Pages

திங்கள், ஜூன் 09, 2014

வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய்: VANNIYAPHOBIA

50 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில், திமுக - அதிமுக ஆதரவில்லாமல் வென்று சாதனைப் படைத்தார் மருத்துவர் அன்புமணி இராமதாசு. மாபெரும் இயக்கமான திமுக ஓரிடத்தில் கூட வெற்றிபெறாத நிலையில் - பாமக வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

ஆனால், இந்த சாதனையை தமிழக பத்திரிகைகள் எதுவும் எழுதவில்லை. சமூக ஊடகங்களிலும் இச்சாதனை பேசப்படவில்லை.

(இதுவே, மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களுக்குப் பதிலாக, வைகோ அவர்கள் வெற்றிபெற்றிருந்தால் - தமிழக ஊடகங்களில் அது மாபெரும் சாதனையாக பேசப்பட்டிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்).

மருத்துவர் அன்புமணி அவர்களின் சாதனையைப் பற்றி ஒரு வார்த்தையும் பேச வராத தமிழக ஊடகங்கள் - அவர் அமைச்சராக்கப்படவில்லை என்பதை மட்டும், ஏதோ பெரிய ஏமாற்றாம் என்பது போல எழுதி மகிழ்கின்றன.

வன்னியர் ஒருவரின் உண்மையான வெற்றியை மறைத்து, அதே வன்னியரின் இல்லாத தோல்வியை இவர்கள் கொண்டாடுவது ஏன்?

அதே போன்று, மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் ஈழத்தமிழர்களுக்காக ஐநா அவையில் உரையாற்றியதை மூடிமறைத்தக் கும்பல், இப்போது ராஜபக்சே வரும் நிகழ்ச்சிக்கு அவர் போகலாமா எனத் தூற்றுகின்றனர்.

வன்னியர் ஒருவரின் சாதனையை மறைத்து, அதே வன்னியரின் மீது அவதூறுகளை பரப்புவது ஏன்? 

இதற்கு பின்னாலிருப்பது 'ஒரு உளவியல் காரணமே' ஆகும். இதனை ஒவ்வொரு வன்னியரும் உணர வேண்டும்.

இனவெறி மனநோய்

தமிழகத்தில் குறிப்பிட்ட சிலருக்கு வன்னியர்களுக்கு எதிரான மனநோய் பீடித்துள்ளது. இந்த மனவியாதி பிடித்தவர்களிடம் பணம், ஊடகம், அதிகாரம் எல்லாமும் இருக்கிறது. அதனால், தொற்றுநோய்ப் போன்று, 'வன்னியரல்லாதோரிடம்' ஒரு பொதுவான 'வன்னியர் எதிர்ப்பு மனநிலையை' பரப்பி வைத்துள்ளனர்.


வன்னியர்கள் குறித்த எல்லாவிதமான கட்டுக்கதைகளுக்கும் அவதூறுகளுக்கும் இந்த மனநோய் தான் காரணம் ஆகும்.

உலகளாவிய எடுத்துக்காட்டு

ஒரு இனத்துக்கு எதிரான பொய்ப்பிரச்சாரம் 'இனவெறியின் ஓர் வடிவம்' ஆகும். அவ்வாறே, யூதர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ANTISEMITISM என்றும், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ISLAMOPHOBIA என்றும் வகைப்படுத்தப்படுகிறது.

அதே போன்று வன்னியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது VANNIYAPHOBIA எனக் கூறலாம்.

  • ANTISEMITISM – “is prejudice, hatred of, or discrimination against Jews”

  • ISLAMOPHOBIA - “a multifaceted mix of discourse, behaviour and structures which express and perpetuate feelings of anxiety, fear, hostility and rejection towards Muslims”

  • VANNIYAPHOBIA - “is prejudice, hatred of, or discrimination against Vanniyars”
வன்னியர்கள் மீதான இத்தகைய வெறுப்புக்கு வன்னியர்களின் செயல்பாடுகள் பெரிதளவில் காரணம் இல்லை. அப்படி ஏதேனும் இருந்தால், அதனைக் கண்டறிந்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆனால், இந்த வெறுப்புக்கு முதன்மையான காரணம் மற்றவர்கள் மனதில் உள்ள வீணான மனநோய் (VANNIYAPHOBIA) என்பதை உணர்வோம். அதனை மற்றவர்களுக்கும் புரியவைக்க முயல்வோம்.

(2012 தருமபுரி நிகழ்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் தேவர் ஜெயந்திக்கு சென்று திரும்பியவர்கள் சுமார் 10 பேர் நடுவழியில் கொலைசெய்யப்பட்டனர். அதுகுறித்து யாரும் பேசவில்லை. ஆனால், மரக்காணம், தருமபுரி நிகழ்வுகளில் இதற்கு நேர் எதிராக எல்லோரும் நடந்தது கொண்டனர் என்பதை கவனிக்கவும்.

எதிர்தரப்பில் ஒரு நபருக்குக் கூட சிறு கீரலும் இல்லாத மரக்காணம், தருமபுரி சம்பவங்களில், வன்னியர்கள் தரப்பில் மட்டுமே 2 பேர் படுகொலை, ஒருவர் தற்கொலை ஆனார்கள். வன்னியர்கள் பாதிக்கப்பட்ட இந்த நிகழ்வுகளில் குற்றம்சாட்டப்பட்டோரும் வன்னியர்கள்தான்)


என்ன செய்ய வேண்டும்?

வன்னியர்களுக்கு எதிரான இனவெறி என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட மனநோய் என்பதை உணர்ந்து - வன்னியர்களுக்கு எதிரான இனவெறிக் கருத்துகளை பரப்புவோரையும், அவர்களது இந்த மனநோய்க் கருத்துகளையும் ஆவணப்படுத்துவதற்கு வன்னியர்கள் முன்வர வேண்டும்.

எடுத்துக்காட்டாக, 'தமிழ்நாடு தனி நாடாக மாறினால் வன்னியர்கள் வெளியேற்றப்படுவார்கள்' என்றார் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி. வன்னியர்களின் அரசியல் அடையாளமாக மருத்துவர் அன்புமணி இராமதாசு இருப்பதால், 'தருமபுரியில் அன்புமணி தோற்கவேண்டும்' என்று எழுதினார் தமிழ் இந்து நாளிதழின் கவிதா முரளீதரன்.

இவ்வாறாக, யாரெல்லாம், எப்படியெல்லாம் வன்னியர்கள் மீது வெறுப்பை உமிழ்கிறார்கள் அன ஆவணப்படுத்தி, அதற்கான காரணங்களை ஆராய ஆர்வமுள்ள வன்னியர்கள் முன்வர வேண்டும்.

இனவெறி எனும் மனநோய் (RACISM), யூதர்களுக்கு எதிரான மனநோய் (ANTISEMITISM), இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநோய் (ISLAMOPHOBIA) எவ்வாறு எதிர்க்கப்படுகிறதோ - அதே போன்று வன்னியர்களுக்கு எதிரான இனவெறி (VANNIYAPHOBIA) மனநோயை கையாள வன்னியர்கள் முன்வர வேண்டும்.

குறிப்பு: எந்த ஒரு தனிப்பட்ட சாதி, இனம், மதம், மொழி, குழுவினருக்கு எதிராகவும் வன்னியர்கள் வெறுப்புணர்வை கைக்கொள்ளக் கூடாது. மனிதர்களின் குணம் அவர்களது பிறப்பிலோ, மரபணுவிலோ, அடையாளத்திலோ இல்லை. அது அவரவர் எண்ணத்திலும் நம்பிக்கையிலும் இருக்கிறது.



தொடர்புடைய சுட்டிகள்:








2 கருத்துகள்:

Maasianna சொன்னது…

yes what we will do?

viyasan சொன்னது…

வன்னியர்கள் தனி இனமா. வன்னியர்கள் என்ற சாதியை எதற்காக இனமென்று குறிப்பிடுகிறீர்கள்?