Pages

வியாழன், ஜூன் 12, 2014

மிக முக்கிய செய்தி: இலங்கை மீதான ஐநா விசாரணைக்குழு தலைவர் நியமனம்!

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனிதஉரிமை அமைப்பில் பணியாற்றி, பின்னர் ஐநாவில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றும் Ms. SANDRA BEIDAS எனும் பெண்ணின் தலைமையில் இலங்கை மீதான ஐநா விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இதனை ஐநா மனித உரிமைகள் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று (12.06.2104) அறிவித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் இதனை அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இலங்கையின் கொடூரக் குற்றங்கள் தொடர்பான விசாரணை தொடங்குகிறது. இந்த விசாரணைக் குழுவில் 12 பேர் இடம் பெறுவார்கள். இவர்களுக்கு துணை செய்ய இரண்டாம் நிலைக் குழுவும் அமைக்கப்படும். அடுத்த 10 மாதங்களில் இந்த விசாரணை முடியும்.

பிரிட்டனைச் சேர்ந்த Ms. SANDRA BEIDAS சூடான் நாட்டின் மீதான விசாரணை ஆணையம், நேபாளத்தின் மீதான ஐநா மனித உரிமைக் கண்காணிப்புக் குழு உள்ளிட்டவற்றிலும் பணியாற்றியவராகும்.

ஐநா விசாரணைக் குழுவை இலங்கை அரசு இலங்கைக்குள் அனுமதிக்காது. இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளிடம் விசாரணை நடத்த இந்திய அரசாவது அனுமதிக்குமா? ஐநா விசாரணைக் குழுவுக்கு இந்திய அரசு விசா வழங்குமா?

தமிழ்நாட்டு தமிழர்களின் தன்மானத்துக்கு வரப்போகும் உண்மையான சவால் இதுதான்.

செய்தி:  UN inquiry team on Sri Lanka war crime named"

கருத்துகள் இல்லை: