Pages

சனி, செப்டம்பர் 07, 2013

தர்மபுரி தலித்தும் மரக்காணம் வன்னியரும்: படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோவென்று போவான்!

சம்பவம் 1: தலித் தற்கொலை

தர்மபுரியில் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞரின் மரணம் நேர்ந்தது. அது வன்னியர்கள் செய்த படுகொலை என பத்திரிகைகளும், நடுநிலையாளர்கள் என்று கூறிக்கொள்வோரும் பெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அந்த செய்தி நாடே அறியும் வகையில் விளம்பரம் ஆனது. (ஆனால், 'அந்த மரணம் ஒரு தற்கொலை. அதற்கு யாரும் காரணமல்ல' என்றும் காவல்துறை நிரூபித்தபோது, அது பெரிதாக வெளிவரவில்லை)

ஒருவேளை, அது கொலைதான் என்று கூறி இப்போது வன்னியர்கள் கைது செய்யப்பட்டிருந்தால் இன்று தமிழ்நாடே அல்லோல கல்லோலமாக ஆகியிருக்கும்.

சம்பவம் 2: வன்னியர் படுகொலை.

மரக்காணத்தில் இரண்டு வன்னிய நபர்களின் மரணம் நேர்ந்தது. அது கொலைதான் என்று சொல்லி வன்னியர்கள் நடத்திய போராட்டத்தால் மருத்துவர் அய்யா சிறையில் அடைக்கப்பட்டார். 125 வன்னியர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மரக்காணத்தில் வன்னியர் செல்வராஜ் என்பவர் கொலைதான் செய்யப்பட்டார் என்பதை உறுதி செய்து, அதற்கு காரணமான 6 பேர், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர் (இங்கே காண்க: 6 held for killing PMK man during Marakkanam clash). அவர்களின் பின்னணி விவரங்கள் வெளிப்பட்டால், மரக்காணம் கலவரத்தை நடத்திய கட்சி எது என்பது தெரியவரும்.

ஆனால், இந்த சம்பவம் குறித்து தமிழக ஊடகங்கள் பெரிதாக எழுதவில்லை (சில ஆங்கில நாளேடுகள் செய்தியாக வெளியிட்டுள்ளன), நடுநிலைவியாதிகளோ கண்டுகொள்ளவே இல்லை.
மரக்காணத்தில் கொலை செய்யப்பட்ட செல்வராஜ் வன்னியர் அவர்களின் குழந்தை!
மரக்காணத்தில் வன்னியர்கள்தான் கலவரத்தில் ஈடுபட்டனர் என எட்டுக் காலத்தில் செய்தி வெளியிட்டவர்கள், தொலைக்காட்சியில் எட்டுக்கட்டையில் இரவுபகலாகக் கச்சேரி நடத்தியவர்கள் இப்போது எங்கே ஓடி ஒளிந்துள்ளனர்?

தாழ்த்தப்பட்டவர் ஒருவர் வன்னியர்களால் சிறு பாதிப்புக்கு ஆளானால்கூட அது உங்களுக்கு முதல்பக்க தலைப்புச் செய்தி. ஆனால், அப்பாவி வன்னியர் ஒருவர் தாழ்த்தப்பட்டவர்களால் வெட்டிக்கொல்லப்பட்டால் அதற்கு செய்தியில் இடம் இல்லையா?

இதுதான் உங்கள் ஊடகத் தர்மமா? இதுதான் நடுநிலையின் நியாயமா? 

""படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோவென்று போவான்!"" - மகாகவி பாரதி
தொடர்புடைய சுட்டிகள்:

இளவரசன் மரணம் கொலை அல்ல என்கிறது பொலிஸ்: மன்னிப்பு கேட்குமா சாதிவெறிக் கூட்டம்?

மரக்காணம் படுகொலை: இந்தியா டுடேவுக்கும் கவின்மலருக்கும் கோடான கோடி நன்றிகள்!


அ.மார்க்ஸ் கும்பலின் பித்தலாட்டம்: கட்டுக்கதையை உண்மையாக அறிவிக்கும் சதி!


1. விகடன் கும்பலின் கொலைவெறி: படுகொலையானது பத்திரிகை தர்மம்!


2. தர்மபுரி தற்கொலை: பித்தலாட்டக்காரர்கள் முகத்தில் கரிபூசிய எய்ம்ஸ் மருத்துவர்கள்!


3. கௌரவக்கொலை தடுப்புச்சட்டமும் இளவரசனும்: மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப்போடும் பித்தலாட்டக் கூட்டம்!


4. ஆடிட்டர் ரமேசும் தர்மபுரி இளவரசனும்: அன்று வன்னியர்கள், இன்று ரியல் எஸ்டேட் - கோயபல்சின் மறுவடிவமாகும் புர்ஜியாளர்கள்


5. இளவரசன் தற்கொலை: பா.ம.க.வை சிலுவையில் அறைந்தவர்கள் பாவங்களைச் சுமப்பார்களா? மருத்துவர் இராமதாசு வினா


6. தர்மபுரி இளவரசன் மரணம் தற்கொலையே: அதிர்ச்சியளிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை!


7. அம்பலமாகிப் போன கவின்மலரின் அண்டப்புளுகு: தற்கொலைக் கடிதம் இளவரசன் எழுதியதுதான்.


8. தருமபுரி: முற்போக்கு வேடதாரிகளே! இதையும் கொஞ்சம் படிச்சுப்பாருங்க: மூன்று லட்சம் கேட்டதே கலவரத்துக்கு காரணமா?


9. தர்மபுரி தற்கொலையும் வன்னியர்களுக்கு எதிரான சதிச்செயலும்.


10. சமூக மோதலாக மாற்றியது விடுதலை சிறுத்தைகள்தான்! - வன்னியர் கூட்டமைப்பு குற்றச்சாட்டு


11. போராட்டம் நடத்தும் உரிமை: முஸ்லிம்களுக்கு உண்டு, வன்னியர்களுக்கு இல்லை - தமிழ்நாட்டின் இன்றைய நிதர்சனம்!


12. தருமபுரி காதல்: வினவு முகத்தில் கரி பூசிய செல்வி. திவ்யா! அம்பலமாகும் புரட்சி பித்தலாட்டம்!


13. தர்மபுரி காதலும் பழிக்குப்பழி சாதிஒழிப்பும்: அடடா...இதுவல்லவோ தலித் புரட்சி!


14. தருமபுரி கலவரம்: சட்டவிரோத குழந்தைத் திருமணத்திற்கு இத்தனை பேர் வக்காலத்தா?


15. நாடகக் காதல் இருக்கிறது என்கிறார்கள் சேரனும் அமீரும்: உண்மைக் காதல் ஆதரவாளர்கள் எங்கே?

கருத்துகள் இல்லை: