்ன? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு விவாதிக்க முதலமைச்சர் ஜெயலலிதா தயாரா?

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு முட்டுக்கட்டைப் போடுவதை நான் வாடிக்கையாக கொண்டிருப்பதாக விஸ்வநாதன் கூறியுள்ளார்.

தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க பங்களிப்பு செய்ததில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் எந்த கட்சியும் போட்டியிட முடியாது. இந்தியாவே போற்றும் 108 அவசர ஊர்தி, சேலத்தில் ரூ. 139 கோடியில் அதிஉயர் சிறப்பு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவக் கட்டமைப்புத் திட்டங்களைக் கொண்டு வந்தவர் பா.ம.க.வின் மருத்துவர் அன்புமணி இராமதாசு தான் என்பதையும், தமிழகத்திற்கு தொடர்வண்டித் திட்டங்களே எட்டிப் பார்க்காத காலத்தில், தொடர்வண்டித் துறை இணை அமைச்சர்களாக பொறுப்பேற்ற பா.ம.க.வைச் சேர்ந்தவர்கள் தான் தமிழகத்திலுள்ள அனைத்து மீட்டர்கேஜ் பாதைகளையும் அகல ரயில்பாதைகளாக மாற்றினார்கள்.

அதேநேரத்தில் மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை, ரூ.10,000 கோடி மதிப்புள்ள மத்திய அரசின் நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு வெளியில் தெரியாத காரணங்களுக்காக  முட்டுக்கட்டைப் போட்டு வருபவர் ஜெயலலிதா தான்.

இதையெல்லாம் வரலாற்று ஏடுகளைப் படித்தோ அல்லது அவற்றைப் படிப்பவர்களிடம் கேட்டோ நத்தம் விஸ்வநாதன் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆட்சிக்கு வந்த முதல் 5 ஆண்டுகளில் மாதம் ஒரு ரூபாய் மட்டுமே ஊதியம் வாங்கி, இன்றைய மதிப்பில் ரூ.6000 கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் குவித்த ‘சிவப்பு பொதுநலவாதி’ ஜெயலலிதா, மின்வெட்டு தொடர்பாக தமிழக மக்கள் சார்பில் நான் எழுப்பியுள்ள வினாக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவரது விளக்கம் அமைந்தால் மின்வெட்டு பற்றி விமர்சிப்பதை நான் நிறுத்திக் கொள்கிறேன்.

இல்லாவிட்டால், மின்திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க முதலமைச்சர் ஜெயலலிதா தயாரா?

- பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு  

திங்கள், ஜூன் 09, 2014

வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய்: VANNIYAPHOBIA

50 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில், திமுக - அதிமுக ஆதரவில்லாமல் வென்று சாதனைப் படைத்தார் மருத்துவர் அன்புமணி இராமதாசு. மாபெரும் இயக்கமான திமுக ஓரிடத்தில் கூட வெற்றிபெறாத நிலையில் - பாமக வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

ஆனால், இந்த சாதனையை தமிழக பத்திரிகைகள் எதுவும் எழுதவில்லை. சமூக ஊடகங்களிலும் இச்சாதனை பேசப்படவில்லை.

(இதுவே, மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களுக்குப் பதிலாக, வைகோ அவர்கள் வெற்றிபெற்றிருந்தால் - தமிழக ஊடகங்களில் அது மாபெரும் சாதனையாக பேசப்பட்டிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்).

மருத்துவர் அன்புமணி அவர்களின் சாதனையைப் பற்றி ஒரு வார்த்தையும் பேச வராத தமிழக ஊடகங்கள் - அவர் அமைச்சராக்கப்படவில்லை என்பதை மட்டும், ஏதோ பெரிய ஏமாற்றாம் என்பது போல எழுதி மகிழ்கின்றன.

வன்னியர் ஒருவரின் உண்மையான வெற்றியை மறைத்து, அதே வன்னியரின் இல்லாத தோல்வியை இவர்கள் கொண்டாடுவது ஏன்?

அதே போன்று, மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் ஈழத்தமிழர்களுக்காக ஐநா அவையில் உரையாற்றியதை மூடிமறைத்தக் கும்பல், இப்போது ராஜபக்சே வரும் நிகழ்ச்சிக்கு அவர் போகலாமா எனத் தூற்றுகின்றனர்.

வன்னியர் ஒருவரின் சாதனையை மறைத்து, அதே வன்னியரின் மீது அவதூறுகளை பரப்புவது ஏன்? 

இதற்கு பின்னாலிருப்பது 'ஒரு உளவியல் காரணமே' ஆகும். இதனை ஒவ்வொரு வன்னியரும் உணர வேண்டும்.

இனவெறி மனநோய்

தமிழகத்தில் குறிப்பிட்ட சிலருக்கு வன்னியர்களுக்கு எதிரான மனநோய் பீடித்துள்ளது. இந்த மனவியாதி பிடித்தவர்களிடம் பணம், ஊடகம், அதிகாரம் எல்லாமும் இருக்கிறது. அதனால், தொற்றுநோய்ப் போன்று, 'வன்னியரல்லாதோரிடம்' ஒரு பொதுவான 'வன்னியர் எதிர்ப்பு மனநிலையை' பரப்பி வைத்துள்ளனர்.


வன்னியர்கள் குறித்த எல்லாவிதமான கட்டுக்கதைகளுக்கும் அவதூறுகளுக்கும் இந்த மனநோய் தான் காரணம் ஆகும்.

உலகளாவிய எடுத்துக்காட்டு

ஒரு இனத்துக்கு எதிரான பொய்ப்பிரச்சாரம் 'இனவெறியின் ஓர் வடிவம்' ஆகும். அவ்வாறே, யூதர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ANTISEMITISM என்றும், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ISLAMOPHOBIA என்றும் வகைப்படுத்தப்படுகிறது.

அதே போன்று வன்னியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது VANNIYAPHOBIA எனக் கூறலாம்.

  • ANTISEMITISM – “is prejudice, hatred of, or discrimination against Jews”

  • ISLAMOPHOBIA - “a multifaceted mix of discourse, behaviour and structures which express and perpetuate feelings of anxiety, fear, hostility and rejection towards Muslims”

  • VANNIYAPHOBIA - “is prejudice, hatred of, or discrimination against Vanniyars”
வன்னியர்கள் மீதான இத்தகைய வெறுப்புக்கு வன்னியர்களின் செயல்பாடுகள் பெரிதளவில் காரணம் இல்லை. அப்படி ஏதேனும் இருந்தால், அதனைக் கண்டறிந்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆனால், இந்த வெறுப்புக்கு முதன்மையான காரணம் மற்றவர்கள் மனதில் உள்ள வீணான மனநோய் (VANNIYAPHOBIA) என்பதை உணர்வோம். அதனை மற்றவர்களுக்கும் புரியவைக்க முயல்வோம்.

(2012 தருமபுரி நிகழ்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் தேவர் ஜெயந்திக்கு சென்று திரும்பியவர்கள் சுமார் 10 பேர் நடுவழியில் கொலைசெய்யப்பட்டனர். அதுகுறித்து யாரும் பேசவில்லை. ஆனால், மரக்காணம், தருமபுரி நிகழ்வுகளில் இதற்கு நேர் எதிராக எல்லோரும் நடந்தது கொண்டனர் என்பதை கவனிக்கவும்.

எதிர்தரப்பில் ஒரு நபருக்குக் கூட சிறு கீரலும் இல்லாத மரக்காணம், தருமபுரி சம்பவங்களில், வன்னியர்கள் தரப்பில் மட்டுமே 2 பேர் படுகொலை, ஒருவர் தற்கொலை ஆனார்கள். வன்னியர்கள் பாதிக்கப்பட்ட இந்த நிகழ்வுகளில் குற்றம்சாட்டப்பட்டோரும் வன்னியர்கள்தான்)


என்ன செய்ய வேண்டும்?

வன்னியர்களுக்கு எதிரான இனவெறி என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட மனநோய் என்பதை உணர்ந்து - வன்னியர்களுக்கு எதிரான இனவெறிக் கருத்துகளை பரப்புவோரையும், அவர்களது இந்த மனநோய்க் கருத்துகளையும் ஆவணப்படுத்துவதற்கு வன்னியர்கள் முன்வர வேண்டும்.

எடுத்துக்காட்டாக, 'தமிழ்நாடு தனி நாடாக மாறினால் வன்னியர்கள் வெளியேற்றப்படுவார்கள்' என்றார் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி. வன்னியர்களின் அரசியல் அடையாளமாக மருத்துவர் அன்புமணி இராமதாசு இருப்பதால், 'தருமபுரியில் அன்புமணி தோற்கவேண்டும்' என்று எழுதினார் தமிழ் இந்து நாளிதழின் கவிதா முரளீதரன்.

இவ்வாறாக, யாரெல்லாம், எப்படியெல்லாம் வன்னியர்கள் மீது வெறுப்பை உமிழ்கிறார்கள் அன ஆவணப்படுத்தி, அதற்கான காரணங்களை ஆராய ஆர்வமுள்ள வன்னியர்கள் முன்வர வேண்டும்.

இனவெறி எனும் மனநோய் (RACISM), யூதர்களுக்கு எதிரான மனநோய் (ANTISEMITISM), இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநோய் (ISLAMOPHOBIA) எவ்வாறு எதிர்க்கப்படுகிறதோ - அதே போன்று வன்னியர்களுக்கு எதிரான இனவெறி (VANNIYAPHOBIA) மனநோயை கையாள வன்னியர்கள் முன்வர வேண்டும்.

குறிப்பு: எந்த ஒரு தனிப்பட்ட சாதி, இனம், மதம், மொழி, குழுவினருக்கு எதிராகவும் வன்னியர்கள் வெறுப்புணர்வை கைக்கொள்ளக் கூடாது. மனிதர்களின் குணம் அவர்களது பிறப்பிலோ, மரபணுவிலோ, அடையாளத்திலோ இல்லை. அது அவரவர் எண்ணத்திலும் நம்பிக்கையிலும் இருக்கிறது.



தொடர்புடைய சுட்டிகள்:








ஞாயிறு, ஜூன் 08, 2014

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி குழுவுடன் பிரதமரை சந்திக்க வேண்டும்

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் பிரதமரை சந்திக்க வேண்டும்

-  மருத்துவர் அன்புமணி இராமதாசு அறிக்கை -

"மத்திய உரம் மற்றும் இரசாயனத் துறை அமைச்சரும், பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அனந்தகுமார் பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் உணமையல்ல என்றும் அவை முழுக்க முழுக்க வதந்தி தான் என்றும் கூறியிருக்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் திட்டமே மத்திய அரசிடம் இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.கர்நாடகத்தை சேர்ந்த மற்றொரு மத்திய அமைச்சரான சதானந்த கவுடாவும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைத்து 25 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்று வரை காவிரி பிரச்சினை தீரவில்லை. தமிழகத்தில் காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் துயரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த ஆண்டு கூட குறுவை பாசனத்திற்காக மேட்டூர்  அணையை வரும் 12ஆம் தேதி திறக்க முடியாத நிலை நிலவுகிறது. காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி இறுதித் தீர்ப்பை அளித்தது. அப்போதே இறுதித் தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால், அப்போது மத்திய அரசில் அங்கம் வகித்த கர்நாடக அமைச்சர்களின் தலையீடு காரணமாக  நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்படவில்லை. அதன் பின் 6 ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு கடந்த ஆண்டு பிபரவரி மாதம் தான் உச்ச நீதிமன்ற ஆணைப்படி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதிலிருந்து 20 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். ஆனால், வேண்டுமென்றே அந்த வாரியத்தை அமைக்காமல் தமிழக மக்களுக்கு முந்தைய  மத்திய அரசு துரோகம் செய்தது.

நதிநீர் பிரச்சினைகளைப் பொருத்தவரை முந்தைய காங்கிரஸ் அரசில் தமிழ்நாட்டுக்கு துரோகம் மட்டுமே பரிசாக கிடைத்துவந்த நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப் பின்  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியிலாவது இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று தமிழக மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்கு வலு சேர்ப்பதைபோல காவிரி பிரச்சினையை தீர்க்க காவிரி மேலாண்மை வாரியத்தையும், முல்லைப்பெரியாறு பிரச்சினையை தீர்க்க கண்காணிப்புக்குழுவையும் அமைக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இத்தகையச் சூழலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டமே மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய அமைச்சர் நண்பர் அனந்த குமார் கூறியிருப்பது, மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் செயலாகும்.

