Pages

செவ்வாய், ஆகஸ்ட் 27, 2013

ஈழ இனப்படுகொலைக்கு நீதி: சென்னையில் நடந்த முன்முயற்சி கூட்டம்! ஒரு நம்பிக்கை அளிக்கும் தொடக்கம்

இலங்கை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஒரு சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு ஐநா உத்தரவிட வேண்டும். அத்தகைய ஒரு பன்னாட்டு விசாரணைக்கு இந்திய அரசு இனிமேலும் முட்டுக்கட்டைப் போடாத வகையில் தமிழ்நாடு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில் ஒர் கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடந்தது.

"இலங்கை இனப்படுகொலை - போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை: அடுத்தது என்ன? கலந்துரையாடல்" எனும் இக்கூட்டத்தில் பங்கேற்றோர்:
எம்.ஜி.தேவசகாயம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி,
டாக்டர் செந்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,
டாக்டர் எழிலன் நாகநாதன்,
அருட்தந்தை ஜெகத் கஸ்பர் ராஜ்,
பேராசிரியர் டி.சுவாமிநாதன், ஐ.ஐ.டி சென்னை,
இர. அருள், பசுமைத் தாயகம்,
பாபு ஜெயக்குமார், பத்திரிகையாளர்,
சாம் ராஜப்பா, பத்திரிகையாளர்.,
கா. அய்யநாதன், நாம் தமிழர்,
வழக்கறிஞர் க. பாலு, பசுமைத் தாயகம்,
புகழேந்தி தங்கராஜ், திரைப்பட இயக்குநர்,
ஆர். மோகன், பத்திரிகையாளர்,
கே. ராஜாஸ்டாலின், உலகத்தமிழர் பதுகாப்பு இயக்கம்,
வி. பிரபாகரன், GTO (மாணவர் அமைப்பு),
வி. கனகராஜ், GTO (மாணவர் அமைப்பு),
கே. பெத்தனவேல், ஐ.ஐ.டி சென்னை (மாணவர் அமைப்பு),
எச். தினேஷ், (மாணவர் அமைப்பு)
கே. சதீஷ், (மாணவர் அமைப்பு)
அருடதந்தை அந்தோணிசாமி, வழக்கறிஞர்,
எம். நாகராஜன்,
அருண் 

- ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னணி:

அமெரிக்காவின் முன்முயற்சியால் 2013 மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22 ஆம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானத்தில் "2013 செப்டம்பர் மாதம் நடக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 24 ஆம் கூட்டத்தில் வாய்வழியாக ஒரு தகவல் அறிக்கையையும், அடுத்த ஆண்டு 2014 மார்ச் மாதவாக்கில் நடக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 25 ஆம் கூட்டத்தில் முழுமையான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை ஆகஸ்ட் 25 முதல் சுமார் ஒரு வாரகாலம் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.  ஐநா மனித உரிமைகள் பேரவையின் 24 ஆம் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில், "ஐநா மனித உரிமைகள் பேரவையின் 24 ஆம் கூட்டத்தில் வாய்வழியாக ஒரு தகவல் அறிக்கையை மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை அளிப்பார்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த 2014 ஆம் ஆண்டிலாவது ஐநா மனித உரிமைகள் அவையின் மூலமாக 'இலங்கை மீது பன்னாட்டு விசாரண நடத்தப்பட வேண்டும், அப்போது இந்தியா அதற்கு தடைப்போடக் கூடாது' என்கிற நோக்கில் தமிழ்நாட்டின் அமைப்புகள் முன்கூட்டியே வியூகம் அமைத்து செயல்பட வேண்டும் என்பது குறித்து இக்கூட்டத்தில் பேசப்பட்டது.

தொடர்புடைய சுட்டிகள்:

1. வரலாறு முக்கியம் அமைச்சரே! கலைஞரின் தந்திரம்: ஏற்கனவே ஐநா நிகழ்ச்சி நிரலில் உள்ளதை புதிய கோரிக்கையாக வைக்கும் விநோதம்!

2. ஜெனீவா: ஐநாவில் பசுமைத்தாயகம் சாதனை - இலங்கை மீது நேரடியாக சரமாரிக் குற்றச்சாட்டு!

3. ஜெனீவா ஐநா கூட்டத்தில் பசுமைத் தாயகம் பேச்சு: இலங்கை மீது சர்வதேச விசாரணை ஆணையம் - நேரடியாக வலியுறுத்தல்.

4. இலங்கை - போர்க்குற்ற விசாரணை: ஐ.நாவில் பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!

5. இலங்கை இனப்படுகொலை, போர்க்குற்றம்: ஐநாவில் தொடரும் நீதிக்கான போராட்டம்.

கருத்துகள் இல்லை: