Pages

திங்கள், மார்ச் 14, 2016

காதல் திருமணங்களால் சாதி ஒழியுமா?

காதல் திருமணங்களை நாம் ஆதரிக்கிறோம். ஆனால், கட்டாயக் காதல் என்பது ஏற்புடையது அல்ல. திருமண வயதை அடைந்த ஆண் - பெண் திருமணம் செய்துகொள்வது ஒரு அடிப்படை மனித உரிமை. இதற்கு மதமோ, இனமோ, சாதியோ, தேசமோ எதுவும் தடையாக இருக்கக் கூடாது. அதே நேரத்தில், திருமணத்திற்கு மணமக்களின் முழுமையான, அனைத்தும் அறிந்த நிலையிலான ஒப்புதல் (free and full consent) தேவை. எக்காரணத்திற்காகவும் திருமணம் நிர்பந்திக்கப்படக் கூடாது. 

Men and women of full age, without any limitation due to race, nationality or religion, have the right to marry and to found a family. Marriage shall be entered into only with the free and full consent of the intending spouses. The family is the natural and fundamental group unit of society and is entitled to protection by society and the State

- Article 16 - Universal Declaration of Human Rights

அதாவது, இரண்டு வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த மணமக்களின் திருமணம் தடுக்கப்பட்டால் அது மனித உரிமைக்கு எதிரானது. அதே போன்று, இரண்டு வெவ்வேறு பிரிவினர் இடையே திருமணம் நடக்க வேண்டும் என்று தூண்டுவதும் மனித உரிமைக்கு எதிரானது. 
திருமணத்திற்கான முன் நிபந்தனைகள்

திருமணம் என்பது ஒரு குடும்பத்தை அமைப்பது (the right to marry and to found a family). எனவே, திருமணத்தால் ஏற்படக்கூடிய பொறுப்புகள், அதற்கான தகுதிகள், வருமானம் உள்ளிட்ட முன் தேவைகளை அறிந்துதான் திருமணம் நடக்க வேண்டும். குடும்பத்தை அமைக்கும் நிலையில் இல்லாத அறியாத வயது திருமணங்கள் ஏற்புடையவை அல்லை.

'எந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்' என்கிற கேள்வி எழும் நிலையில், பெண்களுக்கு எதிரான ஒதுக்குதல்களை ஒழிப்பதற்கான ஐநா குழு (UN CEDAW Committee) அதற்கு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.

"திருமணம் செய்துகொள்ளும் ஆணும் பெண்ணும் மிக முக்கியமான பொறுப்புகளை ஏற்கிறார்கள். எனவே, அவர்கள் முழுமையாக பக்குவம் அடையாத நிலையிலும், செயல்திறனை அடையாத நிலையிலும் திருமணங்கள் அனுமதிக்கப்படக் கூடாது.

பெண்கள் உரிய வயதை அடையாது திருமணம் செய்துகொள்ளும் போது குழந்தை பெற்றுக்கொள்ள நேருதல், உடல்நலம் பாதிக்கப்படுதல், கல்வியை தவற விடுதல் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களது பொருளாதார சுதந்திரம் பாதிக்கப்படுகிறது.

உரிய வயதை அடையாமல் நடக்கும் திருமணங்கள் பெண்களை மட்டும் பாதிப்பதில்லை. அதனால் ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது. பெண்களின் திறன் மேம்பாடு தடைபடுகிறது, பெண்களின் தற்சார்பு பாதிக்கப்படுகிறது, வேலை கிடைக்கும் வாய்ப்பு குறைகிறது. இவற்றால், குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன, சமுதாயமும் பாதிப்படைகிறது" - என்கிறது ஐக்கிய நாடுகள் அவை.

(When men and women marry, they assume important responsibilities. Consequently, marriage should not be permitted before they have attained full maturity and capacity to act. According to the World Health Organization, when minors, particularly girls, marry and have children, their health can be adversely affected and their education is impeded. As a result their economic autonomy is restricted.

This not only affects women personally but also limits the development of their skills and independence and reduces access to employment, thereby detrimentally affecting their families and communities.

- CEDAW General Recommendations 21 on marriage and family)

ஐநா பெண்கள் உரிமை உடன்படிக்கை The Convention on the Elimination of All Forms of Discrimination against Women (CEDAW) பிரிவு 16-ன் கீழ், திருமணத்திற்கு பெண்களின் முழுமையான, சுதந்திரமான, விபரமறிந்து இசைவு தெரிவித்தல் கட்டாயம் ஆகும். அதாவது, திருமணத்திற்கு பின்னாலான பொறுப்புகள் குறித்த முழுமையான புரிதலும், யாரை திருமணம் செய்கிறோம், அவரது குணநலன்கள், பின்னணிகள் குறித்து புரிந்துகொள்ளும் திறனும் அவசியம் ஆகும்.

