Pages

வியாழன், அக்டோபர் 27, 2016

தமிழக அரசின் சட்டத்துக்கு நீதிமன்றம் தடை: தமிழக கட்சிகளின் கள்ள மவுனம் ஏன்?

"யார் வேண்டுமானாலும் சட்டக் கல்லூரி தொடங்கலாம். ஆனால், வன்னியர் சங்கம் மட்டும் தொடங்கக் கூடாது" - என்கிற கொடூரமான இனவெறியுடன் எட்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக தடை விதித்தன திமுக, அதிமுக கட்சிகள். இதற்காக, சட்டமன்றத்தில் தனியாக ஒரு சட்டமே இயற்றி, ஆளுநரின் ஒப்புதலையும் பெற்று சட்டமாக்கின திராவிடக் கட்சிகள்.

ஒரு சமுதாயத்தை ஒதுக்க வேண்டும், ஒழிக்க வேண்டும், முன்னேற விடவேகூடாது என்பதற்காக அரசாங்கம் தனியாக சட்டம் இயற்றுவது, உலகத்திலேயே தமிழ்நாட்டில்தான் நடந்துள்ளது.

சில சாதிகளை குற்றப்பரம்பரையினர் என்று குற்றம் சாட்டி - தனியாக சட்டம் கொண்டுவந்த ஆங்கிலேய காலனியாதிக்க அரசாங்கத்துக்கும், ஒரு சாதி முன்னேறக் கூடாது என்பதற்காகவே சட்டம் கொண்டுவந்த திராவிடக் கட்சி அரசாங்கத்துக்கும் - அடிப்படை வேறுபாடு எதுவும் இல்லை!

வன்னியர் அறக்கட்டளை கல்லூரிக்கு தடைவிதிக்க வேண்டும் என்பதற்காகவே பிரத்தியோகமாகக் கொண்டுவரப்பட்ட தமிழக அரசின் 'தனியார் சட்டக்கல்லூரி தடைச் சட்டம் செல்லாது' என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் எட்டாண்டு சட்டப் போராட்டத்தின் விளைவாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

அரசின் சட்டத்தை நீதிமன்றம் தடை செய்வது என்பது மிக முக்கியமான நிகழ்வு. ஆனால், தமிழ்நாடு அரசுக்கு எதிரான இந்த மாபெரும் தீர்ப்பு குறித்து, தமிழகத்தின் கட்சிகள் அனைத்தும் மவுனம் காக்கின்றன! பாட்டாளி மக்கள் கட்சி தவிர, வேறு எந்தக் கட்சியும் இது குறித்து எந்தக் கருத்தும் கூறவில்லை!

ஏன் இந்த கள்ள மவுனம்?

தமிழ்நாட்டில் எது நடந்தாலும் துள்ளிக்குதிக்கும் கட்சிகள், இப்போது எதுவும் சொல்லாமல் இருப்பது ஏன்? 

தமிழக அரசின் சட்டத்தையே நீதிமன்றம் தடை செய்துள்ள நிலையில், அரசாங்கத்தை எதிர்க்கும் நிலையில் உள்ள கட்சிகள் கூட வாய்மூடி மவுனம் காப்பது ஏன்?

இதற்கான பதிலில் தான் - தமிழ்நாட்டில் புரையோடிப் போயிருக்கும் சாதிவெறியும், இனவெறியும் ஒளிந்திருக்கிறது!

ஊடக செய்திகள்:

The Hindu: High Court quashes Act prohibiting private law colleges

HC imposes Rs. 20,000 costs on TN govt.

Verdict a milestone: PMK

Times of India: Can't ban new private law colleges, says HC

DECCAN CHRONICLE: Tamil Nadu can’t stop private law colleges: Madras High Court

New Indian Express: Act barring private colleges from opening law schools struck down in Tamil Nadu

Business Standard: TN act banning new private law colleges quashed

அம்பேத்கர் பல்கலைக்கழகத்துக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்: தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க விதிக்கப்பட்ட தடை நீங்கியது - உயர் நீதிமன்றம் உத்தரவு

தனியார் சட்ட கல்லூரிகள் தொடங்க உயர் நீதிமன்றம் அனுமதி: தமிழக அரசின் தடை சட்டம் ரத்து

தனியார் சட்டக்கல்லூரி அனுமதி மறுப்பு சட்டத்தை ரத்து செய்து சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

தனியார் சட்டக் கல்லூரி தொடங்க அனுமதியில்லை என்ற சட்டம் ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சட்டக்கல்லூரிக்கு அனுமதி: நீண்ட சட்ட போராட்டத்தில் சமூகநீதிக்கு வெற்றி! ராமதாஸ்

தனியார் சட்டக் கல்லூரி அமைக்க தடை விதிக்கும் தமிழக அரசின் புதிய சட்டம் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க விதிக்கப்பட்ட தடை ரத்து : உயர்நீதிமன்றம் உத்தரவு

கருத்துகள் இல்லை: