Pages

வியாழன், மார்ச் 14, 2013

ஜெனீவா: ஐநாவில் பசுமைத்தாயகம் சாதனை - இலங்கை மீது நேரடியாக சரமாரிக் குற்றச்சாட்டு!

தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை பேரவையின் (UNHRC) கூட்டத்தில் பசுமைத் தாயகம் சார்பில் தமயந்தி ராஜேந்திரா, வழக்கறிஞர் கார்த்திகா தவராஜா, வழக்கறிஞர் தாஷா மனோரஞ்சன் ஆகியோர் "இலங்கையின் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தி பேசினர், இலங்கை மீது சரமாரிக் குற்றச்சாட்டினர்.

அவர்களது பேச்சினை கீழே காண்க:


பசுமைத் தாயகம் - கார்த்திகா தவராஜா

மார்ச் 11 திங்கள் அன்று நடந்த ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் கார்த்திகா தவராஜா கலந்து கொண்டு பேசினார். 

வழக்கறிஞர் கார்த்திகா தவராஜா பேச்சினை YOUTUBE வீடியோ மற்றும் எழுத்து வடிவிலும் அது தொடர்பான பத்திரிகை செய்தியையும் கீழே காணலாம்: (படத்தின் மீது சொடுக்கவும்)
Pasumai Thaayagam at UNHRC Kartiga Thavaraj, 11 March 2013
பேச்சின் எழுத்து வடிவம்: Pasumai Thaayagam at UNHRC - Kartiga Thavaraj, 11 March 2013


பசுமைத் தாயகம் -  தாஷா மனோரஞ்சன்

மார்ச் 12 செவ்வாய் அன்று நடந்த ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் தாஷா மனோரஞ்சன் கலந்து கொண்டு பேசினார்.

வழக்கறிஞர் தாஷா மனோரஞ்சன் பேச்சினை YOUTUBE வீடியோ மற்றும் எழுத்து வடிவிலும் அது தொடர்பான பத்திரிகை செய்தியையும் கீழே காணலாம்:(படத்தின் மீது சொடுக்கவும்)
Pasumai Thaayagam at UNHRC Tasha Manoranjan, 12 March 2013

பேச்சின் எழுத்து வடிவம்: Pasumai Thaayagam at UNHRC - Tasha Manoranjan, 12 March 2013

பத்திரிகை செய்தி: “Sri Lanka 'served as precursor' to Syrian tragedy”


பசுமைத் தாயகம் -  தமயந்தி ராஜேந்திரா 

அதற்கு முன்பாக மார்ச் 04 திங்கள் அன்று நடந்த ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் தமயந்தி ராஜேந்திரா கலந்து கொண்டு பேசினார். 

தமயந்தி ராஜேந்திரா பேச்சினை YOUTUBE வீடியோ மற்றும் எழுத்து வடிவிலும் அது தொடர்பான பத்திரிகை செய்தியையும் கீழே காணலாம்: (படத்தின் மீது சொடுக்கவும்)
Pasumai Thaayagam at UNHRC Dhamayanthi Rajendra, 4 March 2013

பேச்சின் எழுத்து வடிவம்: Pasumai Thaayagam at UNHRC - Dhamayanthi Rajendra, 4 March 2013

பத்திரிகை செய்தி: “UN Human Rights chief reiterates the need to monitor Sri Lanka's progress on accountability” 

ஐநாவில் பசுமைத் தாயகம்

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு ஐக்கிய நாடுகள் அவையால் சிறப்பு ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அமைப்பாகும் (non-governmental organization in special consultative status with UN ECOSOC). இத்தகைய அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகள் மட்டுமே ஐநா அவையின் கூட்டத்தில் பங்கேற்கவும் பேசவும் முடியும்.

இந்தியாவில் இருந்து ஈழத்தமிழர்களுக்காக ஐநா மனித உரிமை பேரவை (UNHRC) கூட்டத்தில் பேசும் ஒரே அமைப்பாக 2009 முதல் பசுமைத் தாயகம் செயலாற்றி வருகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் அழைப்பின் பேரில் தற்போது ஜெனீவா நகரில் நடைபேற்றுவரும் 22 ஆவது ஐநா மனித உரிமை பேரவை கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் ஏழு பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் இலங்கையின் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என மனித உரிமை பேரவையின் உறுப்பினர்களை சந்தித்து வலியுறுத்து வருகின்றனர்.

ஐநா மனித உரிமை பேரவையில் நேரடியாக உரைநிகழ்த்தி அவர்கள் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

2 கருத்துகள்:

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

போற்றத்தக்க முயற்சி! பசுமைத் தாயகத்திற்கு நன்றி!

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

பாராட்டத்தக்க முயற்சி! பசுமைத் தாயகத்துக்கு நன்றி! இந்த உரைகளின் தமிழ் வடிவத்தை வழங்க வேண்டுகிறேன்.