எனவே, முழுமையான புரிதலுக்கு ஏற்ற வயதை அடையாத பெண்களின் காதலோ, திருமணமோ சமூகத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

முன்கூட்டி மற்றும் கட்டாயப்படுத்தி திருமணம் (early and forced marriage)

திருமணம் குறித்த புரிதல் இல்லாத நிலையில் பெண்களை மனம் மயக்கி திருமணத்திற்கு நிர்பந்திப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். இதனை முன்கூட்டியே மற்றும் கட்டாயப்படுத்தும் திருமணம் எனக் கூறுகின்றனர் பன்னாட்டு மனித உரிமை வல்லுநர்கள்.

In fact, the term ‘early marriage’ does not refer solely to age. It refers to an individual’s level of physical, emotional, sexual and psychosocial development that that would make a person unready to consent to marriage. Other factors that should be taken into consideration are the individual’s educational and other aspirations, and lack of information regarding the person’s life options. This is connected to the concept of forced marriage and the importance of free and full consent. 

‘early and forced marriage’ encompasses 'a situation in which a 23-year-old woman is physically or psychologically compelled into marriage', this situation embody “discriminatory and harmful acts and practices that are violent towards women.” 

Early and forced marriage impacts various human rights of young women and girls, including their sexual and reproductive rights, as well as their rights to health, equality and non-discrimination, education, live free from all forms of violence and participate in public and political life. 

(Women for Women’s Human Rights - WWHR) 

பெண் கல்வி, வேலை, உடல்நலம் - காதலை விட மேலானது

ஐநா குழந்தைகள் உடன்படிக்கை மற்றும் ஐநா பெண்கள் உடன்படிக்கை ஆகியவற்றின் படி, கல்வி மிக முக்கியமான உரிமை ஆகும். பதின்வயதில் திருமணம் நடந்தால், அதனால் பெண்களின் கல்வி வாய்ப்புகளும் திறன்மேம்பாடும் கடுமையாக பாதிப்படைகிறது

(Many studies have shown that early marriage is universally associated with low levels of schooling and thus in violation of girls’ right to education as guaranteed by the CRC and CEDAW. A lack of education further denies girls’ their right to personal development as guaranteed in the CRC, which is crucial for them to prepare for adulthood and effectively contribute to the future wellbeing of their families and society - UNICEF 2008)

அவ்வாறே, வேலையும் பெண்களின் உரிமையாகக் கருதப்படுகிறது. முழுமையாக கல்வியை முடித்தல், வேலையை அடையும் அளவிற்கான திறன் மேம்பாடு - ஆகியவற்றுக்கான வயதை அடையும் முன்பாக திருமணம் நடைபெற அனுமதிக்கக் கூடாது.

சிறு வயது திருமணங்களினால், பெண்களின் உடல் நலன் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, 21 வயதுக்கு முன்பாக குழந்தை பெறுவது பெண்களையும் பாதிக்கிறது, பிறக்கும் குழந்தைகளையும் பாதிக்கிறது.

எனவே, கல்வி, வேலை, உடல்நலம் ஆகியவை காதலை விட மேலானது என்பதை உணர்ந்து - திருமண வயதை 21 வயதாக நிருணயிப்பதே சரியானதாகும்.

காதல் - சாதியை ஒழிக்கும் என்பது பித்தலாட்டம்.

காதல் திருமணங்கள் அகமண முறையை ஒழிக்கும். இதனால், சாதி ஒழியும் என்று ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இது முட்டாள்தனமான, ஆபத்தான பிரச்சாரம் ஆகும். ஏனெனில், காதல் திருமணங்களால் சாதி ஒழிவது இல்லை.

சாதி மறுப்புத் திருமணங்கள் என்பவை,  ஒடுக்கப்பட்ட சாதிகளில் பொருளாதார நிலையில் முன்னேறிய தனி நபர்களை திசை திருப்புவதற்காக - கம்யூனிச பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சாரம் என்கிறார் தலித் வாய்ஸ் பத்திரிகை ஆசிரியரும், மூத்த தலித் சிந்தனையாளருமான வி.டி. ராஜ்சேகர். 
ஒடுக்கப்பட்ட சாதி ஆண்கள் - அவர்களுக்கு மேலாக கருதப்படும் சாதி பெண்களை மணமுடிக்கும் வகையிலேயே இந்த பிரச்சாரம் இருப்பதையும், இதற்கு மாறாக, ஒடுக்கப்பட்ட சாதி பெண்கள் - அவர்களுக்கு மேலாக கருதப்படும் சாதி ஆண்களை மணமுடிக்கும் வகையில் இந்த பிரச்சாரம் இல்லாததையும் - வி.டி. ராஜ்சேகர் சுட்டிக்காட்டுகிறார். எனவே, சாதி கலப்புத் திருமணம் என்கிற பிரச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறார் அவர். (Caste - a nation with in the nation, VT Rajshekar, Editor, Dalit Voice)

காதல் திருமணங்களால் சாதி ஒழிவது இல்லை. இதற்கு மாறாக, இளம் வயது திருமணங்களை இந்தப் பிரச்சாரம் ஊக்குவிப்பதால் - பெண் கல்வி பாதிக்கப்படுதல், பொருளாதார தற்சார்பு பாதிக்கப்படுதல், இளம்வயது திருமணத்தால், உடல்நலம் கெடுதல் என ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கும் நிலையையே இந்த பிரச்சாரம் ஏற்படுத்துகிறது.

