Pages

செவ்வாய், மார்ச் 22, 2016

விகடன் கும்பலின் ஊடக விபச்சாரம்: அன்று விடுதலைப் புலிகள் - இன்று பாட்டாளி மக்கள் கட்சி!

காசுக்காக வேசித்தனத்தில் ஈடுபடும் இழிவானோர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது விகடன் கும்பல். முன்பு சிங்கள இனப் படுகொலையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செய்திகள் வெளியிட்டது போன்று, இப்போது திமுகவினரிடம் பணம் பெற்றுக்கொண்டு பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன விகடன் குழும பத்திரிகைகள். இந்த Presstitute விகடன் கும்பல் தமிழக ஊடகத் துறையின் சாபக்கேடு. பத்திரிகை தர்மத்தின் அவமானச் சின்னம்.

ஈழப்போரை இழிவு படுத்திய விகடன் கும்பல்

ஈழ இனப்படுகொலைக் காலத்தில், காசுக்காக இவர்கள் செய்த கொடுமைகள் ஒரு மாபெரும் துரோக வரலாறு ஆகும். 2008 - 2012 வரையிலான காலத்தில் இலங்கை அரசின் தூதர்களுடன் கொஞ்சிக் குலாவி, ஈழத்தமிழர்களுக்கு எதிரான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தது விகடன் கும்பல்.
இனப்படுகொலை செய்திக்கு கவர்ச்சிப்படம்: விகடனின் வன்மம்
இலங்கை அரசு தனது பொய்ப்பிரச்சாரத்திற்காக உலகெங்கும் பெரும்தொகைப் பணத்தைச் செலவழித்தது. அதில் ஒரு பெரும் தொகை விகடன் கும்பலுக்கு கொடுக்கப்பட்டது. இலங்கைத் தூதர் அம்சா சென்னையில் இருக்கும்போது விகடன் கும்பலுடன் உறவைப் பேணினார். விகடன் கும்பலைச் சேர்ந்த ஒரு நிர்வாக ஆசிரியருக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடுகளை இலங்கைத் தூதர் வாங்கிக்கொடுத்தார் என்பது ஊடகவியலாளர்கள் அறிந்த வரலாறு.

போர் முடிந்த பின்னரும் 2012 நவம்பர் மாதத்தில், புலிகளை இழிவுபடுத்தியும், பெண் போராளிகளை மிக மோசமாக காட்சிப் படுத்தியும் "நேற்று நான் விடுதலைப் போராளி. இன்று நான் பாலியல் தொழிலாளி. ஒரு பெண் போராளியின் வாக்குமூலம்" எனும் ஆறு பக்க நச்சுக்கட்டுரையை வெளியிட்டது விகடன் கும்பல். இக்கட்டுரையில் விடுதலைப் புலிகள் அமைப்பை குற்றம் சாட்டியது விகடன்.
தங்கள் இனத்துக்காக உயிரைத் துச்சமெனத் துறக்கத் துணிந்த பெண் போராளிகளைப் பாலியல் தொழில் செய்கிறார்கள் என்று எழுதுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

அன்று ராஜபக்சே பணம் - இன்று திமுக பணம்

ஈழப்போரின் காலத்தில் ராஜபக்சே பணத்துக்காக வேசித்தனம் செய்த விகடன் கும்பல், இப்போது திமுக பணத்துக்காக, பாமகவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. 

சூரியக் கட்சியின் மருமகனுக்கு ஆலோசகராக செயல்படுவதற்காக கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளார் விகடன் கும்பலின் ஆசிரியர் ஒருவர் என்று சொல்லப்படுகிறது. மேலும், விகடன் குழுமத்தின் பங்குகளை மருமகன் சார்பிலான ஒருவர் பலகோடி கொடுத்து வாங்கியிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். இந்த பேரங்கள் ஹாங்காங்க் நாட்டில் வைத்து முடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
விகடன் கும்பலிடம் கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகள் இவைதான்: 

1. அதிமுகவுக்கு எதிராக அரசியல் ரீதியிலான கருத்துகளை பரப்ப வேண்டும்.

2. பா.ம.க'வை தொடர்ந்து இழிவுபடுத்தும் விதமாக கருத்துகளை பரப்ப வேண்டும்.

3. திமுகவினை உயர்த்தி புகழ் பாட வேண்டும்.

4. தேமுதிக போன்ற கட்சிகள் திமுகவுக்கு ஆதரவாக போகவில்லை என்றால் அவற்றை இழிவுபடுத்த வேண்டும்.

- இவைதான் விகடன் கும்பலுக்கு திமுக தரப்பிலிருந்து அளிக்கப்பட்டிருக்கும் வேலைகள் என்று சொல்கிறார்கள்.  ஜூனியர் விகடன் மற்றும் ஆனந்த விகடன் வெளியிடும் செய்திகளை படிக்கும் எவரும், இதைத்தான் இந்த கும்பல் செய்கிறது என்பதை மிக எளிதாக கண்டறிய முடியும்.