அரசியல் சட்டத்தின்படி மத்திய அமைச்சர்களாக இருப்பவர்கள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொதுவானவர்களாக செயல்பட வேண்டும். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை  அமைப்பதற்காக  நண்பர் அனந்த குமார் குரல் கொடுக்க வேண்டும்.

காவிரி நடுவர் மன்ற  இறுதித் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள்  தொடரப்பட்டிருப்பதால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று கருத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச  நீதிமன்றம், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை எதிர்த்து பல மாநில அரசுகள் மேல் முறையீடு செய்துள்ள போதிலும், இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடவோ அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட அமைப்புகளை அமைக்கவோ எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நடவடிக்கைகளை விரைவு படுத்தும்படி பிரதமர் நரேந்திர  மோடி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அவர்களையும்  நான் தில்லியில் சந்தித்து பேசவிருக்கிறேன்

அதே நேரத்தில் இந்த பிரச்சினையில் தமிழக அரசும் விழிப்புடன் செயல்பட வேண்டும். கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதிப்பதுடன், எல்லா கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தவும்  திட்டமிட்டிருக்கிறார். தமிழக முதலமைச்சர் அவர்களும் இப்பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். அதைத்தொடர்ந்து அனைத்துக் கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன்  பிரதமர் அவர்களை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கும்படி வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."

ஐநா மனித உரிமை ஆணையத்தின் புதிய தலைவர்

தமிழரான நவநீதம் பிள்ளைக்கு அடுத்ததாக - இஸ்லாமியரான ஜோர்டன் இளவரசர் செயித் பின் ராத் (Prince Zeid Ra’ad Zeid Al-Hussein) ஐநா மனித உரிமை ஆணையத்தின் புதிய தலைவராக (High Commissioner for Human Rights) பொறுப்பேற்க உள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் பன்னாட்டு சட்டங்களின் செயல்பாட்டை வலியுறுத்துபவராகவும் இனப்படுகொலையை கடுமையாக எதிர்ப்பவராகவும் இவர் அறியப்பட்டிருக்கிறார்.

இளவரசர் செயித் பின் ராத் போர்க்குற்றங்கள் தொடர்பான ரோம் உடன்படிக்கையின் கீழ் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ICC) நிறுவக் காரணமானவர்களில் ஒருவரும், அதன் முதல் நிருவாகக் குழுத் தலைவராக இருந்தவரும் ஆவார்.

இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த சர்வதேச நெறிமுறைகள் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய இவர் சர்வதேச சட்டங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.

ஐநா படைகளின் பாலியல் குற்றங்கள் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த குழுவிற்கும் இவர் தலைமை யேற்றிருக்கிறார்.

கடந்த 2000 ஆவது ஆண்டு முதல் இவர் ஐநா அவை நடவடிக்கைகளில் முன்னணியில் பணியாற்றி வருகிறார். அதற்கு முன்பு யூகோசுலோவியா நாட்டின் இனப்படுகொலை தொடர்பான ஐநா அமைதிப்படையில் பணியாற்றியுள்ளார்.

ஐநா நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் கொண்ட 'இளவரசர் செயித் பின் ராத்' ஐநா மனித உரிமை ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்பது வரவேற்கத்தக்கதே.
குறிப்பு: ஐநா மனித உரிமை ஆணையர் (United Nations High Commissioner for Human Rights -OHCHR) என்பது உலகளாவிய மனித உரிமைக்கான தலைமைப் பதவி. 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

ஐநா மனித உரிமைப் பேரவை (United Nations Human Rights Council -UNHRC) என்பது இவருக்கு உத்தரவிடக் கூடிய நாடாளுமன்றம் போன்ற ஒரு அரசியல் அமைப்பாகும். அதில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இரண்டும் ஒன்றல்ல.

சனி, ஜூன் 07, 2014

இலங்கை மீதான விசாரணைக் குழு தயார்: ஐநா அறிவிப்பு

இலங்கை மீது விசாரணை நடத்துமாறு கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், விசாரணைக் குழு உருவாக்கப்பட்டுள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமை அவையின் 26 ஆவது கூட்டத்தின் தொடக்க நிகழ்வில் 10.06.2014 ஆம் நாள், நவநீதம் பிள்ளை அவர்கள் நிகழ்த்தவுள்ள உரை தற்போது வெளியாகியுள்ளது. அந்த உரையில், இலங்கை மீதான விசாரணைக் குழு தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்:

"I note also that last month marked the fifth anniversary of the end of the war in Sri Lanka, where the scars created by terrorism and conflict have yet to heal. My Office has now put in place a staff team that will be supported by several experts and Special Procedures mandate holders, to conduct the comprehensive investigation mandated by this Council in order to advance accountability, and thus reconciliation. I encourage the Government to take this opportunity to cooperate with a credible truth-seeking process."

(Opening Statement by Ms. Navi Pillay, United Nations High Commissioner for Human Rights, Geneva, 10 June, 2014)

இதனிடையே, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை அமைப்பில் பணியாற்றி, பின்னர் ஐநாவில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றும் Ms. SANDRA BEIDAS எனும் பெண்ணின் தலைமையில் இலங்கை மீதான ஐநா விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்ய முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனைச் சேர்ந்த இவர் சூடான் நாட்டின் மீதான ஐநா மனித உரிமை விசாரணை ஆணையம், நேபாளத்தின் மீதான ஐநா மனித உரிமைக் கண்காணிப்புக் குழு உள்ளிட்டவற்றிலும் பணியாற்றியவராகும்

திங்கள், மே 05, 2014

முற்போக்கு பாசிசம்: கருத்துரிமையை சகிக்காத தமிழ்நாட்டு முற்போக்கு கூட்டம்!

பரதவ மக்களின் வாழ்க்கையை தமிழில் இலக்கியமாக வடித்தவர் ஜோ டி குரூஸ். அவரது ஒரு கருத்து தமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக - அவரது நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிடாமல் தடுத்துள்ளது தமிழ்நாட்டு பாசிச முற்போக்குக் கூட்டம்.

"அரசியல் எதிர்ப்பினையும் விமர்சனத்தையும் சகித்துக் கொள்ளாமல் நசுக்குதல்" என்பது பாசிசத்தின் ஒரு வடிவமாகும். அதையே முற்பொக்குக் கூட்டத்தினர் இப்போது மேற்கொண்டுள்ளனர்.

ஜோ டி குரூஸ் யார்?

தூத்துக்குடி மாவட்டம் உவரி கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஜோ டி குரூஸ் 'கொற்கை', 'ஆழி சூழ் உலகு' என்கிற நூல்களை எழுதியுள்ளார்.
அவரது இரு புதினங்களும் மீன்பிடி தொழில் புரியும் பரதவர் வாழ்க்கையைக் களமாகக் கொண்டவை. (மேலும் 2013ல் வெளியான மரியான் திரைப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்). இவரது கொற்கை புதினத்திற்காக 2013ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது

ஜோ டி குரூஸ் அவர்களின் 'ஆழி சூழ் உலகு' நூலை வெளியிட புதுதில்லியின் நவயானா பதிப்பகம் முன்வந்தது. அதனை வ. கீதா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். அந்த நூல் வெளியீடு இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.

ஜோ டி குரூஸ் செய்த தவறு என்ன?

ஜோ டி குரூஸ் அவரது முகநூலில் "வளர்ச்சியின் நாயகர் என்று நரேந்திர மோடி" என்று கருத்து தெரிவித்திருந்தார்.

(Joe D’Cruz: Why do I want Mr.Narendra Modi to be the Prime Minister of India? Being a proud son of our great nation, I want my Mother India to be strong and prosperous among the world nations… Who can do that?...I am sure he will lead the country to unprecedented zenith and regain our pride and a glory greater than our past. We want our children to be proud of our rightful choice. We want generations to thank us for giving India her best PM. Hence I want Mr.Narendra Modi to become the Prime Minister of India.)