21 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்ய 'சாதி ஒழிப்பு காதல் பிரச்சாரம்' தூண்டுகிறது. இது பெண்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டை தடுக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

பதின்வயது எனப்படுகிற 20 வயதுக்கு கீழான காலம் மனித வாழ்வில் மிக முக்கியமான காலம் ஆகும். ஐநா குழந்தைகள் அமைப்பு யூனிசெப் இதனை 'வாய்ப்புகளின் காலம்' என அழைக்கிறது (Adolescence: An Age of Opportunity). இந்த வயதுதான் கல்வி, தொழில்திறமைகள் உள்ளிட்ட எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான அடித்தளத்தை அமைக்கும் வயதாகும்.
காதல் திருமணங்கள் குறித்த குழப்பமான, திசை திருப்பும் பிரச்சாரங்கள் தடுக்கப்பட வேண்டும். கல்வி, வேலை, உடல்நலம் ஆகிய பெண்களின் உரிமைகளே முதன்மையானவை. இவற்றுக்கு பின்னரே திருமணம் முன்னிறுத்தப்பட வேண்டும்.

இந்த நிலையை அடைய ஆணுக்கு இணையாக பெண்களின் திருமண வயதையும் 21 வயது என மாற்ற வேண்டும். அல்லது, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உள்ளது போன்று, 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்ய பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வேண்டும்.

ஐநா அவை 2015 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டுள்ள 2015 - 2030 நீடித்திருக்கும் வளர்ச்சிக்கான லட்சியங்களில் (UN Sustainable development goals) 'குறைந்த வயது திருமணங்கள் தடுக்கப்பட வேண்டும்' என்பதும் ஒன்றாகும். அந்த லட்சியம் தமிழ்நாட்டில் உறுதி செய்யப்பட பதின்வயது திருமணங்கள் தடுக்கப்பட வேண்டும்.

பொழுதுபோக்கு, ஆடம்பரம், சாதி ஒழிப்பு போர்வையில் முன்வைக்கப்படும் - அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான, ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்கால நலனுக்கு தீங்கான, கட்டற்ற காதல் பிரச்சாரம் முறியடிக்கப்பட வேண்டும்.

2 கருத்துகள்:

மானுடன் சொன்னது…

காதல் திருமணங்களால் சாதி ஒழியுமா என்றால் அதனால் மட்டுமே ஒழிந்து விடாது என்பது தான்.சரி ”இட ஒதுக்கீட்டால் சாதி ஒழிந்து விடுமா?” இப்படி கேட்டால் உங்களால் என்ன பதில் சொல்ல முடியும் என்று முயற்சித்து பாருங்கள்.கட்டாய திருமணம்,மனமுதிர்ச்சி பற்றிய உங்களது கவலையெல்லாம் எனக்கும் உண்டு.ஆனால் உங்களுக்கு இந்த கவலையெல்லாம் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்கிற அதிலும் தலித் இளைஞர்களை மணம் செய்து கொள்கிற பிற சாதி பெண்களின் மீது மட்டுமே இருப்பதென்பது உங்களது ஆதிக்க சாதியின் நரித்தானமான வன்மம் மட்டுமே.அன்புமணியை முதல்வர் வேட்பாளராக்கி அதற்கு பொருத்தமான ’ஜெண்டில்மேன்’ பிம்பத்தை கட்டியமைக்க விரும்புகின்ற உங்களுக்கு இது பொருத்தமாக இல்லை. இன்னும் சற்று மேலான காரணங்களை தேடுங்கள்.முகமூடி கழண்டு விழுகிறது சரி செய்து கொள்ளுங்கள்

Unknown சொன்னது…

அண்டத்தில் உள்ள கோல்கள் அனைத்தும் அதனதன் பாதையில் இயங்குவதால்தான் பூமிபந்து இன்னும் சுற்றிக்கொண்டுள்ளது கோல்கள் பாதைமாறினால் இவ்வுலகம் எப்போதோ அழிந்துபோயிருக்கும்.இந்த சமுதாயமும் அப்படித்தான் அவரவர் பாதையில் அவரவர் சென்றால் பிரச்சனை இல்லை பாதைமாறினால்? சிந்தியுங்கள் இந்தசமுதாயத்தை சீரழிப்பது யாரென்று.