விகடன் கும்பலின் விபச்சாரத் தொழில்

பணத்துக்காக உடலை விற்பது விபச்சாரம். இது ஒரு கேவலமான தொழில் என்று கருதப்படுகிறது. இதைவிட மிகமோசமான, கேவலமானத் தொழில் - பணத்துக்காக பத்திரிகை தர்மத்தை விற்பதாகும். இதனை முன்னாள் இராணுவ தளபதி விகே சிங் அவர்களும், உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்களும் Presstitute என்று குறிப்பிட்டுள்ளனர். (Presstitute = blend of press and prostitute = misleadingly tailoring news to fit a particular partisan, financial or business agenda)
விகடன் கும்பலின் ஒரு பத்திரிகை - டைம் பாஸ்
பாமகவை இழிவுபடுத்த வேண்டும் என்கிற திமுக எஜமானரின் உத்தரவுப்படி, விதம் விதமான கழிசடை வேலைகளை செய்துவருகிறது விகடன் கும்பல். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டு இளைய தலைமுறையினருக்கு 'அன்புமணி' என்றால் யாரென்றே தெரியவில்லை - என்கிற ஒரு 'செட்-அப்' வீடியோவை வெளியிட்டனர். அதேபோன்று, பாமகவின் முதலமைச்சர் வேட்பாளராக ஜி.கே. மணியை அறிவித்தால் இளைஞர் வாக்களிப்பார்கள் என்று மற்றொரு 'செட்-அப்' வீடியோவை வெளியிட்டனர். இப்படி தினமும் ஒரு வேசித்தன வேலையை செய்கிறது விகடன் கும்பல்.

ஊடக விபச்சாரம் எனும் பேராபத்து

ஜனநாயகத்தின் அடிப்படை 'அதிகாரப்பகிர்வு' ஆகும் (Separation of powers). சட்டம் இயற்ற சட்டமன்றம் (Legislature), அரசு நிருவாகத்திற்கு நிருவாகத்துறை (Executive), சட்டத்தை நிலைநாட்ட நீதித்துறை (Judiciary) ஆகிய மூன்றும் ஜனநாயகத்தின் மூன்று தூண்கள் ஆகும். இவற்றுக்கு இணையாக நான்காவது தூண் (Fourth Estate) என்று அழைக்கப்படுவது செய்தி ஊடகம் (News Media) ஆகும். இந்த நான்கு தூண்களும் ஒன்றை சார்ந்து மற்றொன்று இயங்கக் கூடாது.

ஜனநாயகத்தின் முதல் மூன்று தூண்களுடன் 'நேரடியாகவோ - மறைமுகமாகவோ' ஊடகங்கள் பயன்சார்ந்த தொடர்பில் இருக்கக் கூடாது. குறிப்பாக - அரசியல் கட்சிகளுடன் ஊடகங்களுக்கு பயன்சார்ந்த தொடர்பு இருப்பது அடிப்படை ஊடக நெறிகளுக்கு எதிரானதாகும்.

ஆனால், தமிழ்நாட்டில் பல ஊடகங்களை அரசியல் கட்சிகளே நடத்துகின்றன. இது ஒரு மிகப்பெரிய ஜனநாயகக் கேடு. எனினும், அரசியல் கட்சிகள் நடத்தும் ஊடகங்கள் குறித்து மக்கள் அறிந்திருப்பதால், அதன் செய்திப் பின்புலம் மக்கள் அறிந்ததாக இருக்கிறது. ஜெயா தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சியில் எத்தகைய செய்திகள் வரும் என்று மக்கள் அறிந்தே இருப்பதால் - அவற்றின் நம்பகத்தன்மை ஒரு சிக்கலாக இல்லை.

ஆனால், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் பத்திரிகைகள் நடுநிலை வேடம் போடுகின்றனர். பெரும்பாலான மக்கள் இவற்றை பக்க சார்பற்ற ஊடகம் என்று நம்புகின்றனர். மக்களின் இந்த நம்பிக்கையை பல கோடிகளுக்கு திமுகவிடம் விற்றுள்ளது விகடன் கும்பல். முரசொலியில் வர வேண்டிய ஒரு கட்டுரை ஜூனியர் விகடனில் வெளியாகும் போது - அது ஒரு மாபெரும் நம்பிக்கை மோசடியாகிறது.

விகடன்: முரசொலியின் இன்னொரு பதிப்பு

ஊடக விபச்சாரம் செய்யும் விகடன் கும்பல் திருந்த வாய்ப்பே இல்லை. ஆனால், விகடன் கும்பலும் முரசொலியின் இன்னொரு பதிப்புதான் என்பதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது ஊடக தர்மத்தை நம்புவோரின் கடமை ஆகும். 

தமிழ்நாட்டில் ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் எனில் விகடன் கும்பலின் வேசித்தனத்தை அம்பலப்படுத்தியாக வேண்டும்.


தொடர்புடைய இடுகைகள்:

1. விகடன் குழுமத்தின் வன்மம்: தனது பழியை பிறர் மீது சுமத்தும் அநியாயம்!

2. விகடன் பத்திரிகை மன்னிப்பு கேட்க வேண்டும்: பணத்துக்காக செய்தி வெளியிடுவதை நிறுத்து! 

3. மாணவிகள் தற்கொலை: SVS கல்லூரிக்கு விளம்பரம் செய்த ஜூனியர் விகடனுக்கு என்ன தண்டனை? 

4. 'விலைபோன' தி இந்து + விகடன்: விழுப்புரம் SVS கல்லூரி விவகாரத்தில் உண்மையை மறைப்பது ஏன்? 

1 கருத்து:

Unknown சொன்னது…


விபச்சார விகடனுக்கு மிகச்சரியான செருப்படி