ஜோ டி குரூஸின் 'மோடி' கருத்துக்காக 'ஆழி சூழ் உலகு' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தக வெளியீடு நிறுத்தி வைத்திருப்பதாக நவயானா பதிப்பகம் அறிவித்தது. "ஜோ டி குரூஸின் நிலைப்பாடு எங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது’’ என்றும் தெரிவித்தது.
நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சமூக செயல்பாட்டாளரான வ. கீதா, ‘‘ஜோ டி குரூஸ் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டின் மூலம், ஆபத்தான கொடுங்கோலர்களிடமிருந்து பரிசு வாங்க நினைக்கிறார். அதனாலேயே என் மொழிபெயர்ப்பை கைவிட தீர்மானித்தேன்’’ என்று சொல்கிறார்.

(Navayana:"Navayana had signed up to publish a translation of Aazhi Soozh Ulagu (Ocean Ringed World), the 2005 debut novel of Joe D’Cruz, who subsequently won the Sahitya Akademi award in 2013 for his second novel Korkai. The translation was done by V. Geetha, feminist writer and translator, and the English edition was due in late 2014. In the light of D’Cruz publicly endorsing Narendra Modi’s candidacy for prime-ministership, both Navayana and Geetha have decided to cancel the agreement signed with D’Cruz and withdraw the book.")


இதுகுறித்து ஜோ டி குரூஸ், ‘‘ஒப்பந்தம் கையெழுத்தாகி நூல் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் நேரத்தில் மொழிபெயர்ப்பு கைவிடப்பட்டதாக வந்த அறிவிப்பு அதிர்ச்சியை அளிக்கிறது. நான் ஏழைகளைப் பற்றி எழுதுவதால் நான் இடதுசாரியாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?’’ என்கிறார் ஜோ டி குரூஸ்.

முற்போக்கு பாசிசம்

ஜோ டி குரூஸ் அவர்களின் கருத்து சரியா தவறா என்பது அவரவர் நிலைபாட்டைப் பொருத்தது. ஆனால், அப்படி ஒரு கருத்தை வெளிப்படுத்தும் உரிமை அவருக்கு இருக்கிறதா? இல்லையா? என்பது மிக முக்கியமான கேள்வி ஆகும்.

மேலும், "ஆழி சூழ் உலகு" நூல் வெளியிடப்பட்ட போது இதுபோன்ற ஒரு கருத்தை அவர் வெளிப்படுத்தவில்லை. அந்த நூலிலும் அவர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக எதுவும் கூறவில்லை. அப்படியிருக்கையில், அவரின் இன்றைய ஒரு கருத்துக்காக - நேற்றைய நூலை முடக்குவது என்ன நியாயம்?

தமிழ்நாட்டில் கவிஞர் கண்ணதாசன் என்கிற புகழ்பெற்ற கவிஞர் இருந்தார்.

அவர் "நீதிமன்றத்தின் நீதிக்கும் நீதி சொல்வார்...நெறிகெட்டு வளைந்த தெல்லாம் நிமிர்த்தி வைப்பார்" என தந்தை பெரியாரைப் புகழ்ந்து பாடல் எழுதினார்.

அதே கண்ணதாசன் "அர்த்தமுள்ள இந்துமதம்" என்கிற ஒருநூலை எழுதினார். அந்த நூல் இந்துத்வ வாதிகளின் முக்கிய பிரச்சார நூலாக இருக்கிறது.

அதே கண்ணதாசன் கிறித்தவ மதத்துக்காக "இயேசு காவியம்" என்கிற நூலையும் எழுதினார்.
மாறுபட்ட நேரங்களில் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்த கண்ணதாசனை இந்தத் தமிழ்நாடு போற்றியது. 

இன்று மாறுபட்ட கருத்து எதையும் முன்வைக்காமல் - தனது சொந்தக் கருத்தை வெளிப்படுத்திய ஜோ டி குரூஸ் தண்டிக்கப்பட்டிருக்கிறர்.

தமிழ்நாட்டின் முற்போக்கு பாசிச கும்பல் - முசோலினிக்கும் ஹிட்லருக்கும் வாரிசுகளாக மாறிக்கொண்டிருக்கின்றனர்.