Pages

சனி, அக்டோபர் 06, 2012

ஐநாவில் ராஜபட்சவை சுற்றிவளைக்கும் தமிழர்கள்: கனடா பத்திரிகை பாராட்டு! இலங்கை பத்திரிகைகள் கலக்கம்!

ராஜபட்ச பன்னாட்டு சமூகத்தால் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதற்கான முன்முயற்சிகள் முழுவேகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அண்மையில் அமெரிக்க நாட்டின் 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் "இலங்கை குறித்த ஐநா மனிதஉரிமைக் குழுவின் தீர்மானத்தை செயல்படுத்த அமெரிக்க அரசு தீவிரம் காட்ட வேண்டும்" என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு கூட்டாக கடிதம் எழுதினார்கள். (U.S. Lawmakers' Letter-Writing Campaign to Secretary Clinton Calling for Concerted Action on Sri Lanka)
இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த பன்னாட்டு விசாரணைக்கு வழிசெய்ய வேண்டும் என இலங்கை மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் இயக்கங்கள் பிரிட்டன் பாராளுமன்றத்தில் நவம்பர் மாதம் முறையிட உள்ளன.

நவம்பர் 1 ஆம் நாள், இலங்கையின் மனிதஉரிமை நிலைக் குறித்த மதிப்பீட்டு விசாரணை ஜெனீவா ஐநா மனிதஉரிமைக் குழுவில் நடக்க இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், இலங்கை குறித்த ஐநா மனிதஉரிமைக் குழுவின் தீர்மானம் செயல்படுத்தப்பட்டதா? எனபது குறித்து மிகமுக்கியமான அறிக்கையும் அதன் மீதான விவாதமும் அடுத்த ஆண்டு 2013 மார்ச் மாதம் ஐநா மனிதஉரிமைக் குழுவில் நடக்கவுள்ளது.

இலங்கை பத்திரிகைகள் கலக்கம்

ஐநா மனிதஉரிமைக் குழுவினை மையமாக வைத்து, இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கப்படும் நிலையில், அதனை எதிர்க்கொள்ள இலங்கை பத்திரிகைகள் வினோதமான முயற்சியை மேற்கொண்டுள்ளன. 
அதாவது, "விடுதலைப் புலிகள் ஜெனீவாவில் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்" என்ற தலைப்பில் செய்தி வெளியிடுகின்றன சில சிங்கள ஊடகங்கள்! (புலிகள் ஜெனீவாவில் தாக்குதல் நடத்த திட்டம்: சிங்கள ஊடகம் சொல்கிறது!)

கனடா பத்திரிகை பாராட்டு

கனடாவிலிருந்து வெளிவரும் தமிழர்களின் ஆங்கில பத்திரிகை Monsoon Journal ஜெனீவா மனிதஉரிமை அவையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை பாராட்டி விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டின் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பின் உதவியுடன் உலகத்தமிழர்கள் ஜெனீவா மனிதஉரிமை அவையில் செயல்படுவதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜெனீவா மனிதஉரிமை அவையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த Monsoon Journal செய்தியை கீழே காண்க:


தொடர்புடைய சுட்டிகள்:

1. இலங்கை அரசின் இனவெறி - ஐநா சபையில் எதிர்ப்பு!

2. இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தொடரும் போராட்டம் - பசுமைத் தாயகத்தின் நீதிக்கான பயணம்!

கருத்துகள் இல்லை: